Sunday, May 6, 2012

முப்படை தந்தான்

மும்மனி தந்தான் புத்தன்
முப்பால் தந்தான் வள்ளுவன்
மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
��ல்,படைத்தல்)
முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர்
முப்பெரும் தேவிகளுக்கும் 
முத்துறைகள் கொடுத்தனர்

மூவேந்தர்கள் ஆண்டனர்
ஆனாலும் தமிழ் தேசியம்
உலகமும் அறியவில்லை
தமிழனும் அறியவில்லை

முப்படை தந்தான் தலைவன்,
தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்
உலகமும் அறிகிறது....
 

பயங்கரவாதி

நந்திக்கொடி தூக்கினேன்
சைவக்காவலர் என்றனர்
சிவப்புக்கொடி தூக்கினேன்
புரட்சிவாதி என்றனர்
கட்சிக்கொடி தூக்கினேன்
அரசியல்வாதி என்றனர்
கண்டுகொள்ளவில்லை
ஜன நாயக உரிமை என்றனர்
தேசியக் கொடி தூக்கினேன்
பயந்தனர் ஆட்சியாளர்கள்
என்னை பயங்கரவாதி என்றனர்
பயந்தனர் அயலவர்
என்னை பிரிவினைவாதி என்றனர்

சும்மா கிறுக்கல்

சிங்கள பெரினவாதம்
சிங்க கொடியுடன்
சீறும் வரை

தமிழினத்தின் உரிமைக்கான‌
தகாம் 
தவிர்க்க முடியாதது

சிறுபன்மையினர் உலகில்
சிங்களம் நாம் என்று
சிறிலங்காவில் 
சிறுபான்மையினரை அழித்தால்_உன்

இருப்புக்கு நீ
இடும் புதை குழி

முள்ளிவாய்க்கால்
தில்லானவல்ல‌
திருப்புகழுமல்ல‌
சுபமும்மல்ல‌
நன்றி வணக்கமுமல்ல‌

ஊ சிவமயம்
ஆகும்

ஆயுதமா
அகிம்சையா என்பதை
தீர்மானிப்பது சிங்கள பெரினவாதம்...

ஒன்று-ஒன்பது

அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும்   அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார்.

சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டது.அவரின்  விருப்பப்படி செய்து கொண்டிருந்தேன். மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்.
சைக்கிள் ஒடும் பருவம் வந்தவுடன் தனியாக கோவிலுக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது .நான் நினைத்தபடி வலம் வரக்கூடியதாக இருந்தது .உள்வீதி ஒருதரம் வெளி வீதி ஒரு தரம் சுற்றுவேன் அம்மா கேட்டால் மூன்று தரம் இரண்டு வீதியையும் சுற்றினதாக பொய் சொல்வேன்..

மீசை அரும்பத் தொடங்க ஆசைகளும் வரத்தொடங்கின.சைக்கிளில் வீதி வலம் செல்லத்தொடங்கினேன். கோவிலுக்கு செல்வதாக சொல்லி போட்டு வேறு பல இடங்களுக்கு சென்று வந்தேன். 

பக்கத்துவீட்டு அன்ரியின் மகன் க.பொ.த உயர்தரத்தில் 2ஏ 2பி சித்தியடைந்து மருத்துவத்துறைக்கு தெரிவானார். அவர் ஒரு சைவப்பழம்.ஒவ்வோரு வெள்ளிக்கிழக்களில்   கோவில் தரிசனம் முடிந்தவுடன் உள்வீதியையும் வெளி வீதியையும் மூன்று தரம் சுற்றி  வருவார்.பரிட்சை காலங்களில் அதிக தடவை கோவிலுக்கு சென்றார்.
அவரின் அம்மாவும் ஒரு சைவப்பழம்தான் இருந்தும் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு அதிகம் செல்வார். ஒன்பது செவ்வாய்கிழமை தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் நடக்கும் என யாரோ அவருக்கு சொல்லியிருக்கினம்,மகனுக்கு பரீட்சை முடிந்தவுடன் அவர் ஒன்பது தடவை சென்றுவந்தார் .அவாவின் விருப்பப்படியே மகனுக்கு மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது.அந்த பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முதலே தெரியும் அவாவின் மகனுக்கு நிச்சம் மருத்துவதுறையில் அனுமதி கிடைக்கும் என்று எனேனில் அவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன்.

இரண்டு வருடங்களின் பின்பு நான் முதல்தடவை பரீட்சை எடுக்கும் பொழுது"தம்பி கோவிலுக்கு போய் தேங்காய் உடைத்துவிட்டு மூன்று தரம் உள்வீதி வெளிவீதி சுற்றி ,நல்லாய் கும்பிட்டு போட்டு வா" என அம்மா சொல்ல அதையும் செய்தேன்.ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்த கேள்விகளை வினாத்தாளில் தந்திடு என ஆண்டவனிட ம் மன்றாடிவிட்டு வந்தேன்.

பரீட்சையில் எனக்கு தெரிந்த கேள்விகள் வரவில்லை .வீட்டை வந்தவுடன் அம்மா "தம்பி சோதனை எப்படி ?நல்லாய் செய்தனியோ?மெடிசின் கிடைக்குமோ?"
"ஒம் நான் நல்லாய் செய்தனான் ரிசல்ட் வந்தவுடன் பார்போம்"என பதிலளித்துவிட்டு பெடியங்களுடன் ஊர் சுற்ற தொடங்கினேன்.



ரிசல்ட் வரும் வரை ஒரே கும்மாளம்தான்.கோயில் திருவிழாக்கள் என்றால் நாங்கள் எல்லோரும் அங்குதான் முழு நேரமும் நிற்போம். டியுசனில் படித்த பெண்கள் வருவார்கள்,அவர்களுடன் கதைக்க வேணும் போல இருக்கும் ஆனால் பயம் ,பார்த்து சிரிப்போம் என பார்த்து சிரித்தாலும் அவையள் ஒரு முறைப்பு முறைப்பினம் கற்புக்கரசிகள் பரம்பரைகள் என்ற நினைப்பில்,இருந்தாலும் சுதா ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .அவள் என்ன அர்த்தத்தில் சிரித்தாளோ தெரியவில்லை இன்றுவரை ,நான் நினைத்தேன் "அதுதான்"(காதல்) என்று. மச்சான் அந்த காய்  சுதா என்னை பார்த்து சிரிச்சவடா என்றேன் உடனே பெடியன்கள் "காய் உன்னை லவ் பண்ணுகிறா  விளையாட்டை காட்டு " என உசுப்பேத்தினார்கள்(உற்சாகப்படுத்தினார்கள்...கி...கி) அதன் பின்பு பெடியங்களும் சுதா என்று சொல்லி என்னை பகிடி பண்ணுவார்கள் எனக்கும் உள்மனதில் ஒரு கிளுகிளுப்பாய்யிருக்கும். 
"தம்பி தேவி அக்காவுக்கு கலியாணம் சரி வந்திட்டாம்,அவவுக்கு செவ்வாய் குற்றம் இருந்தது தொடர்ந்து ஒன்பது  கிழமை எங்கன்ட அந்தோனியார் கோவிலுக்கு போய் வந்தவ சரியா ஒன்பதாவது கிழமை மாப்பிள்ளை வீட்டார் கலியாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சு இருக்கினம்"மானிப்பாய் அந்தோனியார்  மிகவும் சக்தி வாய்ந்தவர் என அம்மா சர்டிபிகேட் கொடுத்தார்.அந்தோனியாருக்கும் செவ்வாய்கிழமைக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு விளங்கவில்லை இனியும் விளங்கப்போவதில்லை.


"அவன் நல்லாதான் படிச்சவன் ஆனால் பாஸ் பண்ண முடியாமல் போய்விட்டது அவனுக்கு அட்டமத்தில் சனியன் அதுதான் அவனை பாஸ் பண்ணவிடவில்லை,அடுத்த வருஷம் வேறு ஸ்தானத்திற்கு போறான்  அப்ப அவன் பாஸ் பண்ணிபோடுவான்" என அம்மா  அப்பருக்கு சொன்னது எனக்கு மனதில் ஒரு துணிவை தந்தது.

தெல்லிப்பளை அம்மன் கோவிலுக்கும் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்கிழமை சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என இன்னுமொரு கருத்து பரவதொடங்கியிருந்தது.அதையும் செய்யத்தொடங்கினேன்.படிப்பதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து 3 தரம் சுற்றுதல்,ஒன்பது தரம் போய்வருதல் என்ற கருத்தாதிக்கத்து க்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்...
கிறிஸ்தவ ,சைவ  மக்களின் கருத்தாதிக்க மையங்களின் கருத்துக்களுகு ஏற்ப நடக்கத் தொடன்கினேன்.அந்த காலகட்டத்தில் இந்திய கல்லூரிகளுக்கு பணத்தை கட்டினால் அனுமதி கிடைக்கும் என்ற நிலமை ,அநேகர் சென்று படிக்கத் தொடங்கினார்கள்,நானும் சென்றேன்.இந்தியாவுக்கு போகவேணும் என்றுதான்  துர்க்கை அம்மனுக்கு போய்வந்தனான் என்றேன் உடனே நண்பர்களும் நம்பினார்கள் சிலர் போகத் தொடங்கினார்கள்.

புலம் பெயர்ந்தவுடன் இப்படியான சுற்றல்கள்,ஒன்பது தடவை போய்வருதல் என்பன இருக்காது என எண்ணினேன் ஆனால் இங்கும் அது இருந்தது.எல்லோரும்  செய்யும் பொழுது நான் ஏன் விடுவான் என்று போட்டு நானும் செய்யத்தொடங்கினேன்.

"பிரஜாவுரிமை கிடைக்க வேணும் என்றால் ஓவ்வொரு நாளும்108 தரம் ராமஜெயம் எழுதும் உடனே கிடைத்துவிடும்" என்றார் ஒருவர்.தமிழன் என்றால் கேஸ் போட்ட எல்லோருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கும்
என்பது எழுதாத சட்டமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இன்னோருத்தர் சொன்னார் மல்கோவா சர்ச்சுக்கு போனால் வேளை கிடைக்கும் என அதையும் செய்தேன் .

புலத்தில் ஒரளவுநடுத்தர வர்க்கத்தின் ஆசையை பூர்த்தி யாக்ககூடிய அரச கட்டமைப்புக்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும்  அதியுச்ச  வசதிகள்(Top of the range)பெற வேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்கிறேன்...

பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆசையை நிவர்த்தி செய்ய எங்க என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கிறேன்.....

(யாவும் சுத்தகற்பனை ...ஒருத்தரையும் கிண்டல் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்) 

புனிதம்

வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன்.

நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள்.
பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர்.

நான் இருந்த இடத்திற்கு நன்பன் வந்து பார் திறந்திருக்கு வாங்கோ என்று அழைக்க எப்படா கூப்பிடுவான் என்று பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு அவன் கூப்பிட்டவுடனே எல்லோரும் எழுந்து மதுபானம் இருந்த மேசைக்கு சென்றோம்.

எல்லோரும் தங்களுக்கு தேவையான அளவில் ஊத்தி "கையில கிலாசு கிலாசு ஸ்கொட்ச்சு" என்ற தோரணையில் நின்று அடித்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் சுரேஸ் போராட்டத்திற்க்கு தன்னை அர்பணித்திருந்தவன் அவன் மீது ஒரு வித மரியாதை இருந்தது.நாங்கள் இப்படி தண்ணி அடிச்சு சந்தோசமாக வாழும் பொழுது மக்களுக்காக போராடியவன் என்ற எண்ணதில் அவனை மனம் புனிதனாக ஏற்று கொண்டுவிட்டிருந்தது.அதே எண்ணத்தில் அவனருகே சென்று,"எப்படிடப்பா இருக்கிறாய் கன காலமாக காணவில்லை"," "ஊருக்கு போய்விட்டு நேற்றுத்தான் வந்தனான் ஊர் அந்த மாதிரியிருக்கு ஒரு பிரச்சனையும் ஆர்மிக்காரன் நிற்கிறான் தான் ஆனாலும் சனத்துக்கு பிரச்சனை இல்லை நீ போரது என்றால் இப்ப போகலாம்".

10 தமிழனுக்கு ஒரு இராணுவம் என்றரீதியில் அங்கு அரச படைகள் இருக்கின்றன,அங்கு பிரச்சனை இல்லை இப்ப போகலாம் என சொல்லுகிறான் இவன் எல்லாம் என்னத்துக்கு ஆயுதம் தூக்கினான் எனக்கு புரியவேயில்லை .ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆயுதபலத்தோடு ஆளும் பொழுது அது ஒரு சாதாரண சூழ்நிலை என எப்படி இந்த புனித போராளியால் கூறமுடிகிறது.ஆயுதத்திற்க்கு பயந்து மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தால் உண்மையிலயே அது ஏற்றுகொள்ளக்குடியதாக இருந்திருக்கும்.புலத்திலிருந்து நாம் உயிர் ஆபத்தில்லாமல் ஊருக்கு சென்று திரும்பி வந்தால் தாயக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என்பது எப்படி இவனுக்கு புரியப் போகிறது.
எனக்கு அடித்த வெறியும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டது தொடர்ந்து அவனுடன் பேசுவதை தவிர்த்து கொண்டேன் .இன்னுமொரு கிலாஸ் எடுத்து அடிச்சேன் ,பழைய பாடல்கள் ஒலிக்க தொடங்கின,எழுந்து நடக்கவேணும் ,கையை காலை ஆட்ட வேண்டும் என்ற ஒரு உணர்வு வரதொடங்கியது.வேறு சிலர் அந்த உணர்வுக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள் .நானும் இணைந்து கொண்டேன்.சிலர் உடற்பயிற்சிசெய்த மாதிரி இருந்தது ஆனால் நான் மட்டும் வடிவாக ஆடுற மாதிரி எனக்கு தெரிந்தது.


அடுத்த நாள் அதே மண்டபம் எம்மவர்களின் பஜனை வழிபாடு நடைபெற்றது அதற்கு எனது சிறிய தாயாரை அழைத்து சென்றேன்.அவர் இந்த சாமியாரின் தீவிர ரசிகை,பக்தை,, எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம்.ஆண்கள்அதிகமானோர் வெள்ளை சேர்ட்,வெள்ளை காற்சட்டை அணிந்திருந்தார்கள் .நான் கறுத்த காற்சட்டை ,சாம்பல் நிற டிசேர்ட்டும் அணிந்து சென்றிருந்தேன்.
வாசலில் எல்லொரும் பாத அணியை கழற்றி வைத்திருந்தார்கள்.நானும் கழற்றி வைத்துவிட்டு சின்னம்மாவின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு அவரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.உடனே வெள்ளை சேர்ட் அணிந்திருந்த முதியவர் என்னை பார்த்து மற்ற பகுதியில் இருக்கும்படி சைகை காட்டினர்.பிறகுதான் புரிந்தது நான் இருந்த பகுதி பெண்கள் பகுதியாம் மற்றது ஆண்கள் பகுதியாம்.ஆண்கள் பகுதியிலிருந்து அந்த முதியவரை நோட்டம் விட்டேன்.அவர் பெண்கள் பகுதியை கவனித்து கொண்டிருந்தார் ஆனால் வாய் பஜனை பாடிக்கொண்டிருந்தது.
மண்டபத்திலிருந்த கதிரைக்கு முதல்மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது.பட்டால் போர்த்து பூவால் அலங்கரித்து தீபம் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இதே மண்டபத்தில் பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாதணிகளுடன் உள்ளே வந்து தண்ணி அடித்து சினிமா பாட்டு பாடி குத்தடித்தோம்.ஆனால் இன்று அதே இடம் புனிதமாக அறிவித்து பலதடைகளை வித்தித்தார்கள்.இக்குழுவினரின் புனித பிரதேசத்தில் புனிதமில்லாத நானும் ஒரு அங்கத்துவனாக பஜனைபாடி ,பிரசாதம் உண்டு வெளியேறினேன்.அந்த பக்தர்களில் எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.
இன்னோரு நாள் அதே மண்டபத்தில் கலியாண வைபவம் நடை பெற்றது மனைவியுடன் சமுகம்ளித்திருந்தேன்.வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது,வாசலின் இரு பக்கமும் சிறுமிகள் சந்தனம்,குங்குமம்,கற்கண்டு தட்டுகளுடன் வரவேற்றார்கள்.
சந்தனமும், குங்குமமும் நெற்றியை அழங்கரிக்க,கற்கண்டு வாய்க்கு ருசி அளிக்க ராஜ நடைநடந்து உள்ளே சென்றேன் .மேடையில் மணவறை பூக்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இந்து சடங்குகள் நடைபெறுவதற்கு ஏற்ற முறையில் புனித பிரதேசமாக இருந்தது.
மணவறையிலிருந்த மாப்பிள்ளையை எங்கேயோ கண்டமாதிரி இருந்தது ,உடனே யார் என அடையாளம் காணமுடியாமல் மனிசியிடம் கேட்டேன் .மனிசியும் தெரியாது எனதலையாட்டினாள்.
நீண்ட ஆராச்சியின் பின் அவர் வேலை செய்யும் இடம் தெரிய வந்தது, எனது சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.பலதடவை இவரை வேறு ஒரு பெண்னுடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்ததை கண்டது ஞாபகத்தில் வந்தது.அந்த முத்ததின் கவர்ச்சியால் அவர்கள் இருவரும் எனது மனதில் இடம்பிடித்திருந்தார்கள்.
நல்ல காதலர்கள் என எண்ணியதுண்டு. ஆனால் இன்று வேறு பெண்னுடன் கலியாண மேடையில்,அன்றைய அவர்களின் அந்த முத்தம் நிச்சம் அவர்களை அந்தரங்கம் வரை எடுத்து சென்றிருக்கும் இன்று வேறு பெண்னுடன் புனிதனாக மாப்பிள்ளை கோலத்தில் .....

அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர்
"உவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கு"
"அட எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்"
சிறிது நேரத்தின் பின்பு மணமக்கள் அர்ச்சகர் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். போனகிழமையும் இந்தாளின்ட காலில் சிலர் விழுந்து கும்பிட்டதை கண்டனான் .அநேகருக்கு அர்ச்சகர் என்றால் புனிதர்கள் என்ற நினைப்பு அவர்களும் மனிதர்கள் தப்பு தண்டவாளங்கள் செய்வார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கலியாண சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பு செய்து வீட்டை வெளிகிட்டேன்.

வானொலியில் பெண் அறிப்பாளர் நிகழ்ச்சி நடத்தினார்.சில பக்தி பாடல்கள் ஒலிபரப்பி குடும்ப வாழ்வு பற்றிய கட்டுரைகள் ,கணவன் மனைவிக்கு இடையில் அன்பு எப்படி உருவாகும் போன்ற நல்லவிடயங்களை தான் படித்த புத்தகத்திலிருந்து வாசித்து கொண்டிருந்தார்.இந்த பிள்ளை நல்ல கருத்துகள் சொல்லுது என்ற படியே வானோலியின் வோலியுமை கூட்டினேன்.ஒழுங்காக புருசனுடன் குடும்ப நடத்தாமல் வேறு ஒருத்தனுடன் ஒடிப்போட்டு இப்ப எங்களுக்கு அறிவுரை சொல்லுறாள் நீங்களும் அவளின்ட கருத்து நல்லம் என்று கேட்கிறீயள் ,நிற்பாட்டுங்கோ றேடியோவை கத்தினாள் என்ட மனிசி.
ஏன் ஒடினவள் என கேட்க வேணும் போல இருந்தது ஆனால் கேட்வில்லை வீண்வம்பு என்னத்துக்கு என தவிர்த்துவிட்டேன்.

"யாழ்களத்தில புனிதம் என்று ஒரு கிறுக்கள் புத்தன் என்ற ஒருத்தர் கிறுக்கியிருக்கார் .கிறுக்களை பார்த்தால் அந்த மனுசன் நல்லவர் போல இருக்கு நீங்களும் வாசியுங்கோ"

"அது நான் தான் நேற்று கிறுக்கினான்"

"அட சீ..................நாசமறுப்பு"


யாவும் கற்பனையே.....மீண்டும் சொல்லுகிறேன் இது கதையல்ல சும்மா எண்ணங்களின் கிறுக்கலே 

முருகா தி ஸ் டு மச்

சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது.
.நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன்.

திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சிரிப்புமட்டும்தான். கதைக்க மாட்டார்,என்னைவிட ஒருஇரு வயது குறைவாக இருக்கும் எனநினைக்கிறேன்.

"ஹய் அங்கிள் எப்படி இருக்கிறீங்கள்"

"நல்லாய்யிருக்கிறேன் என்ன இந்த பக்கம்"

"கோயில் கொடியேறுது தானே அதற்கு பலகாரம் சுட வேணும் என்று அம்மா கூட்டிக்கொண்டு வந்தவ ,பூங்காவனம் சிட்னி யூத்ஸ்தானே செய்யிறவையள் ,பூங்காவனத்திற்கு கட்டாயம் வாங்கோ"

"ஒம் ஒமொம் கட்டாயம் வாரன்" என்று போட்டு நான் என்ட வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டேன்.
பூங்காவனத்திருவிழா சிட்னி இளைஞர்களால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றது.சிட்னி முருகனுக்கு கொடியேறினால் சில இளசுகளுக்கும் ,கிழசுகளுக்கும் கொடியேறினமாதிரி உற்சாகத்துடன் நிற்பார்கள்.இந்த இளசுகளும் கிழசுகளுடன் சேர்ந்து பலகாரம் சுட்டு பொலித்தீன் பைகளிலிட்டு அதை அழகுப் பைகளில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்கள்.சாதரண திருமண வைபவங்களில் கொடுப்பதற்கு எப்படி அழகு படுத்துவார்களோ அது போல அழகு படுத்தப்பட்டிருக்கும்...திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அதை கொடுப்பார்கள்.
சிட்னியில் உள்ள தமிழ் வியாபார ஸ்தாபனங்களுக்கும் முருகனின் கொடியேற்றத்துடன் கொஞ்சம் வருமானமதிகமாகும்.அத்துடன் சிட்னி வாழ் முருகன் அடியார்கள் ஆண்கள் ,பெண்கள் எல்லோரும் பக்தி பரவசத்தில் இருப்பார்கள்.அநேக வீடுகளில் மரக்கறிதான் அந்த 10,12 நாட்களும்,அதிகமாக freshகாய்கறி தான் சமைப்பார்கள் ,frozen மரக்கறிகள் வாங்க மாட்டார்கள்.
அரச ஸ்தாபனங்களில் பணி புரிபவர்கள் 10 நாட்கள் லீவு போடுவார்கள் ,லீவுகள் எடுக்க முடியாதவர்கள் கொடியேற்றம்,தேர்,தீர்த்தம் போன்ற விசேட தினத்தின் பொழுது லீவு எடுப்பார்கள், லீவு எடுப்பது வேலைத்தளங்களில் கடினமாக இருந்தால் இந்த நாட்களில் முருக அடிகாளர் சிக்(sick) லீவில் நின்றாவது முருகனின் அருளை பெறுவார்கள்.பூங்காவனத்திருவிழா இரவில் நடப்பதால் லீவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை...
கொடியேற்றுவதற்கு வழமையாக குருக்களை தாயகத்திலிருந்து அழைப்பார்கள்.இந்தமுறை எங்களுடைய லோக்கல் ஜயர் கொடியெற்றம் செய்தார்..ஏன் இந்த முறை இப்படி என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது வந்தார் எங்கன்ட சகலகலா வல்ல கந்தர்.

"என்ன அண்ண இந்த முறை ஊரிலிருந்து குருக்கள் வரவில்லையோ"
அக்கம பக்கம் திரும்பி பார்த்து போட்டு சொன்னார் "உங்க பெரிய புடுங்கு பாடு நடக்குது ,அவுஸ் அரசு இனிமேல் குருக்கள் மாருக்கு விசா கொடுக்கமாட்டங்கள் என்று சொல்லி போட்டாங்கள்,கோவில் திருவிழாவுக்கு என வந்தவையள் ஒருத்தரும் திரும்பி போரதில்லையாம்,அதுதான் லோக்கல் குருக்கள் கொடியேற்றினவர்.இந்த முறையும் ஒருத்தர் வந்தார் அவரை கேட்டவையளாம் சிட்னியில் இருக்கும் குருக்கள்மாருக்கு பயிற்சி அளிக்க ,ஆனால் வந்த குருக்கள் எலாது என்று போட்டு திரும்பி போயிட்டாராம்"
பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.
ஓவ்வோரு திருவிழாவும் ஒரு குறிப்பிட்ட சப்பெர்ப்புக்கு (suburb)வழங்கப்பட்டிருக்கும் .அந்த சப்பெரப்பை விட நாங்கள் சிறப்பாக செய்ய வேணும் என்ற எண்ணம் ,போட்டி எல்லா சப்பெர்ப்காரருக்கும் இருந்தது. அதை சிலர் செயலில் செய்தும் காட்டியிருந்தார்கள்
.ஒருநாள் திருவிழாவில் பல பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

மதியம் சாப்பிடுவதற்கு சென்றிருந்தேன் வேஜிட்டேரியன் சிக்கன்,பன்னீர்,கயூ போன்ற விலையுயர்ந்த பொருட்களில் சமையல் செய்து அசத்தியிருந்தார்கள் ஊரிலும் இந்த மனப்பாங்கு இருந்தது. அந்த குழுவினர் எத்தனை கூட்ட மேளம் பிடிக்கிறாங்கள் அதைவிட நாங்கள் அதிகம் பிடிக்கவேண்டும்,அவர்கள் எத்தனை சப்பறம் கட்டுறாங்கள் அதைவிட அதிகம் கட்ட வேண்டும்.இப்படி பல போட்டி மனப்பான்மை திருவிழா உபயகாரிடையே இருந்தது. புலத்தில் இந்த போட்டி மனப்பான்மையை கண்டவுடன் ,சந்தனம் மின்சினால் தடவுங்கோடா...... என்ற பழ மொழிதான் எனக்கு ஞாபகத்தில் வந்தது.
தேர்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது சில பக்தர்கள்.தேங்காய் உடைத்தார்,வேறு சிலர் காவடி எடுத்தார்கள் ,இன்னும் சில பக்தர்கள் அடிகளித்தார்கள்,பிரதட்டடையும் செய்தார்கள் .நீயா நானா என்று போட்டி போட்டு ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தேர் வடத்தை பிடித்து அரோகரா சொல்லி இழுத்துகொண்டிருந்தார்கள்.ஊரில் முருகனுக்கு தேர் திருவிழாவில் என்ன எல்லாம் செய்து முருக அடியார்கள் முருகனை மகிழ்வித்தார்களோ அதைவிட அதிகமாகவே சிட்னியில் முருக அடியார்கள் செய்து முருகனை மகிழ்வித்தார்கள்.

திடிர் என அறிவித்தார்கள் உங்கள் உடமைகளை கவனமாக வைத்திருங்கள் திருடர்கள் ஜாக்கிரதை........

விலையுயர்ந்த காரில், விலையுயர்பட்டுச்சேலை அணிந்து, லொக்கரில் இருந்த நகைகளை போட்டு கொண்டு உன்னை தரிசிக்க வந்தால் நீ திருடர்களுக்கு அருள் கொடுகிண்றாயே.
சிட்னி முருகனுக்கு "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற அறிவிப்பு காதில் அதிக வருடங்களாக கேட்காத படியால் இந்த முறை திருட்டு பக்கதர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்டுத்தி போட்டார்...முருகா உன் விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா?என்னதான் இருந்தாலும் தி ஸ் டு மச்....this is too much lord murugaaaaaa........
வீதியில் கடலை விற்பவர்களும் ..திருடர்களும்தான் இல்லாத குறையாக இருந்தது.திருடர்கள் வந்துவிட்டார்கள் கடலைக்காரிதான் இல்லை அடுத்த வருடம் அதுவும் நடக்கலாம் .....

திருடர்கள் யார்? மக்கள் பலவித கருத்துக்களை வைக்கின்றனர்....