Monday, May 10, 2010

அவளா இவள்

" காய் யூ ஆர் மிஸ்டர் சிவகுமார் வுரோம் ஜவ்னா "என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திடுகிட்டவனாய் யேஸ் என்றான் சிறிது நேரம் முழித்து கொண்டு இருந்த சிவாவை பார்த்து நான் தான் சந்திரவதனி உங்களுடன் படித்தனான் நினைவில்லையா என்று கேட்டா பிறகு தான் அவளை அடையாளம் காணமுடிந்தது சிவாவிற்கு.சிவா தனது கீதாவிற்கு சந்திரவதனியை அறிமுகபடுத்திவிட்டு மூவரும் கதைத்து கொண்டிருந்தார்கள் "சிவா நீங்கள் அப்படியே பாடசாலையில் படிக்கும் போது இருந்த மாதிரியே இருக்கிறீங்க தலைமையிர் தான் கொஞ்சம் நரைத்திருக்கிறது என்றவள் தான் மருத்துவராக அமேரிக்காவில் பணிபுரிவதாகவும் இரண்டுகுழந்தை இருப்பதாக கூறியவள் கணவரை பற்றி கூறவில்லை சிவாவும் அவனை பற்றி கேட்கவில்லை.விடைபெற்று கொண்டு சென்ற சந்திராவையே பார்த்து கொண்டிருந்தா சிவாவை அவனது மனைவி என்னப்பா அவளையே பார்த்து கொண்டிருக்கிறீங்க பழைய நினைவுகள் ஏதாவது ஞாபாகம் வருகிறதா என்று கிண்டலாக கேட்டவுடன் அவன் சுயநினைவுக்கு வந்தான்.
சந்திரா எங்களுடன் படிக்கும் போது இரட்டைபின்னலும் பிண்ணி ஆணைகோட்டை நல்லெண்ணேயும் வைத்து அந்த எண்ணேய் நெற்றியிலும் சாதுவாக படந்திருக்கும் ஒரு கறுத்த ஸ்டிக்கர் பொட்டும் வைத்து கொண்டு பிளீட்டட் அரைபாவடை சட்டை,பாட்டா செருப்பு போட்டு கொண்டு வரும் பொழுது அழகாக தான் இருக்கும் நானும் பார்த்து மனகோட்டை கட்டினது தான் இல்லை என்று சொல்லவில்லை என்றவனை பார்த்த மனைவி கீதா "இப்ப என்ன அவள் என்னைவிட வடிவாக இருக்கிறாளோ என்று சற்று பொய் கோபத்துடன் கேட்டாள்" உடனே சிவா இல்லையப்பா அப்ப பார்த்த சந்திராவிற்கும் இப்ப பார்த்தவுடன் வாயடைத்து போயிட்டேன்.
இப்ப தலைமயிரும் அழகாக வெட்டி சாதுவான மரூன் கலரும் அடித்து டீசார்ட்,ஜீன்ஸ் என்று வரும்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது அது தான் பார்கிறேன் அவளா இவள் என்று.

No comments:

Post a Comment