Thursday, September 29, 2011

ஒரே மனம்..

ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்..நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலின் புறதோற்றத்தில் பல மாற்றங்களை காணக்கூடியதாகவுள்ளது. தலை முடி நிறமாறுகிறது அதற்கு கறுப்பு சாயம் பூசினாலும் முகத்தில் விழும் சுருக்கங்கள் முடி நிறம் மாற்றப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.ஜம்பதிலும் ஆசை வரும் என கவிஞர்கள் சொன்னதை சாதாரண மனிதர்களும் கிளிப்பிள்ளை போல் சொல்கிறார்கள் ,ஆசை போனால்தானே வருவதற்கு ஒன்பது,பத்து வயதுகளில் தோன் றிய "அந்த ஆசைகள்"ஜம்பதை தாண்டியும் தொடர்கிறது இன்னும் எத்தனை வயது வரை அந்த ஆசைகள் தொடரும் என்பதை அந்த வயதை அடைந்தவர்கள்தான் எழுத வேண்டும். அப்படி எழுதுபவர்களும் உணமையை எழுதவேண்டும்,மற்றையவர்கள் எம்மைபற்றி தப்பாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் உண்மைக்கு புறம்பாக எழுதவோ கிறுக்கவோ கூடாது.இளம் வயதில "அந்த ஆசைகள் "வரும் பொழுது அடைய வேணும் என்ற ஒரு தீவிரவாதம் இருக்கும்,சிலர் அதை நிறை வேற்றுவார்கள் .அதற்கு காதல் என பெயரும் சுட்டிக்கொள்வார்கள் வேறு சிலரோ சமுகத்திற்கும் பெற்றோருக்கும் பயந்து தங்களை கட்டுப்படுத்துவார்கள்.சுய ஒழுக்கம் என்று சொல்லியும் கொள்வார்கள்.சந்தர்ப்பம் சூழ்நிலை இந்த சுய ஒழுக்கத்தை தோற்கடித்துவிடும்.சிலர் ஜம்பதை அடைந்தவுடன் தங்களது ஆசைகளை அடக்க வேண்டும் முயற்சி செய்வார்கள்,அதற்காக புறதோற்றத்தில் பல மாற்றங்களை செய்வார்கள் தங்களது பழக்க வழக்கங்களை கூட மாற்றிக்கொள்வார்கள். அநேகர் மது அருந்துவதை ,அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவார்கள்.பக்தி கூடும் ,கோயில் குளம் என்று செல்லத்தொடங்குவார்கள். என்னதான் புற தோற்றத்தில் மாற்றங்களை செய்தாலும் "அந்த ஆசைகள்" அவர்களை விடவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்கள் மற்றும் வேறு செயல்கள் மூலம் அறியகூடியதாக இருக்கும்.
4

Thursday, September 15, 2011

முற்போக்குவாதி

மார்க்ஸ் எனது
மானசீக குரு

மாவோ சித்தாந்தம்
மானிடத்தின் சிறப்பு

பெடல் கஸ்ரோ
பெருந்தலைவன் நவயுகத்தின்

செகுவாரா புரட்சியின்
செந்தணல்

அம்பேத்கார் தலித்களின்
அழியாச் சுடர்

நான் முற்போக்குவாதி
வேண்டாம் தனி மனித வழிபாடு

கவிக்கோர் கண்ணதாசன்
கதைக்கோர் சுஜாதா

கலைக்கோர் கமல்
கடவுளுகோர் பாபா

புலிகளின் தோல்விக்கு காரணம்
தனிமனித வழிபாடு

காந்தியவாதி

என் மதத்தை கேலி செய்தேன்
மாற்று மதத்தான் அரவனைத்தான்

என் இனத்தை குறைகூறினேன்
மாற்று இனத்தவன் புகழ்ந்தான்

எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன்
மாற்றான் முற்போக்குவாதி என்றான்

எம் போராளிகளை காட்டி கொடுத்தேன்
என்னை புலனாய்வாளன் என்றான்

எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன்
என்னை அமைச்சராக்கினான்

எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன்
அகிம்சாவாதி என்றான்

என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன்
என்னை சனநாயகவாதி என்றான்

என் இனத்தின் அவலங்களை
கண்மூடி பாராமல்
காதை பொத்தி கேட்காமல்
வாயை மூடி பேசாமல் இருந்தேன்
காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்
3
ipb.global.registerReputation( 'rep_post_667385', { domLikeStripId: 'like_post_667385', app: 'forums', type: 'pid', typeid: '667385' }, parseInt('3') );

துவக்கு

என்னை கைப் பிடித்தவன்
மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை
அதேபோல் நானும் எந்த வேறுபாடும்
பார்ப்பதில்லை
என்னை அவன் இயக்கினான்
நானும் இயங்கினேன்
தோளில் சுமந்தான்
நானும் அழகாக தூங்குவேன்
நண்பனுக்கு அறிமுகம் செய்தான்
அவன் என்னை பார்த்து வியந்தான்
ஒரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைஎதிரி என்றான்
இன்னோரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைதுரோகி என்றான்
மற்றொருநாள் இவன் வீழ்ந்தான்
நானும் வீழ்ந்தேன்,முனகினான்
மற்றொருவன் ஒடி வந்தான்
என்னை தூக்கினான்
நிறுத்தினான் அவன் முனகளை
இனியோரு நாள் இவனும் வீழ்வான்
நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன்
ஆனால் என்னை இயக்குபவன் .......

Friday, March 18, 2011

அங்கிள் கமரா இல்லைதானே குட்டி கிறுக்கல்

ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்கு கடைசியாக செல்வதும், வகுப்பறையைவிட்டு முதலில் வெளியில் ஒடி வந்து படிக்கட்டுகளுக்கு கீழ் ஒன்று கூடுபவர்களும் நாங்களாகத்தான் இருப்போம்.நாங்ககள் 11 ஆம் வகுப்பு மாணவர் குழுவை சேர்ந்தவர்கள்.நாங்கள் இப்படி படிகளுக்கு கீழ் ஒடி வந்து நிற்பதற்க்கு முக்கிய காரணம் பெண்கள் படிகளில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது எதாவது தெரியும் என்று பார்ப்பதற்க்குதான்.இதனால்தான் அங்கு எல்லோரும் ஒடி வருகிரார்கள் என்பது அன்றுதான் ஆசிரியருக்கும் தெரியவந்தது.சில பெண்களுக்கு பெடியன்கள் ஏன் கீழே வந்து நிற்கிறார்கள் என்று தெரிந்தமையால் படிகளில் ஏறும் பொழுது மிகவும் கவனமாக ஏறுவார்கள்.சில பெண்களுக்கு இது தெரியாது ஆனபடியால் அவசரப்பட்டு ஏறுவார்கள்.அவர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்று விட்டோம்.பிறகு நாம் எமது திருவிளையாடலை தொடங்கிவிட்டோம்..ஒருகுழுவினரை ஆசிரியருகு கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த விடயம் அதிபருக்கு சென்றது .அதிபர்மிகவும் கோபக்காரர்.ஒரு நாள் மறைந்துஇருந்து யார் படிக்குகீழ் வந்து நிற்கிறார்கள் என நோட்டம் விட்டார்.அதில் 6 பேர்வரை மாட்டுப்பட்டனர்.அந்த 6 பேரில் இரண்டு பேர் பாடங்களில் மிகவும் கெட்டிக்காரர்.மீண்டும் படிகளுக்கு கீழ் நீங்கள் கூட்டமாக நிற்பதை கண்டால் பாடசாலையை விட்டு விலத்தி விடுவேன் இதுதான் நான் உங்களை கடைசியாக இந்த இடத்தில் பார்ப்பதாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.அந்த அதிபரால் பலர் பாடசாலையை விட வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டதுண்டு.ஆனால் அவர்கள் படிப்பில் அவ்வளவாக கெட்டித்தனம் இல்லை,ஆகவே சிறு பிழைகள் விட்டாலும் உடனே அதிபர் அந்தமாணவர்களை பாடசாலையை விட்டு இடைநிறுத்திவிடுவார்.இந்த ஆறுவரில் இருவர் பாடங்களில் சுழியன்கள் என்றபடியால் மற்றவர்களுக்கும் தப்பித்து கொண்டார்கள். கதைகள் ,கட்டுரைகள் எழுதுவது,நாடகம் நடிப்பது போன்ற கலைத்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.அதிபரிடம் இருந்து சலுகை கிடைக்க அதுவும் ஒரு காரணம்அடுத்த இரு வாரங்கள் ஒருத்தரும் படிக்கட்டுக்கு கீழ் போய் ஒன்று கூடுவது இல்லை.3வது கிழமை சந்திரன் மட்டும் அந்த படிகட்டுக்கு கீழ் வருவான் வந்த வேகத்திலயே திரும்பி சென்றுவிடுவான். அவனை தொடர்ந்து சுதன்,ராஜ் இருவரும் வருவார்கள் அவர்களும் சந்திரனைப்போலவே வந்த வேகத்தில் திரும்பி போவார்கள்.ஆனால் இந்த மூவரும் ஒன்றாக் கூடுவதில்லை.மச்சான் நான் இன்றைக்கு பார்த்தன் என சந்திரன் வந்து ஒரு பெண்னின் பெயரை சொல்லி கதை விடுவான் நாம் எல்ல்லொரும் அவனை சூழ்ந்து கொள்வோம் சில கற்பனகளை நிஜம் போல் சொல்லுவான் நாமும் ஆர்வத்துடன் கேட்போம் அதனால் அவன் தான் ஒரு கிரோ என்று எண்ணிக்கொள்வான்.உயர்தர பரீட்சையில் எங்களை விட சந்திரனுக்கு நல்ல சித்தி கிடைத்தது.பல்கலைகழகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.பல்கலைகழகத்தில் தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு வந்து சொல்வான்.ஒரு தடவை பல்கலைகழகத்தில் பகிஸ்கரிப்பு நடந்த படியால் ஊரில் வந்து 3 மாதங்கள் வரை நின்றான்.அந்த காலகட்டத்தில் ஒரு பெண்னுடன் தகாத முறையில் உறவு கொள்ள முற்பட அவள் தனது இயக்க சிநேகிதியிடம் முறையிட்டாள்.இயக்கத்தினர் அவனை விசாரனக்கு என அழைத்து சென்றனர்.இதை அறிந்த பெற்றோர் செய்வது அறியாமல் தவிர்த்தனர்.இயக்க பெடியன்கள் என்னுடைய பிள்ளையை அடிப்பார்களோ,தட்டி கிட்டி போடுவாங்களோ என்ற பயத்துடன் தவித்தனர்.எங்களுடன் படித்த ஒருவன் இயக்கத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக எனது வீட்டை வந்து நடந்த சம்பவம் பற்றியும் சந்திரனை உடனடியாக விடுவிக்க எதாவது உதவி செய்யும்படியும் கேட்டனர்.எனது நன்பனின் உதவியால் சந்திரனை விடுதலை செய்யக்கூடியதாக இருந்தது.இருந்தாலும் அவனை இயக்கத்தினர் எச்சரிக்கை செய்துதான் விடுதலை செய்தனர்,இனிமேல் இப்படியான செட்டைகள் விட்டால் தன்டனை பாரதூரமாக இருக்குமென்ற தோனியில்சொல்லி அனுப்பிவைத்தார்கள்.இரண்டு நாட்களின் பின்பு கொழும்பு செல்ல ஆயத்தமானான்.புகையிரத நிலையத்திற்க்கு நான் தான் அழைத்துச் சென்றேன்.மச்சான் உன்டை ஆட்களிட்ட சொல்லு, துவக்கை கையில வைச்சுக் கொண்டு என்னை வெருட்ட ஏலாது என்று,நீ இருந்து பார் நான் உவங்களை கிழி கிழி என்று கிழிக்கிறனோ இல்லையோ என்று.பெட்டகளுடன் சேட்டை விட்டால் உவையளுக்கு என்னவாம்.அது என்னுடைய சுதந்திரம்......என்னை போல எழுதத் தெரிந்த வாசிக்க தெரிந்த ஆட்கள் உவையளிட்ட மருந்துக்கும் கிடையாது.என வீராப்பு பேசிய படியே விடை பெற்றான்.கொழும்பில் இருக்கும் பொழுதும் ,அதன்பிறகு புலம்பெயர்ந்த பின்பும் "சந்திரமுகி","சண்டியன்" என்ற புனை பெயர்களில் புலிகளுக்கு எதிராக பல கட்டுரைகளை வசைபாடியும்,திட்டியும் எழுதியிருந்தான்.ஆலையில்லா ஊரில் இழுப்பை பூ சக்கரை என்ற மாதிரி அவனது படைப்புக்களுக்கு ஒரு சிலரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.அவர்கள் இவனை இலக்கியவாதி என அழைக்க தொடங்க எனையோரும் அவனை இலக்கிவாதி என்றனர். இலக்கிய விழா,பட்டிமன்றம்,சிறுவர்களுக்கான கவிதை போட்டிகள், கட்டுரைபோட்டிகள் போன்றவற்றிக்கு பிரதமவிருந்தினராகவும் அழைத்தனர்.புலி எதிர்ப்பு எழுத்துதான் நவீன இலக்கியம் என்ற ஒரு எழுதாதசட்டம் தற்பொழுது தமிழிலக்கியவாதிகளிடையே காணப்படுவதால் இலங்கை ,இந்தியா போன்ற இடங்களிலும் அவன் பிரபலமடைந்தான்.திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்காக புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.வழமையாக என்னை கண்டால் "கலோ அங்கிள்"என ஒடி வந்து என்னுடன் கதைப்பாள் கீதா, ஆனால் அன்று அவள் என்னிடம் வரவில்லை,எனவே நான் அவளருகே கதைக்க சென்றேன்.கீதா 5ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே புலம்பெர்ந்தவள்,நல்லாய் தமிழ் கதைப்பா இப்பொழுது நல்ல இடத்தில் சட்ட ஆலோசகரா பணிபுரிகிறாள். மேற்கத்தைய பாணியில்தான் உடைகள் அணிவாள். நான் அவளுடன் கதைக்க தொடங்க அவள் என்னுடைய முகத்தை பார்த்து கதைப்பதைவிட என்னுடையை "பிறிவ் கேஸ்சை" மாறி மாறி பார்த்து கதைத்தாள்.புகையிரதம் வரவே இருவரும் ஏறிகொண்டோம்.எனது இருக்கைக்கு முன் ஒரு இடம் காலியாக இருந்தது.அதில் இருந்த கீதா அங்கிள் பீறிவ் கேஸ்க்குள் கமரா ஒன்றும் இல்லைத்தானே என சிரித்தபடி கேட்டாள்.நான் உடனே பீறீவ் கேஸை கீழே பார்த்தேன் ஒரு பக்கம் திறபட்டு இருந்தது ,உடனே எடுத்து பூட்டிவிட்டு ஏன் பிள்ளை அப்படி கேட்ட நீ என்று கொஞ்சம் ஆத்திரமாகவே கேட்டேன்.என்ன அங்கிள் நீங்கள் நேற்று நியுஸ் டி.வியில் பார்க்கவில்லையோ? பார்க்காவிடில் ......கொம் போய் பாருங்கோ எல்லாம் விளங்கும் என்றாள்.....வேலைத்தளம் சென்றவுடன் .கொம் அடிச்சேன் சகல விபரமும் வந்தது...இப்பொழுது வேலைக்கு செல்லும்பொழுது பீறீவ் கேஸ் கொண்டு செல்வதில்லை .....கை வீசம்மா கைவீசு ...........

மீகமுவ தெமுழு & ஒசி டமிழ் குட்டிக் கிறுக்கல்

அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்பார்கள்.யாழ்ப்பாணத்தில் பிரச்சனை வெளிநாட்டுக்கு போய் எதாவது தொழில் செய் என்று உறவுகாரர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சிங்களம் பேசத்தெரியாது ,ஆங்கிலமும் மட்டுமட்டு.ஒருமாதிரியாக கொழும்பு வந்து சேர்ந்தேன்.உறவுகாரருக்கு தமிழ் ,சிங்களம், ஆங்கிலம் நன்றாகவே தெரியும் .அவர் அந்த கிராமத்தில் அந்தோணி என்பவரை, எனது வயதை விட இரண்டு வயது அதிகம் இருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.அவனுக்கு தமிழ் தெரியும் 5ஆம் வகுப்பு தமிழில் படித்தவன் பிறகு தந்தையுடன் தொழிலுக்கு புறப்பட்டுவிட்டானாம்.ஆனால் அவனது இரண்டு இளைய சகோதரங்களும் சிங்கள மீடியத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.அந்தோணிக்கு சிங்களமும் தமிழும் நன்றாக பேசத்தெரியும்,பெற்றோருடன் தமிழிலும் சகோதரங்களுடன் சிங்களத்திலும் பேசுவான்.நாட்கள் செல்ல நானும் அந்தோணியும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.என்னை கடைகளுக்கு, கடற்கரை என்று கூட்டிச்செல்வான்.நானும் அவனுடன் செல்வது என்றால் பயமில்லாமல் செல்வேன்.என்னை விட உயர்ந்தவன் அகலமானமார்புடைய தேகம் பார்ப்பதற்க்கு ஒரு சண்டியன் போல தோற்றமளிக்கும்.தமிழ் படம் தான் அதிகம் பார்ப்பான் நானும் அவனும் சேர்ந்து பல தமிழ் படங்கள் பார்த்தோம்.சில படங்களை வாடகைக்கு எடுத்து வந்து வீட்டில் போட்டு பார்ப்போம்.அப்பொழுது அயலில் உள்ள வயோதிபர்கள் எல்லோரும் வந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள்.ஆனால் அவனது சகோதரர்களோ,எனைய இளையவர்களோ வரமாட்டார்கள்.சிங்கள படம் பார்ப்பதற்க்கு மட்டும் வருவார்கள்.அந்தோணிக்கு காதலியுமிருந்தால் அவள் சிங்களத்தில் படித்த படியால் அவனுடன் சிங்களத்தில்தான் உரையாடுவாள்.அவளின் பெற்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் ஆனபடியால் அவளுக்கு தமிழ் நன்றாக விளங்கும் பேசுவதற்கு கூச்சப்படுவாள்.அந்தோணியின் பெற்றோர்கள் அவனது காதலிக்கே அவனை கலியாணம் செய்து வைத்தனர்.கலியாணத்திற்க்கு நானும் சென்றிருந்தேன்.கலியாண வைபவம் கிறைஸ்தவமுறைப்படி நடந்தது.கிரிஸ்தவ பாதிரியார் சிங்களத்தில் சமய சடங்குகளை செய்தார்.வயது போனவர்கள் தமிழிலும் ,இளையவர்கள் சிங்களத்திலும் உரையாடி தங்களது கடமைகளை செய்து கொண்டிருந்தனர் .தமிழில் பேசிய பெரியவரிடம் போய் நீங்கள் தமிழில் உரையாடுகிறீர்கள் ஆனால் திருப்பலி பூஜை சிங்களத்தில் நடக்கிறதே என்று கேட்க,இப்ப எங்களுடைய பிள்ளைகள் எல்லாம் சிங்கள பாடசாலைக்குத்தான் போகிறார்கள்,அவர்கள் எங்களுடைய மதத்தை பின்பற்ற வேண்டும் என்றால் சிங்களத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் தம்பி அத்துடன் அவன்கள் சிங்களத்தில் படிச்சால்தான் இந்த நாட்டில முன்னுக்கு வரலாம் சமயத்தையும்நல்லாய் புரியமுடியும்..இல்லாவிடில் எங்களை மாதிரி கடல் தொழில் தான் செய்ய ஏலும்.கடல் தொழில் செய்யும் பொழுதும் கூட சிங்களம் தெரிந்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் .என்னுடய கலியாணமும் இந்த சர்ச்சில்தான் நடந்தது.அப்ப யாழ்ப்பாணத்தில் இருந்த சுவாமிதான் இங்க பூஜை செய்தவர் அவர் தமிழில்தான் செய்தவர் என்று தனது அந்த நாள் ஞாபகத்தை நினவுபடுத்தினார்.கலியாணம் முடிவடைந்து ஒரு கிழமையின் பின்பு அவனும் நானும் மீண்டும் வெளியே செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது அவனிடம் கேட்டேன் நீங்கள் தமிழா? ,சிங்களமா? .என்று. நாங்கள் தெமிழ என்று சிங்களவர்கள் சொல்லுறாங்கள்,தமிழர்கள் சொல்லினம் நாங்கள் சிங்களம் என்று . எனக்கு உது பெரிய பிரசனை மாதி தெரியல்ல கடலில மீன் அம்பிட்டால் சரி என்று சொல்லி சிரித்தான்.தனது சிங்கள நண்பனின் தென்னந்தோட்டத்தில் தென்னன்கள் குடிக்கலாம் வா என்று அழைத்து சென்றான்.அது இவர்களின் பக்கத்து கிராமம்.அவனுடைய மோட்டார் சைக்கிளில் சென்றோம்.கிறிஸ்தவ தேவாலயங்களும்,யேசுவின் சிலைகளும் நிறைந்த ஒரு பகுதியில் இருந்து பெளத்த விகாரைகளும்,புத்தரின் சிலைகளும் நிறைந்த அந்த கிராமத்திற்க்கு சென்றேன்.கிராமத்தின் எல்லையில் நண்பனின் தோட்டம்.பெரிய தென்னந்தோட்டம் அதன் நடுவில் அவனது நண்பனின் வீடு. என்னை நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் .அவன் சிரித்து விட்டு என்னுடன் சிங்களத்தில் எதோ கேட்டான் நான் முழித்தேன்.மீனவநண்பன் எனக்கு சிங்களம் தெரியாது என்று அவனிடம் சொன்னதும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டனர்.எனக்கு கருவாட்டு பொறியலும் தென்னங்கள்ளும் தந்தார்கள் கொஞ்சம் அதிகமாகவே குடித்தேன்.அதன்காரணமாக சில சிங்கள சொற்கள் வரத்தொடங்கின."அப்பே ஒக்கம எக்காய்" என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டேன்.வரும் வழியில் மீனவநண்பன் சொன்னான் நானும் நீயும் தமிழனாம் என்று சிங்களநண்பன் சொல்லுவதாக,உனக்கு தமிழ்வடிவாக தெரியாது பிறகு நீ எப்படி தமிழனாக முடியும்?நீங்கள் தமிழராக இருந்து சிங்களவராக மாறியவர்கள்,உங்களுக்கு ரோசம் ,மானம் ஒன்றுமில்லை,வீரனாக தமிழை பேசி தமிழில் படிச்சு முன்னுக்கு வர வேணும் அதைவிட்டு போட்டு சிங்களவனாக மாறிப்போட்டு தமிழன் என்று சொல்ல ஏலாது என வெறி இருந்த துணிவில் சொல்லிப்போட்டேன்.மீவ நண்பன் அதை பெரிசாக கண்டுகொள்ளவில்லை.வீடு வந்த பின்புதான் நான் பேசினது தப்பு என புரிந்தது.இருந்தாலும் மீனவநண்பன் அதை பெரிதாக எடுக்கவில்லை என அவன் நடந்து கொணட விதத்தில் புரிந்து கொண்டேன். அவன் தனது இருப்புக்காக கடலுக்கு செல்ல தேவையான பொருகளை தயார் செய்யதொடங்கினான்.நானும் எனது இருப்புக்காக வெளிநாடு செல்ல தேவையான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினேன்.சில மாதங்களின் பின்பு வெளிநாடு செல்ல வாய்ப்பும்கிடைத்தது.அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டேன்.அதன் பின்பு மீனவநண்பனுடன் எந்த தொடர்பும் வைக்கவில்லை.23 வருடங்கலின் பின்பு பணம் இருப்பதால் சிறிலங்காவுக்கு சுற்றுலா போகலாம் என்று வெளிக்கிட்டேன்.யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,நுவரெலியா,சென்றேன் .திரும்பி வரும் வழியில்" மீகமூவக்கு"(நீர்கொழும்பு)சென்றேன்.ஒருகாலத்தில் தூர நின்று பார்த்து ஏங்கிய 4 நட்சத்திர கோட்டலில் புக் பண்ணினேன்.முன்பு இந்த கோட்டலின் முன்பாக கடற்கரை ஒரமாக வெள்ளைகள் சூரிய குளியல் குளிப்பதை பார்த்து ரசித்த காட்சிகள் கண்முன் வந்து போயின.அடுத்த நாள் காலைநான் இருந்த அந்த கிராமத்திற்க்கு குடும்பம் சகிதமாக சென்றோம்.குடிசைகளாக இருந்த வீடுகள் எல்லாம் கல் வீடாக மாறியிருந்தன.நான் வாடகைக்கு இருந்த வீட்டை ஒரு மாதிரியாக கண்டுபிடித்து அழைப்பு மணியை அடித்தேன்.நவநாகரிக உடையில் ஒரு இளம்பெண் கதவை திறந்தாள். சிங்களத்தில் என்ன வேண்டும் என்று கேட்டாள்.நான் சிங்களதில் பதில் சொல்ல கஸ்டப்படுவதை புரிந்து கொண்டவள் ஆங்கிலத்தில் கேட்க தொடங்கினாள்.நானும் ஆங்கிலத்தில் அந்தோணியின் வீடு இதுதானே என்றேன்.அவள் ஒம் என்று பதில் அளிக்கும் பொழுதே அந்தோணியும், மனைவியும் உள் இருந்து வந்தார்கள்.என்னை தெரியுமோ என்று கேட்க இருவரும் முழிதுக்கொண்டிருந்தார்கள்.23 வருடங்களுக்கு முதல் இங்கு வாடகைக்கு இருந்த யாழ்ப்பணத்து தம்பி என்று சொன்னேன் உடனே உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.தனது பிள்ளைகளுக்கு சிங்களத்தில் எங்களை அறிமுகம் செய்து வைத்தான்.என்னுடனும் மனைவியுடனும் தமிழில் உரையாடினான்.சிங்கள பாரம்பரியத்துடன்,கிறிஸ்தவ மதக்கருத்துக்களால் பின்னப்பட்ட ஒரு மனிதனாக அவன் இருந்தான்.மகள் கோட்டலில் குமஸ்தாவாக பணிபுரிவதாகவும்.,மகன் பொலிஸ் சப் இன்பெக்டர் பயிற்சி முடித்து வந்துள்ளதாகவும் சொன்னான்.அன்று மதியசாப்பாடு தங்களுடன் சாப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து சகல கடல் உயிரினங்களையும் வைத்து ஒரு பெரிய விருந்தே தயார் செய்தார்கள்.மகனை அனுப்பி தென்னங்கள் வர வழைத்தான்.இருவரும் இறால் பொறியலுடன் தென்னங்கள் அடித்து மகிழ்ந்தோம்.எனது பிள்ளைகளும் அவனது பிள்ளைகளும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.பிள்ளைகளுக்கு தமிழ் தெரியுமோ என்றான்,விளங்கும் பேசமாட்டார்கள் என்றேன்.அவுஸ்ரேலியாவில தமிழில் படித்து என்ன பிரயோசனம்,எல்லா மனிதனும் நல்லாய் வாழ்ந்தால் சரிதான் .என அவன் கூறியது எனது கண்ணத்தில் அறைந்தமாதிரி இருந்தது.வாங்கோ சாப்பிடுவோம் என்று அடையாளத்தை இழந்த மீகமுவ தெமிழு , அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் ஒசித்டமிழை அழைத்தான்(நீர்கொழும்பு தமிழன் நிலைதான் இன்னும் 30 வருடகாலத்தின் பின்பு புலம்பெயர் தமிழருக்கும்)