Friday, May 21, 2010

கெளரவம் (பிரஸ்டீச்)

இஞ்சாருங்கோ என்ன நித்திரையோ அல்லது மெடிட்சேசன் செய்றியகளோ என்று கேட்டபடியே மனைவி சூடான தேத்தனியுடன் சுரேசிற்கு அருகில் வந்து அமர்ந்தாள்.ஒருத்தன் கண்ணை மூடி கொண்டு ஏதாவது பற்றிய் யோசித்து கொண்டு இருந்தாள் உடனே மெடிட்சேசன் என்று நீங்கள் முடிவெடுத்து என்னுடைய "கஸ்பன்ட்" மெடிடேட் பண்ணி கொண்டிருக்கிறார் என்று நாலு பேருக்கு சொல்லுறது இப்ப ஒரு பஷனா போச்சு.உமக்கு தெரியும் எனக்கு உந்த மெடிட்சேசன்,தியானம்,யோகம்,ஞா�������ம் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது.கண்ணை மூடினால் நித்திரை வரும் அதில சில கனவுகள் வரும் அந்த காலத்தில ஒரே படம் பார்க்கிறனான் அந்த பாதிப்பில் கனவில் சிறிதேவி,சிலுக்கு என்று வந்து போவீனம்.போதும்..போதும் நிற்பாட்டுங்கோ உங்கள் கனவு புராணத்தை இஞ்சாருங்கோ இந்த வார "ரியலெஸ்டட்" புத்தகம் பார்த்தனியளோ உயர் குடி ஏரியாவில் ஒரு வீடு போட்டிக்கிறாங்கள் "பிராண்ட் நீயு கோம்" இன்றைக்கு ஒரு மணிக்கு "ஓபின் கவுசாம்" போய் பார்போம் வாங்கோ என்றாள் மனைவி சுதா.ஏன் அப்பா இந்த வீட்டிற்கு என்ன குறைச்சல் நல்ல பெரிய வசதியான வீடு தானே இது கடைகள்,பள்ளிகூடம்,ரெயில்வேசேஷன்,பஸ்ஸாண்ட் எல்லாம் பக்கத்தில தான் இருக்கு போதாகுறைக்கு எங்களுடைய ஆட்கள் கனபேர் இருக்கீனம்,தமிழ் கடை,தமிழ் சாப்பாட்டு கடை எல்லாம் இருக்கு பிறகு ஏன் அந்த இடத்திற்கு போய் வீடு வாங்க வேண்டும் என்று சொல்லுகிறீர்?எல்லாம் இருக்கு தான் ஆனால் "பிரஸ்டீச்" (கெளரவம்) இல்லை.அந்த ஏரியாவில் இருந்தால் கெளரவம் தானாகவே வரும் நாலு பேருடன் கதைக்கும் போது அந்த "சப்பேர்ப்" பேரை சொன்னாலே "பிரிஸ்டீச்" தானாகவே வரும் அதுமட்டுமில்லை பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி என்று வரும் போது ஒரு தாரதரமும கூடும் என்றாள் சுதா.எனக்கும் ஒரு ஆசை இருக்குது தான் உப்படியான ஏரியாவில் வீடு வாங்க வேண்டும் என்று சரி வாரும் போய் பார்போம் ஆனால் ஒரு கண்டிஷன் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது என்றாள் எங்களுடைய தமிழ் ஆட்கள் பாவிக்கிற "டோயாட்டா" கம்பனிகாரனின்ட காரில ஓடி திரியமாட்டன் எனக்கு புது BMW கார் வேண்டும் அப்படி புதுசு வாங்குவது என்றால் வீட்டை போய் பார்போம்.என்ன நீங்கள் BMW என்று நிற்கிறீங்கள் இவன் தம்பி சாய் தனக்கு "ஸ்போர்ட்ஸ்" கார் வேண்டும் என்று அடம்பிடித்த மாதிரி இருக்கு.சரி சரி போடுற லோனில எல்லாத்தையும் சேர்த்து வாங்குவோம்.சிட்னி முருகனின் தலையில பாரத்தை போட்டுவிட்டு போய் ஆக வேண்டியதுகளை பாருங்கோ என்றாள் சுதா.அடியே சும்மா இருக்கிற அந்த மனிசனின்ட தலையில ஏன் பாரத்தை போடுகிறாய் என்ற தலையில் பாரம் போட்டு இருக்கு அதை பற்றி ஒரு சிந்தனையும் இல்லை சிட்னி முருகனிண்ட தலையில் பாரத்தை போட சொல்லிவிட்டு நீ உண்ட "பிரஸ்டீட்" கனவை நனவாக்க நிற்கிறாய்.ஊரில வேலை செய்து கொண்டிருக்கும்போது நல்லூரு திருவிழாவிற்கு கொழும்பில் இருந்து வரும்சனம் ஆங்கிலத்தில சாமி கும்பிடுது என்று கொழும்பிற்கு போவோம் என்று கொழும்பில வந்து இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் பிள்ளைகள் வடிவாக ஆங்கிலத்தில் கதைக்கிறார் என்று வெளிநாடு போவோம் என்று நாங்களும் வெளிநாட்டிற்கு ஓடி வந்தோம்.இப்ப என்னவென்றால் அந்த வெளிநாட்டில் அதி உச்ச கெளரவமான இடம் எது என்று தேடி அதில் குடிபுக அலையிறோம்.சரி..சரி வாரும் வீட்டையும் பார்த்து அந்த BMW காரையும் பார்த்துபோட்டு வருவோம்.வரும்வழியில் முருகனிட்ட போய் பேர்மிசன் வாங்கி கொண்டு வருவோம்.என்ன நக்கலா?முருகனிண்ட எப்படி பேர்மிசன் எடுக்கிறது என்றாள் சுதா.வழமையாக சொல்லுவீர் போய் நின்று கும்பிட்டேன் ஜயர் நான் நினைத்த பூவை கையில தந்தார் அப்படி இப்படி என்று ரீல் விடுவீர் அப்படி ஒரு ரீலை விடவேண்டியது தானே அது தான் பேர்மிஷன்.வாழ்கையில் முக்காள்வாசி ரீல் தானே.

Monday, May 17, 2010

ஆண்டியான கந்தர்..

பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார்.தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ?சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏலாது என்று சொல்லிபோட்டன்.புது கார் "டோயடா லேட்டஸ் மொடல்" ஆனால் ஜப்பான்காரனின் காரில் எனி மேல் ஏறமாட்டன் என்று போட்டேன்.மருமகன் சொன்னார் தன்னுடைய "வோ வீல் டிரைவில்" கொண்டு போய் விடுறன் என்று அதுவும் ஜப்பான் காரனின்ட தானே அதனால் அதிலையும் ஏற ஏலாது என்று விட்டேன்.பேரன் சொன்னான் தன்னுடைய "போஸ்ஸில்"கூட்டி கொண்டு விடுறன் என்று ஆளை விடுறா சாமி என்று போட்டன்.இப்படி தான் போன கிழமை அவனின்ட காரில ஏறினான் தாத்தா தமிழ் பாட்டு போடட்டோ என்று அது உங்களுடைய ரகுமானின் பாட்டு என்று சொன்னான் நானும் ஓம் போடடா தம்பி என்றேன்.அவனும் "வுல் வொலியூமில" போட்டு விட்டான் என்ற ஒரு செவிப்பறை அன்றைக்கு கேட்காமல் விட்டது தான் அதுக்கு பிறகு இன்னும் அது சரி வரவில்லை.அன்று அவன் ஓடின ஓட்டத்தில் என்ற உயிர் போயிருக்க வேண்டும் ஆனால் அந்த முருகன் தான் காப்பாற்றி வைத்திருக்கிறான் அன்றிலிருந்து அவனின் காரில் ஏறுவதில்லை என்றூ முடிவெடுத்து விட்டேன்.அண்ணை களைத்து போயிட்டியள் போல இருக்கு வாங்கோ பின்னுக்கு போய் "டீ" குடிப்போம் என்று கேட்டான் சுரேஷ்.தம்பி உனக்கு விஷயம் தெரியாதோ உயவள் "டில்மா" தேயிலை வைத்திருக்கீனம் நான் குடிக்கமாட்டன் "டீ" குடிக்காமல் சும்மா இருந்தாலும் இருப்பேன் ஆனால் உவங்களின்ட சிறிலங்கா தேயிலையை மட்டும் குடிக்கமாட்டேன் என்றார் கந்தர்.சரியான குளிராக இருக்கு ஏன் "ஜாக்கேட்" போடாமல் வந்தனியள் இந்தாங்கோ என்னுடைய "ஜாக்கேட்" இதை போடுங்கோ நான் மற்ற "ஜாக்கேட்" காருகுள் இருக்கு எடுத்து கொண்டு வாறன் என்று சுரேஷ் தனது "ஜக்கேட்டை" கழற்ற போனான்.தம்பி இந்த "ஜாக்கேட்" எல்லாம் சீனாகாரன் தான் செய்கிறான் அது தான் நான் போடாமல் வந்தனான்.நீர் போட்டிருக்கிற இந்த "ஜாக்கேட்" சீனாகாரனினது நான் சீனாகரானின்ட சாமாங்கள் ஒன்றும் இப்ப பாவிப்பதில்லை என்று நடுங்கி கொண்டே பதில் கூறினார்.சுரேஷ் கந்தரை மேலும் கீழுமாக பார்த்தான் இதை அறிந்த அவர் என்ன பார்க்கிறீர் இந்தியாகாரனின் வேஷ்டியும்,சேஷ்டும் உடுத்திருக்கிறன் என்றோ?அது எங்களிண்ட தமிழ்நாட்டில தான் தயாரித்திருக்கிறார்கள் அது தான் உடுத்திருக்கிறன்.அப்ப கோவணம் எந்த நாடு என்று கேட்க வேண்டும் போல் இருந்தது சுரேஷியிற்கு முதியவர் என்ற காரணத்தினால் ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டான்.ஆனால் சுரேஷின் மனதில் முருகனின் ஆண்டி கோலத்தில் கந்தர் தென்பட்டார்.கந்தர் உந்த புறகணிப்பு கொள்கையை கடைபிடிப்பார் எனில் ஆண்டி ஆவதும் நிச்சயம்.

உந்தவயசில...

அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிகுள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடபடதான் செய்தது.இப்ப ஜம்பதொன்பது வயசு தானே என்னும் அறுபது ஆகவில்லையே என்று மனதில் எண்ணி கொண்டான்."உந்த வயசு" என்ற வார்த்தையால் அவன் பல தரம் பாதிக்கபட்டுள்ளான்.அவனுக்கு பத்து வயது இருக்கும்,பாடசாலையால் வீடு திரும்பும் போது பக்கத்து வீட்டு அக்காவுடன் ஒரு பெடியன் கதைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அதை அம்மாவிடம் சொல்ல,அம்மா சந்நிநாதமே ஆடிவிட்டாள் உந்த வயசில உப்படியான கதைகள் ஒன்றும் தேவையில்லை என்று அதட்டி கொண்டு இருக்கும் போது அப்பாவும் அவ்விடதிற்கு வரவே அம்மா அவரிடம் விடயத்தை சொல்ல அவர் தனது பங்கிற்கு கன்னத்தில் இரண்டு அடி போட்டு ஓடி போய் புத்தகத்தை எடுத்து படி உந்த வயசில உதுகள் எல்லாம் உனக்கு தேவையில்லாத கதை என்றார்.அவன் அதன் பிறகு காதல் ஜோடிகளை கண்டால் தான் மட்டும் பார்பான் வீட்டில் சொல்வதில்லை இன்று வரை.உயர் வகுப்பு படிக்கும் போது சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது அவளது அண்ணணுக்கு தெரியவரவே இவனை கூப்பிட்டு உந்த வயசில என்ன காதல் வேண்டி கிடக்கு இனிமேல் தங்கச்சியுடன் சேட்டை விட்டியோ கை,காலை முறித்து விடுவேன் என்று திட்டியது இன்றும் அவனது நினைவுகளிள் வந்து சென்றன.பல்கலைகழகத்தில் காதலியின் கைகளை பிடித்த போது உது எல்லாம் இப்ப வேண்டாம் கல்யாணதிற்கு பிறகு தான் என்று காதலி ஒதுங்கியது,உந்த வயசில இதுகளிள் நாட்டம் காட்டினோமோ படித்து பட்டம் எடுத்த மாதிரி தான் இருக்கும்,அடுத்த மாதம் நடக்கின்ற இறுதி ஆண்டு பரீட்சையை வடிவாக செய்ய வேண்டும் போய் படியுங்கோ என்று செல்ல அதட்டலுடன் சென்றவள் பரீட்சை முடிந்து மறுகை வெளிநாட்டு மாப்பிளையை கரம்பிடித்து இவனது கைதனை உதறி சென்றது இவனது மனதில் இழையோடியது.மனைவியிடம் எல்லாம் பொம்பிளைபிள்ளைகளாக இருக்குது ஒரு ஆம்பிளை பிள்ளை பெற்றால் என்ன என்று கேட்க ஜயோ! உந்த வயசில உது வேண்டி கிடக்கு,"கப்சியூல்,கார்சீட்" உதுகள் எல்லாம் பூட்டி பழையபடி அ - ஆ வில இருந்து தொடங்க வேண்டும் சும்மா இருங்கோ என்று மனைவி அதட்டியது அவனக்கு நினைவில் வந்தது.கொஞ்சம் "ஸ்டைலாக" பெடியங்கள் போல் வெளிகிட்டால் உந்த வயசில உவருக்கு உந்த மைனர் உடுப்புகள் தேவையோ என்று சிலர் பேசுவதை கேட்டே அலுத்து விட்டது.ஆத்மீகத்தில் நாட்டம் கொண்டு தியானம்,யோகம் என்று கண்ணை மூடி கொண்டு இருக்கும் போது உந்த வயசில உதுகள் எல்லாம் உங்களுக்கு ஏன்?பேசாமல் இருங்கோ உதுகள் செய்வதிற்கு இன்னும் காலம் நேரம் இருக்கு நடக்க வேண்டிய அலுவல்களை பாருங்கோ.உதுகளை மறப்பதிற்காக கணணி உலகில் கருத்துகளம் என்று வைத்திருக்கிறார்கள் அங்கு என்று ஏதாச்சும் எழுதுவோம் என்று பார்த்தால் உந்த வயசில உவரிண்ட கருத்துகளை பாருங்கோ வயசிற்கு ஏற்ற கருத்துகளை எழுங்கோ என்று சிலரின் நையாண்டிகள் முதல் மனசியின் வசைபாடல் வரை கேட்ட சுரேசிற்கு மனித வாழ்க்கை வயசிற்கு தடைகளை மனிதனே வித்திக்கிறான் என்று நினைத்தபடியே அடுத்த வயசிற்கு என்ன தடையாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான்.உந்த வயசில,உந்த நேரத்தில உவருக்கு உந்த குட்டிகதை தேவையோ என்று வாசகர்கள் நீங்கள் நினைக்கிறது விளங்குது.

சங்கத்தலைவனாக வேண்டும்

காலையில் எழுந்தவுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நடப்பதுதான் முதல் வேலை.இப்படி மனுசன் நடக்கும் பொழுது மனுசனின் மனம் ஒரு இடத்தில் நிக்காமல் எந்த நேரமும் அலைபாய்ந்தபடியே இருந்தது.இப்பகொஞ்ச காலமாக தலைவராக வேண்டும் என்ற ஆசை மனதைப்போட்டு குழப்பி கொன்டே இருந்தது. இந்த ஆசை அவருக்கு வர ஒரு காரணம் அவரின்ட மனிசிதான்,ஒரு நாள் ஒருநிகழ்ச்சிக்கு போன பொழுது,அங்கு தலைவர் பேசின பேச்சை பார்த்துபோட்டு கனகரின்ட மனிசி,"இஞ்சாருங்கோ அந்த மனுசனுக்கு உங்களை விட 5வயசு கூட இருக்கும் பார்க்க தெறியவில்லை,மேடையில் மூச்சு வாங்காமல் நல்லாய் கதைக்கிறார் பார்த்திங்களோ " என்று எப்ப மனிசி கமலா சொல்லிச்சோ அன்றில் இருந்து அவருக்கு எதாவது சங்கத்தில் தலைவராக வேண்டும் என்று தீர்மானிதுக்கொன்டார்.கமலா சொன்ன மாதிரித்தானே மற்ற பெண்களும் ,தான் தலைவராக இருந்தாலும் சொல்லுவார்கள் என்ற நினைப்பு வரவே எதாவது சங்கத்தில தலைவர் ஆக வருவது என்று சபதமே எடுத்து விட்டார்.் கனகரின் தலைவர் ஆசைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு.புலத்தில் வெளிவரும் இலவச தமிழ்பத்திரிகையில் தனது படம் வரும் என்பதுதான்.படித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தலைவராக வரலாமோ என்று யோசித்து பார்த்தார்,ஏற்கனவே தன்னையும் விட இளசுககள் தலைவராக இருப்பதால் ,சீ இந்தபழம் புளிக்கும் என்று ஒதுங்கிவிட்டார்.பிறந்த ஊரின் பெயரில் சங்கம் வைக்கலாம் என்று யோசித்து பார்த்தார்,ஊரில் இருக்கும் பொழுதே ஊர்காரங்களுடன் பகை இந்த லட்சனத்தில் ஊர்சங்கத்தில் வாய்பில்லை என்று அந்த யோசனையையும் ஒதுக்கிவிட்டார் ்புலத்தில் வெளிவரும் இலவச பத்திரிகையில் கதை, கட்டுரை எழுதி எழுத்தாளர் சங்கத்தலைவனாகலாம் என்று எண்ணியவருக்கு,அதற்கு தலைவராக வர வேண்டும் என்றால் இலக்கணம்,இலக்கியம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதையும் ஒதுக்கிவிட்டார்.தற்பொழுது வசிக்கும் "சப்பேர்ப்பின்"பெயரில் சங்கம்வைக்கலாம் என்று யோசித்து பார்த்தார்,அந்த சங்கத்தில் அங்கத்தவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அதனால் தனக்கு பிரபல்யம் கிடைக்கமாட்டுது என்றுஅதையும் கைவிட்டுவிட்டார்.இப்படியே யோசித்து கொண்டு நடந்தவருக்கு நேரம் போனது தெரியவில்லை,நேரே வீடு சென்று காலை உணவு சாப்பிட்டுவிட்டு,பத்திரிகை எடுத்து படிக்கதொடங்கினார்.மனம் தலைவர் ஆசையை ஞாபகப்படுத்திகொன்டே இருந்தது. பத்திரிகையை படிக்க மனம் இல்லாமல் யோசித்துகொண்டு இருப்பதை கண்ட கமலா "இஞ்சாருங்கோ என்ன கப்பல் கவுண்டமாதிரி யோசிக்கிறியள்" என்றால்.அது ஒண்ருமில்லை சும்மாதான்,பேப்பரிலும் செய்திகளை பெரிசா காணவில்லை அதுதான் என்றார்.இனையத்தில எதாவது செய்திகள் போட்டு இருப்பாங்கள் போய் பாருங்கோவன் என்று மனைவி சொல்ல ,இனையத்தில் செய்திகளை படிக்க தொடங்கினார்.செய்திகளை படிக்கும் பொழுது ஒரு யோசனை வந்தது" கணனி புனை பெயர் எழுத்தாளர் சங்கம்" ஒண்றை ஆரம்பிக்கலாம் என்று ,இதன் முலம் உலகம்புராகவும் தனது பெயர் பிரபல்யம் ஆகும என்ற மகிழ்ச்சியில் அதற்க்குறிய முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் கனகர்

எனக்கும் பொன்னாடை போர்த்திட்டாங்க

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர்.இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்புகளை தொடர்ந்து செய்து சொந்த பணத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படைப்புகளை புலம்பெயர் இளைஞர்கள் தங்களது டாக்டர் பட்ட ஆராச்சிக்கு எடுத்து ஆராச்சி செய்ய வேண்டும் இது தான் எனது ஆசை என்று பிரபல எழுத்தாளர் தனது பேச்சை முடித்து கொண்டார்.அடுத்து சிட்னி கவிபேரசு முனியான்டி கவிமழை பொழிவார் என்றவுடன் அரங்கே ஒரே ஆரவாரம்.சுத்த தமிழில்சுய ஆக்கங்களைசுயமாக எழுதிசுய தம்பட்டம் இல்லாமல்சூப்பராக வெளியிடும் சுரேசிற்கு எனது வாழ்த்துக்கள்.என்றவுடன் நித்திரை கொண்டிருந்த எல்லாரும் கையை தட்ட தொடங்கினார்கள் அதில் யாழ்கள வயபோதிபர் ஒருவரும் அடக்கம்.தொடர்ந்து நீங்கள் படைப்புகளை படைக்க வேண்டும் அதற்கு என்னையும் அழைக்க வேண்டும் நான் இங்கு வந்து கவி வடிக்க வேண்டும்.எனக்கு தொடர்ந்து சுரேஷை பற்றி கவி வடிக்க ஆசை இருந்தாலும் நேரமின்மையால் இத்துடன் எனது கவிபுலம்பலை நிறுத்து கொள்கிறேன்.மீண்டும் மேடையில் ஆரவாரம்.அடுத்து புத்தகத்தை வெளியிடுவதிற்காக சிட்னி பிரபல எழுத்தாளர் புத்தனையும் அதை பெற்று கொள்வதிற்கு சிட்னியில் பிரபல தொழிலதிபர்..(கடலை அதிபர்) சுண்டலராஜா அவர்களையும் அழைக்கின்றோம்.சுண்டல ராஜா இப்போது மேடையில் சுரேஷை பற்றி பேசுவார் இந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கு எனது சொத்து யாவற்றையும் விற்றாலும் ஈடாகாது எண்டு கூறி முடிபதிற்குள் அரங்கில் இருந்து யாரோ "ரீல்" என்று கத்தும் சத்தம் கேட்டது.எழுத்தாளர் சுரேஷ் அவர்களை நன்றியுரை வழங்குமாறு மேடைக்கு அழைக்கின்றோம் என்றவுடன் சுரேஷ் தனது பட்டு வேட்டியின் அகலகரை தெரியுமாறும் சால்வையை படையப்பா ஸ்டைலில் போட்ட வண்ணம் மைக்கிற்கு முன்னால் வந்து மேடையில் கூடி நிற்கும் மக்களை பார்த்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திய சகலருக்கும் நன்றி நன்றி நன்றி..நன்றி.என்ற கூற தொடங்க பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த மனிசி என்னப்பா நித்திரையில் கத்துறியள் விடிந்து போச்சு எழும்பி வேலைக்கு போற அலுவலை பாருங்கோ அதை விட்டிட்டு சும்மா கனவில மிதக்க வேண்டாம் அது சரி இப்ப கனவில் எவள் வந்தவள் அவளுக்கு என்னதிற்கு நன்றி சொன்னீங்கள் என்று சுரேஷின் உயிரை எடுக்காத குறை.அவனோ நித்திரை மயக்கத்தில் படுக்கும் போர்வையை பொன்னாடையாக நினைத்து போர்த்தி கொண்டு ராஜ நடை மலசலகூடத்தை நோக்கி நடந்தான்.

அப்புகுட்ஸ்

இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார்.

எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங்கத்தை தேடுறன்.

சிறிது அமைதிக்கு பின் இருக்குது இருக்குது நான் தான் நேற்று பார்த்து விட்டு கட்டிலிற்கு கீழே வைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லி கொண்டு இரண்டு பஞ்சாங்கத்தோடு கனகரின் பக்கத்தில் வந்து இருந்தாள்.என்ன இரண்டு பஞ்சாங்கத்தோட வாறீர் என்ற கனகரை பார்த்து ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றது திருகணித பஞ்சாங்கம்.இரண்டு பஞ்சாங்கத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளும் நல்ல நேரமும் எடுத்து விட்டன்.இதை ஒருக்கா சாத்திரியிட்ட கொண்டு போய் சரியா என்று உறுதிபடுத்த வேண்டும்.

பெரிய உலக தலைவர்கள் எல்லாம் கிரகங்கள் இப்படி இருக்கும் போது தான் பிறந்தவர்கள்.இந்திரா - சந்திரிக்கா - நேரு - காந்தி -புத்தன் போன்ற உலகதலைவர்கள் நாளும் நேரமும் சரி எனி என்ன பெயர் வைக்க வேண்டும் நீங்கள் ஒருக்கா கம்பியூட்டரில போய் "இந்தியன் பேபி நேம்ஸ்" என்று அடியுங்கோ பெயர்கள் செலக்ட் பண்ண நான் வாறன்.

பெயர் நல்ல தமிழ் பெயராக அத்துடன் எங்களின்ட மனித தெய்வத்தின் ஒரு பெயர் அதில் இருக்க வேண்டும்,எண் சாஸ்திரபடி கூட்டுதொகை 5 வரவேண்டும் ஏன் என்றால் பிறக்கும் திகதியும் கூட்டுதொகையும் 5 தான் வருகிறது இரண்டும் ஜந்தாக இருந்தால் பெரிய உலகம் போற்றும் கல்விமான்களாக வருவார்கள் பிரபல மருத்துவர்கள்,விஞ்ஞானிகள் எல்லாரும் கூட்டுதொகை ஜந்து தானாம்.

மற்றது மருமகள் போன் பண்ணி சொன்னவள் பெயர் ஆங்கில எழுத்து "ஏ" தொடங்க வேண்டுமாம் அப்ப தானாம் வெளிநாட்டு பள்ளிகூடத்தில ஏதாச்சும் விசேசம் என்றா பிள்ளையின்ட பெயர் முதலில இருக்குமாம்.இன்னுமொரு விசயம் "ஸ்" என்ற எழுத்து கடைசியில அல்லது நடுவில இருக்க வேண்டும் அப்ப தான் வட இந்திய ஸ்டைலாக இருக்கும் என்று ஒரு பெயர் புராணத்தை சரசு சொல்லி முடித்தாள்.

பேப்பரில் எழுதி பார்த்து கொண்டிருந்த சரஸை பார்த்து என்னப்பா பெயர் வைத்தாச்சோ என்று கேட்டபடியே இஞ்சாரும் "அப்புகுட்டி' உம்முடைய அப்பான்ட பெயரை பேரனுக்கு வையுமன் நல்ல தமிழ் பெயரா இருக்கு மற்றது "ஏ" யிலும் தொடங்குது பேசாம அதையே வையும் என்றார் அது பழைய காலத்து பெயர் புதுசா ஏதாவது வைக்க வேண்டும் புதுசாக இந்த காலதிற்கு ஏற்ற மாதிரி வைக்க வேண்டும்,உங்களுக்கு உந்த வேலை சரி வராது சும்மா இருங்கோ என்று செல்லமாக அதட்டினாள் சரசு.

அப்ப "அப்பு குட்ஸ்" என்று வையுமேன் ஏன் என்றா "ஏ" என்றும் தொடங்கு மற்றது "ஸ்" வருது கொஞ்சம் வட இந்திய வாடையும் வீசுது பிறகென்ன அப்படியே வையும்,இங்கே சும்மா அலட்டாமல் போய் உங்களின்ட வேலையை பாருங்கோ என்னை கொஞ்ச நேரம் தனியாக விடுங்கோ பெயரை தெரிவு செய்வதிற்கு என்று கோபமாக திட்டினாள் சரசு.சிறிது நேரத்தின் பின் இஞ்சாருங்கோ இந்த பெயர் எப்படி இருக்கு.

"அபிசாய்ஷேஸ்" இதில எனக்கும் மருமகளுக்கும் தேவையான எல்லாம் இருக்கு என்று தான் தெரிவு செய்த பெயரை கன்கரிடம் காட்டினாள்.

உது என்ன தமிழ் பெயரோ என்று கனகர் கேட்க.ஓமோம் "அபிஷேகம்" ஒரு தமிழ் சொல் அதில இருந்து தான் நான் இதை தெரிவு செய்தனான் எங்கண்ட மனித தெய்வத்தின் பெயர் இருக்கிறது வட இந்திய எழுத்து வருகிறது "ஏ" யில தொடங்குது கூட்டுதொகை 5 வருது, டபிள் ஏ தொடங்குது அப்ப தான் பாடசாலையில் முன்னுக்கு பிள்ளையின் பெயர் இருக்கும் இது எல்லாத்தையும் விட இது ஒரு தமிழ் பெயர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

அபி என்றால் அழகு என்றும் தமிழில் அர்த்தபடும் என்று சரசு சொல்லி முடிக்க கனகருக்கு பிரசர் கூடி தண்ட சாதகத்தை தூக்கிட்டார் நடையை கட்ட சாஸ்திரியிட்ட.

உது என்ன தமிழ் பெயரோ என்று கனகர் கேட்க.ஓமோம் "அபிஷேகம்" ஒரு தமிழ் சொல் அதில இருந்து தான் நான் இதை தெரிவு செய்தனான் எங்கண்ட மனித தெய்வத்தின் பெயர் இருக்கிறது வட இந்திய எழுத்து வருகிறது "ஏ" யில தொடங்குது கூட்டுதொகை 5 வருது, டபிள் ஏ தொடங்குது அப்ப தான் பாடசாலையில் முன்னுக்கு பிள்ளையின் பெயர் இருக்கும் இது எல்லாத்தையும் விட இது ஒரு தமிழ் பெயர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

அபி என்றால் அழகு என்றும் தமிழில் அர்த்தபடும் என்று சரசு சொல்லி முடிக்க கனகருக்கு பிரசர் கூடி தண்ட சாதகத்தை தூக்கிட்டார் நடையை கட்ட சாஸ்திரியிட்ட.

Saturday, May 15, 2010

ஒபமாவும் கறுப்பன் தானே

கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள்."அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில செஞ்சிலுவை சங்கம் விட்டிட்டு போயிட்டுதாம் பெடியங்கள் என்ன செய்ய போறாங்களோ தெரியவில்லை,பெடியங்கள் உள்ள இழுத்திட்டு நல்ல செம்மையா கொடுக்க போறாங்கள் போல தான் இருக்கிறது என்றவர்,பிரசாதம் வழங்கும் இடம் வரவே தம்பி இரண்டு பிளேட் தாரும் மனிசிக்கு கால் ஏலாது அது தான் நான் எடுக்கிறன் என்றவர் பிரசாதம் போடுவரிடம் தம்பிக்கு கடலையும்,வடையும் இரண்டு இரண்டு போடுங்கோ அவளும் பொங்கலையும் போட வேண்டாம் எனக்கு "சுகர்" பிரசாதத்தை பெற்று கொண்டு சுரேசிடம் தொடர்ந்து தனது அலசலை ஆரம்பித்தார். என்னடப்பா கிரிகட்டில இந்தியாவிடம் அடி வாங்கிறாங்கள் போல ஆஸி,நான் இந்தியாவிண்ட பக்கம் தான் அவங்க எங்களிண்ட ஆட்கள்,தெற்காசியகாரன் தானே எங்கண்ட நிறம் தானே அவங்களும்.தம்பி சுரேஷ் அமெரிக்காவிலும் எங்களிண்ட ஆள் தான் ஜனாதிபதியா வந்திட்டான் எனி எங்களுக்கு நல்லம் என்று தான் நினைக்கிறேன்,என்றவறை பார்த்த சுரேஷ் "ஒபமா எங்களின்ட ஆளோ" என்று ஆச்சரியமா கேட்டான்.பின்ன அவனும் கறுப்பன் தானே அது போக சிறுபான்மை இனத்தவன் அமெரிக்க வெள்ளையன் சரியான "றேசிஸ்ட்" நான் போன கிழமை தான் வந்தனான் நியுயோர்க்,கலிபோர்னியா போய் அங்கிருந்து பிறகு கனடாவிற்கும் போயிற்று தான் வந்தனான் அதனால் அமெரிக்ககாரனை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.இன்றைக்கு நான் கோவிலிற்கு வந்த முக்கிய காரணம் கனடாவில என்ற சிநேகிதனின்ட மகன் கணணி துறையில கொன்சல்டனா இருக்கிறான் அவன் இன்டநெட் சட்டில எங்களிண்ட சிட்னியில இருக்கின்ற தமிழ் பெட்டையை கொழுவி போட்டான்.தகப்பன் படத்தை காட்டினவர் கொஞ்சம் கறுப்பா தான் இருந்தது அது தான் இங்க வந்தனான் அந்த பெட்டையை ஒருக்கா பார்க்க.பெட்டையை நேரில கண்டனான் படத்தில பார்த்ததை விட கறுப்பா இருக்குது எனக்கு அவளவாக பிடிக்கவில்லை அது தான் என்ற நண்பனுக்கு போனில சொல்ல வேண்டும் இந்த பெட்டையிண்ட நிறம் உண்ட மகனின்ட நிறத்திற்கு சரி வராது என்று.நான் சொல்லுறதை சொல்லி போடுவன் எனி மிச்சம் அவையின்ட இஷ்டம்.தம்பி சரி நீர் இரும் பிறகு சந்திபோம் அப்ப நான் வரட்டே என்று விடைபெற்றார் கந்தர்.வாங்கிய பிரசாதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டடினான் சுரேஷ்.

மக்சிமைஸ்-மினிமைஸ்

ஒய்வு நாட்களில் கணனிக்கு முன்னால் இருந்து, இணையத்தளத்தில் செய்திகளை படிப்பதுதான் கனகரின் பொழுது போக்கு. அன்றும் அவர் கணனிக்கு முன்னால் இருந்து செய்திகளை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, உள்ளே வந்த மனைவி கீதா , நான் நினைச்சன் நீங்கள் இதில் தான் இருப்பீங்கள் நினைத்தது சரிதான்.அப்பா ஒரு கொம்புயுட்டர் மகள் ஒருகொம்புயுட்டரில் தட்டிக்கொண்டு இருங்கோ, நான் மட்டும் குசினிக்குள்ள இருந்து வெந்து போறன் என்று புறு புறுத்தபடியே கனகருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.மனைவி கொஞ்சம் சுடாகத்தான் இருக்கிறா என்று அறிந்த கனகர், மனைவியை சமாதானப்படுத்த(ஜஸ் வைக்க)சமைக்க கஸ்டமாய் இருந்தால் வாரும் எல்லோரும் ரெஸ்ரொரன்டில் போய் சாப்பிடுவம் என்றார்.நான் அடுத்த வருடம் வேர்ல்ட் டூர் போக வேண்டும், சும்மா உந்த கடைக்காரனுக்கு காசை கொடுக்கஎலாது.நான் ஜந்து நிமிடத்தில சமைத்து போடுவன், சாப்பாட்டு விசயத்தை என்னொடு விடுங்கோ அதை நான் பார்த்து கொல்கிறன். இங்க அப்பா இவள் பெரியவள் எந்த நேரமும் கொம்புயூட்டரில தான் இருக்கிறாள், இடக்கிட அதை பார்த்து சிரிக்கிறாள், நான் அறைக்குள் போனவுடன் பார்த்த பக்கத்தை மினிமைஸ் பண்னிபோட்டு , படிக்கிற பாட பக்கத்தை மக்சிமைஸ் பண்ணி வைத்து படிக்கிறமாதிரி நடிக்கிறாள். என்னடி நெடுகளும் கொம்புயூட்டரில இருக்கிறாய் என்று கேட்டால் அசைமன்ட் செய்யிறன் என்று பூ வைக்கிறாள். நீங்கள் தான் அவளை ஒருக்கா கவனிக்க வேண்டும். இந்த வயது ஒரு பொல்லாத வயது,கவனிக்காமல் விட்டமென்றால் ,என்கெஜ்மன்ட் முடிந்த பிறகு தான் எங்களுக்கு சொல்லுவார்கள் இந்த காலத்து பெட்டைகள், என்று தனது ஆதங்கத்தை பொரிந்து தள்ளினாள்.இஞ்சாரும் சும்மா அந்தரப்பட்டு எதாவது உம்மட பாட்டில் கற்பனை பன்னாதயும். நீர் என்ன செய்தனீர் அந்த காலத்தில், என்னொட கதைக்கிறதற்காக கிடுகு வேலியில் மட்டைகளை தள்ளி வைத்து ஒரு ஒட்டையை(யன்னல்)போட்டு , மக்சிமைஸ் பண்ணி என்னொடு கதைப்பீர் யாரவது வரும் சத்தம் கேட்டால் மட்டையை இழுத்து ஒட்டையை மினிமைஸ் பண்ணி போட்டு ஆடுகளுக்கு குழை(இலைகள்)உடைச்சு கொண்டு இருப்பீர்.ஒரு நாள் அப்பர் என்ன பிள்ளை செய்யிறாய் என்று கேட்க வளவு கூட்டுறன் என்று பூ வைத்தீர் , அதை தான் என்கட வாரிசுகள் எங்களுக்கு செய்யுதுகள்.நீர் வேலியில் யன்னல் வைத்து மக்சிமைஸ் மினிமைஸ் பண்ணின விளையாட்டை அதுகள் கொம்புயூட்டரில் செய்யுதுகள்.உங்க என்ட பழைய கதையை கதைத்து என்னை மூட் அவுட் ஆக்காமல்,குசினிக்குள்ள இருக்கிற பாத்திரங்களை போய் கழுவி வையுங்கோ, என்று சொல்லிய படியே அவ்விடத்தில் இருந்து தனது பழைய நினவுகளை நினைத்த படி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

செருப்பு

அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள்.சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள் அவர்கள் உணவருந்திய பின் இவர்களுக்கு வழங்கபடுமாம் என்று அந்த கட்டிடடத்தி பணி புரியும் ஒரு உயர்குடிமகன் வந்து சொல்லி கொண்டே இருந்தான். அவர்களின் சாப்பாடு முடிந்தவுடன் கதவை திறந்தது தான் தாமதம் வெளியே நின்ற மக்கள் உள்ளே ஒரே ஓட்டமாக ஓடினார்கள் சுரேஷியும் ஓடி போய் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான் இவர்களுக்கும் உணவு பரிமாறபட்டது வெள்ளைகார சாமியார் எல்லோருக்கும் உணவுகளை பரிமாறி கொண்டு உசாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.சுரேஷ் சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை போய் பெற்றோருடன் நடந்தவற்றை சொன்னான் உனக்கு இங்க சமைத்து வைத்திருக்கிறன் எதற்கு அங்க போய் சாப்பிடனி என்று அதட்டலாகவே அம்மா கேட்டா.ஏழைகள் உணவருந்தும் இடத்தில் நீ ஏன் போய் சாப்பிடனி என்று ஒரு விரிவுரையே நடத்தி விட்டா சும்மா தான் பார்க்க போனான் என்று சொல்லி அவன் சமாளித்து கொண்டான்.நாட்கள் செல்ல அங்க பணிபுரியும் ஜயருடன் பழக தொடங்கினார் சுரேஷ் ஜயரும் அந்த ஆச்சிரமம் மற்றும் வெள்ளைகார சாமியாரின் சரித்திரம் எல்லாம் சொன்னார்.வெள்ளைகார சாமியார் இளம் வயதில் எங்கன்ட கருத்த சாமியார் ஒருவரை சந்திக்க போயிருக்கிறார் அந்த எங்கன்ட கருத்த சாமியார் சொன்னவராம் "எந்த மிதிவடி கட்டையை கொண்டு போய் பூசை செய் என்று"இதை தேவ வாக்காக எடுத்து கொண்டு இந்த வெள்ளைகார சாமியார் மிதிவடி கட்டையை (செருப்பு) வெள்ளியிள் செய்து ஒரு ஆச்சிரம் அமைத்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமைகளிள் அன்னதானம் வழங்கி கொண்டு தன்னுடைய குரு பக்தியை உலகிற்கு காட்டி கொண்டிருந்தார்.செருப்பு யாராவது கும்பிடுவீனமா அம்மா? என்று தனது சந்தேகத்தை தாயிடம் கேட்டான் தாயும் உணர்ச்சிவசபட்டு அப்படி சொல்ல கூடாது இராமரின் பாதரட்சையை அவனுடையை தம்பி அரியணையில் வைத்து அரசாச்சி செய்தவன் என்று விளக்கம் கொடுத்தார்.சுரேஷிற்கு அன்றிலிந்து மிதிவடிகட்டை,பாதரட்சை என்றால் ஏதோ உயர்த்தியான விடயம் என்று எண்ண தொடங்கிவிட்டான்.காலங்கள் ஓடின அவனும் உயர்கல்விக்காக வெளிமாகாணம் சென்று படிப்பை தொடரும் பொழுது தனது பாடசாலை மாணவியை பார்த்து கண்ணால் பேச அவள் பதிலிற்கு "செருப்பு பிஞ்சிடும்" என்று வாயால் பதில் சொன்னாள் செருப்பை இதற்கும் பயன்படுத்தாலம் என்று மனதில் நினைத்து கொண்டால்.காதலை வெறுத்து அவள் செருப்பு பிஞ்சிடும் என்று சொல்லவில்லை ஏற்கனவே தனது காதலை இன்னொருவருக்கு பறிகொடுத்ததால் காதலின் புனிதத்தை பாதுகாக்க தான் செருப்பை பயன்படுத்தி இருந்தாள் என்று பிறகு தான் சுரேஷ் புரிந்து கொண்டான்.பிரபல சினிமா நட்சத்திரத்தின் செருப்பு ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கபட்டதாக பத்திரிகை செய்திகளை பார்த்த சுரேசிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.ஒருவன் பக்தியால் மிதிவடி கட்டையை (செருப்பை) தலை மேல் வைத்து பூசை செய்கிறான்,இன்னொருத்தன் பாசத்தால் செருப்பை அரியணையில் ஏற்றுகிறான்,இன்னொருத்தி காதல் புனிதத்தை பாதுகாக்க செருப்பை தூக்கிறாள் மற்றவனோ ஏலத்தில் பணத்தை கொடுத்து செருப்பை வாங்கிறான்.என்று யோசித்து கொண்டே நடந்தவன் திடிரேன அவனது செருப்பை பார்த்த போது தான் விளங்கியது அது தன் செருப்பு அல்ல கோவிலில் யாரின்டையோ செருப்பை மாறி போட்ட விசயம்.

பனித்திரை

பாலைவனத்தை சோலையாக்கி வெளிநாட்டவரை கூலிக்கு அமர்த்தி வேலை வாய்ப்பு அளிக்கும் மத்திய கிழக்கு நாட்டின் சுரேஷ் தனது பணிகளை செய்து கொண்டிருந்தான் பல நாட்டு இனத்தவர்கள் அங்கு பணி புரிந்தாலும்,அதிகமாக இந்திய,பாகிஸ்தான்,தாய்லாந்,ப���?லிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தான் குறைந்த ஊத்தியத்திற்கு அதிக வேலை செய்யும் கூலிகளாக பணி புரிந்தார்கள்.பிரித்தானிய காலணித்துவத்தில் இருந்த நாட்டவர்கள் தான் அதிகமாக தொழிலாளர்களாக பணி புரிந்தார்கள்.அவர்களுக்கு தானே ஏக்கங்கள் அதிகம்.இவர்களுடன் சுரேஷ்,சிவா,புஞ்சி பண்டா,இஸ்மையில் போன்ற எம் நாட்டவர்களும் அயல நாட்டு தமிழர்களான இராமன்,கந்தன் போன்றோர் தமிழ் மொழி பேசுவதால் எல்லோரும் ஒரே விடுதியில் தங்கி பணு புரிந்தார்கள்.சுரேஷ் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன் அவன் யாழை விட்டு வெளியே செல்லும் போது யாழ்பாணம் புலிகளின் பூரண கட்டுபாட்டில் இருந்தது.புலிகள் இப்படி பூரண கட்டுபாட்டில் வைத்திப்பதால் எங்களுக்கு ஈழம் கிடைப்பதிற்கு இன்னும் கொஞ்சம் காலம் தான் என்ற நினைப்பு சுரேஷினின் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது அந்த காலகட்டத்தில் சுரேஷிற்கு அரசியல்,அயல நாட்டு அரசியல்,சர்வதேச போராடங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லை அதுவும் ஒரு காரணம் அவன் அப்படி நினைப்பதிற்கு.உணவு உண்பதிற்காக உணவு விடுதியில் எல்லாரும் ஒன்று கூடுவார்கள் அப்பொழுது அந்த நாட்டு ஆங்கில பத்திரிகைகளை படிப்பது வழக்கம்."யாழ்பாணம் நோக்கி இராணுவம் முன்னேற்றம்""புலிகள் பின்வாங்குகிறார்கள்""கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ வசம்""நல்லூரில் பிரபாகரனின் வீடு இராணுவ வசம்"இப்படி பல செய்திகள் ஆங்கில பத்திரிகையில் வரும்.அதே வேளை சந்திரிக்கா,டக்கிளஸ்,ராதிகா குமாரசுவாமி போன்றவர்களின் அறிக்கைகள் போட்டிக்கு போட்டி பிரசுரிப்பார்கள்.சந்திரிக்கா - "தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து விடுவிக்க தான் இந்த போர்,சமாதானதிற்கான போர்."டக்கிளஸ் - "யாழ் மக்களின் ஜனநாயக உரிமையை பெற்று கொடுப்பதிற்காக தான் எமது அரசு இந்த போரை புலிகளுடன் நடத்துகிறது.எமது அரசிற்கு வெற்றி நிச்சயம் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்ச்சி தருவதாக சந்திரிக்கா அம்மா உறுதி அளித்துள்ளார்.ராதிகா குமாரசுவாமி - "தமிழர்களுக்கு இராணுவ பிரிகேட் ஒன்று உருவாக்கி தருவதாக சந்திரிக்கா எனக்கு கூறி உள்ளார் ஆகவே புலிகள் போரை விட்டு அரசாங்கத்துடன் இணைய வேண்டும்".இந்த செய்திகளை படித்தவுடன் சுரேஷிற்கு மனதில் ஒரு வித பயம் தமிழ் மக்களின் போராட்டம் இத்துடன் முடிவடைந்து விட்டது போன்ற ஒரு எண்ணம் அவனை அறியாமலே அவனின் மனதில் ஏற்பட்டு விட்டது.இரவுகளின் தூக்கம் விழித்தவுடன் தொடர்ந்து உறங்க முடியாமல் அவதிபட்டதும் உண்டு இத்தனைக்கும் அவன் ஒரு முன்னாள் போராளியும் அல்ல.சிவாவிற்கு இந்த செய்திகளை படித்தவுடன் அவனை அறியாமலே ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும்.புலிகளாள் அரசாங்கத்தை வெல்ல முடியாது புலிகள் போராட்டத்தை விட்டு அரசோடு போக வேண்டும் அப்ப தான் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் இப்படி பல கதைகள் சொல்லும் சிவா ஒரு முன்னாள் போராளியாம்!இராமன் இலங்கையை பற்றி எவ்வித அறிவும் இல்லை ஆனால் புலிகளை ஓரம் கட்ட வேண்டும் என்ற உணர்வு மட்டும் உண்டு.எங்கன்ட ரஜிவை கொன்ற புலிகளை ஓரம்கட்ட வேண்டும்,புலிகள் தற்போது ஓடி ஒழிந்திருப்பார்கள்,வீரப்பனை பொலிஸ் துரத்துற மாதிரி புலிகளையும் துரத்தி பிடிக்க வேண்டும் என்று கருத்து சொல்லுவான்.சுரேஷ் இயன்றளவு எல்லோருக்கும் சிங்கள இனவாதிகளின் அரசியல் பற்றியும் தமிழ் மக்களின் அவலநிலை பற்றியும் அவர்களாள் புரிந்து கொள்ள முடியவில்லை.அவர்கள் அதற்கு முயற்சிக்கவும் இல்லை.சிவாவிற்கு மக்கள் போராட்டம் என்ற சித்தார்ந்தமும்,இராமனுக்கு ராஜிவின் கொலை தான் மனதில் பனிதிரையாக படிந்து கிடந்தது எமது போராட்டத்திம் உண்மை நிலையை மறைத்திருந்தது அத் திறை.காலங்களை கரைந்தோடின புலிகள் முல்லை தீவு,கிளிநோச்சி போன்ற முகாம்களை அழித்து பெறும் வெற்றியை பெற்று நீண்ட கால போரட்டதிற்கு தேவையான தள பிரதேசத்தை உண்டாக்கி கொண்டார்கள் இதை பற்றி எந்தவொரு ஊடகமோ அல்லது சிவாவோ பெரிதாக அலட்டி கொள்ளவிள்ளை.சிவாவும்,சுரேசும் மத்திய கிழக்கை விட்டு வெளியேறி மேலைதேய நாடுகளின் பிரஜா உரிமை பெற்று வாழும் போதும் தொலைபேசி மூலம் உரையாடுவதுண்டு.நீண்ட நாட்களிற்கு பிறகு சிவாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்னடப்பா வன்னியும் போயிட்டுதாம் எனக்கும் தெரியும் புலிகளாள் அரசை வெல்ல முடியாது என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்தான்.தொடர்ந்து அரசியல் கதைப்பதை தவிர்த்த சுரேஷ் இவன் தனக்குள் போட்ட பனிதிரை உருக போவது இல்லை தொடர்ந்து பனிபடலம் அதிகமாகவே உறைந்து கொண்டு போகிறது ஆகவே தொடர்ந்து அரசியல் கதைப்பதிலும் பார்க்க கதைக்காமல் இருப்பது மேல் என்று எண்ணி பேச்சை மாற்றினான்.

கொளுந்தரின் காதல்

பாடசாலை மணி அடித்தவுடன் சிவகொளுந்து தன்னுடைய பறியை (புத்தகபையை) தோளிள் மாட்டி கொண்டு,பிள்ளைகள் எழுந்து வரிசையாக போக வேண்டும் சரியோ மற்ற வகுப்பு பெடியன்கள் போல கத்தி கொண்டு போறதில்லை யாராவதும் அந்த மாதிரி கத்தினியளோ பிறகு நான் வாத்தியாக இருக்க மாட்டன் பொலிஸ்காரன் மாதிரி தான் இருப்பன் என்று கூறி மாணவர்களை வீடு செல்வதிற்கு வழி அனுப்பி வைத்தார்.இதனால் இவரை டிஸிபிளீன் சிவகொழுந்தர் என்று தான் பாடசாலையில் உள்ளோர்கள் அழைப்பார்கள்.மாணவர்கள் எல்லோரும் சென்றவுன்ட தானும் வெளியே வந்து சிறிது நேரம் வகுப்பாறை வாசலில் நின்று தான் வீடு செல்வார்.சிவகொளுந்தருக்கு இரு ஆண்பிள்ளைகள் உண்டு,மனைவி கமலா பேரழகி என்று இல்லை ஆனாலும் யாழலகி (அதாவது சாதாரண யாழ்பாணத்து பொம்பிளையின் அழகு).கொளுந்தருக்கு ஏற்ற கொளுந்தி என்று சொல்லலாம் யாழ்பாணத்து பெண்களின் குணம் சகலதும் உண்டு.பணிவிடை செய்தல்,புருசன் பிள்ளைகளின் பெருமை பேசுதல்,விடுப்பு கதைத்தல்,பதி பக்தி பேசுதல் இன்னும் பல.சொந்த வீடு,கடனில்லாத வாழ்க்கை,அரச உத்தியோகம்,தோட்ட வருமானம் என்று சகல வசதிகளும் கொளுந்தர் குடும்பதிற்கு உண்டு.கொளுந்தர் மாணவர்களுடன் கண்டிப்பாக இருப்பதால் பாடசாலையில் அவருக்கு ஒரு மரியாதை இருந்தது மாணவர்களும் பயந்து தான் இருந்தார்கள்.சுரேஷ் அன்று பாடசாலை விட்டு செல்லும் பொழுது தனது புத்தகபையை தட்டி பார்த்தான், சாப்பாடு பெட்டியை வகுப்பறையில் விட்ட நினைவு வரவே மீண்டும் வகுப்பறைக்கு சென்றான்.சிவகொளுந்தர் சக ஆசிரியை வதனாவுடன் சிரித்து பேசி கொண்டு இருந்தார்.சுரேஷை கண்டவுடன் கொளுந்தர் வாத்தியார் என்ற அதிகார தோரணையில்,மேலும் பெண் ஆசிரியை பக்கத்தில் இருந்தனால் அதிகாரம் இருமடங்காக இப்ப ஏன் இங்க வந்தனி என்றார்..!அவனும் பயந்து போய் "சேர் சாப்பாடு பெட்டியை மறந்து போய் விட்டிட்டு போயிட்டன் அது தான் எடுக்க வந்தனான் என்று பணிவாக பதில் சொன்னான்.""போய் எடுத்து கொண்டு ஓடு என்று மீண்டும் அதட்டினார்"பாடசாலை விட்டவுடன் கொளுந்தர் சிறு தாமதமாக வீடு செல்வதிற்கு காரணம் வதனா டீச்சருடன் கதைப்பதிற்காக இருக்கலாமோ என்று நினைத்த சுரேஷ்,"சீ...சீ அப்படி இருக்காது என்று தனது புத்தியை தானே நொந்து கொண்டான்."சில நாட்களின் பின் அவர்களை அந்நியொன்னியமாக கண்ட சுரேஷிற்கு,அவனின் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை.அட நாங்களும் காதல் என்று ஒரு பெட்டைக்கு பின்னால திரியிறோம்.கல்யாணம் கட்டின இவனும் காதலிக்க என்று ஒரு மனிசியை தேடுறான் என்னடா உலகம் இது என்று பெரு மூச்சு விட்டான் சுரேஷ்.இவன டிசிபிளீன் சிவகொளுந்து என்று அல்ல சபலிஸ்ட் சிவகொளுந்து என்று தான் சொல்ல வேண்டும்,என்ற நினைத்தபடியே தனது சபலம் நியாயம் ஆனது நேர்மையானது என்றபடியே தனது ஒரு தலை காதலை இரு தலையாக்க செல்கிறான் சுரேஷ்.

பஜனை ஆண்ரி

மறக்காமல் வெள்ளிகிழமை பின்னேரம் ஏழு மணி போல் ஒருக்கா வீட்ட வாரும் தம்பி என்று மணி அண்ரி சொன்னவுடன் சுரேஷ் ஏன் ஏதாவது விசேசமா அண்ரி என்றான்..அப்படி ஒன்றுமில்லை நீ வா,காரணத்தை சொன்னா தேவை இல்லாம அலட்டுவாய் ஆனபடியா நீ வெள்ளிகிழமை மனிசியையும் பிள்ளைகளையும் கூட்டி கொண்டு வா.மணி அண்ரி சுரேஷின் அம்மாவின் தோழி.இப்பொழுது சிட்னியில் மகள் சும்தியுடன் வாழ்ந்து வருகிறா கணவன் மூன்று வருடங்களிற்கு முன் சிவபதம் அடைந்து விட்டார்.ஹரிதாஸ் சுவாமிகள் என்றால் மணி ஆண்ரிக்கு உயிர் ஊரிலே பஜனைகளை பூசைகளை என்று வைத்து தனது பக்தியை ஊர்மக்களுக்கு வெளிபடுத்து கொண்டிருப்பா ஊரில் சிலர் மணி ஆண்ரியை பஜனை ஆண்ரி என்று நக்கலாகவும் கூறுவதுண்டு.அதில் சுரேஷும் ஒருவன்.ஹரிதாஸ் சுவாமிகள் பற்றி கதைக்க வெளிகிட்டால் ஆண்ரியில் கண்களிள் இருந்து ஆனந்தகண்ணீர் வடித்து தான் தனது ஹரிதாஸ் புராணத்தை முடிப்பார்.இந்தியாவிற்கு சென்று அவரை தரிசித்து விட்டு ஊரில் வந்து மணி ஆண்ரி பட்டபாடு சுரேசிற்கு இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து கிடக்கிறது.சுவாமிக்கு அருகில் நின்று ஒரு படம் எடுத்து போட்டு அதை ஊரில் உள்ள சகலரிடமும் காட்டி பெருமைபட்டு கொண்டு திரிந்தவர் தான் இந்த மணி ஆண்ரி.மணி ஆண்ரி கூப்பிட்டபடியா ஏதாவது பஜனையா தான் இருக்கு என்று மனிசையும் கூட்டி கொண்டு வெள்ளி மாலை அங்கு சென்றான்.அவன் நினைத்தது போல் அது ஒரு பஜனை ஒன்று கூடல் தான்.சுமதி தான் இவர்களை வரவேற்றாள் மணி ஆண்ரி பக்தி பரவசத்தில் இருந்தபடி அவ்வளவாக பேசவில்லை அன்று.ஆனால் மகள் சுமதி தான் வந்தவர்களுடன் உரையாடி கொண்டிருந்தா.போன சனி கிழமை ஹரிகரன் புரோகிராம் சூப்பரப்பா.நான் நல்லா எஞ்ஜோய் பண்ணி பார்த்தனான் எண்ட மூத்தவள் சொல்லி போட்டாள் ஒவ்வொரு முறையும் கரிகரன் புரொகிரம் நடக்கும் போதும் தான் போக வேண்டும் என்று.அவளுக்கு ஹரிகரனின் பாடல்களை கேட்பது என்றால் மிகவும் விருப்பம்.நான் இன்டவல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்து வந்தவுடன் நேரடியாக ஹரிகரனுடன் போய் கதைத்தனான் நல்லா கதைக்கிறார் "சோ சுவீடப்பா" நானும் என்ற மனிசரும் அவருடன் நின்று படம் எடுத்தனாங்கள் இருங்கோ கொண்டு வந்து காட்டுறன் என்று ஓடி போய் தனது பட அல்பத்தை கொண்டு வந்து இந்தியா பிரபலங்களுடன் நின்று எடுத்த படங்களை காட்டி புளுகி கொண்டிருந்தார்.மணி ஆண்ரி பஜனை தொடங்க போது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னவுடன் அமைதியாக இருந்து பஜனையை கேட்டனர்.வீடு செல்லும் போது சுரேஷின் மனைவி கீதா கரிகரனின் புரோகிராம் போவோம் என்று எத்தனை தரம் கேட்டனான் நீங்கள் தான் பிடிவாதம் பிடித்து வரமாட்டன் என்றபடியால் நானும் போகவில்லை.சுமதியை பாருங்கோ புருசனோட போய் நின்று படமும் எடுத்திருக்கா நீங்களும் இருக்கிறீங்களே புரோகிராமுக்கே போகமாட்டீங்க இந்த இலட்சனத்தில் படம் எடுக்கிறதை பத்தி உங்களுடன் கதைக்கிறன்.அது சரி என்ற தலைவிதி அப்படி என்றால் யாரை நொந்து என்ன பயன் என்று ஒரு ஒப்பாரியை வைத்து விட்டாள்.அமைதியாக கேட்ட சுரேஷ்.இங்க பாரும் உந்த கதாநாயகனுடன் படம் எடுக்கிறது பிறகு அதை மற்ற ஆட்களுக்கு காட்டி புளுகிறது இது எல்லாம் ஒரு சாதி வியாதியப்பா,சுமதியின் அம்மா ஹரிதாஸ் நாயகன் என்று திரிந்தா இப்ப சுமதி ஹரிகரன் தான் நாயகன் என்று திரிகிறா போதாகுறைக்கு தண்ட மகளையும் ஹரிகரன் விசிறி என்று புலம்புது என்று சொன்னது தான் தாமதம்,எனக்கு உங்களுடைய உந்த விளக்கங்களும்,வியாக்கியானங்���ளும் வேண்டாம் அடுத்த முறை ஹரிகரன் வந்தால் நான் போறது என்று முடிவெடுத்திட்டன் என்றவள் பதில் எதுவும் எதிர்பார்காமல் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

ஞாபகம் வருகுதோ?

மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு.அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது.சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு அமர்ந்து கொண்டான் தெரியாதவர்களை தெரிந்தவர்கள் சுரேஷ்ற்கு அறிமுகபடுத்தி வைத்தார்கள் அவனும் பதிலிற்கு "கலோ" சொல்லிவிட்டு தனது வழமையான சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்."உம்மென்று" முகத்தை வைத்து கொண்டிருக்காமல் ஆட்களோட கதையுங்கோ என்று மனிசி திட்ட நிதானதிற்கு வந்தவன் பக்கத்து மேசையில் இருப்பவர்களை ஒரு நோட்டமிட்டான்.அரசியல் கதைக்க கூடிய ஆட்களை காணவில்லை.எல்லாரும் தங்களது பிள்ளைகளின் படிப்பை பற்றி தான் அதிகம் கதைத்து கொண்டிருந்தார்கள்.யாராவது விளையாட்டை பற்றி கதைப்பீனமோ என்று திரும்பி பார்த்தால் அதுவும் இல்லை.எங்கன்ட ஆட்கள் உதைபந்தாட்டதிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தானே கிரிகேட்டிற்கு தான் எங்கன்ட சனம் முக்கியத்துவம் கொடுக்கும் ஏன் என்றால் அது "டீசன்ட் போயிஸ்" விளையாடும் விளையாட்டு அதனால் உலக கோப்பை உதைபந்தாட்டதிலும் பார்க்க உள்ளூர் கிரிகேட் செய்தி பற்றி தான் சனம் அலசும் என்று நினைத்து போட்டு இருக்கையில்.சுரேசின் முதுகை தட்டியபடியே கஸ்டம் கந்தர் வந்து அவனுக்கு அருகாமையில் அமர்ந்தார் அறிமுகமான "கஸ்டம்ஸ் கந்தரை" கண்டவுடன் சுரேசிற்கு ஒரே மகிழ்ச்சி காரணம் கந்தர் அரசியலில் இருந்து அடுபங்கரை வரை செய்திகளை ஒரு அலசல் அலசுவார்கள்..இலங்கையில் சுங்க இலகாவில் வேலை பார்த்து இளைப்பாறியவுடன் அவுஸ்ரெலியா பிரஜா உரிமை எடுத்து மூத்த பிரஜையாக இருக்கிறார்.வானொலி,பத்திரிகைகளிள் வரும் செய்திகளை அலசி ஆராய்வது தான் அவரின்ட தற்போதைய வேலை.சுரேஷ் கந்தரை வம்பிழுக்க வேண்டும் என்று இன்னொரு மேசையில் இருந்த வெள்ளையர்கள்,ஆபிரிக்கா இனதவர்கள் மற்றும் சீனர்கள் என்று பல இன மக்களை காட்டி உவையள் எல்லாம் இருக்கீனம் கவனித்தீங்களோ என்று கந்தரை உசுபேற்றிவிட்டான்.கந்தர் கொஞ்சம் சாதி தடிப்பு பிடித்த ஆள் அது தான் அவன் இப்படி உசுபேற்றினவன் தம்பி சுரேஷ் இப்ப எங்களுடைய ஆட்கள் வெளிநாட்டில் வாழும் போது பல்கலாச்சார மக்களுடன் பழக வேண்டி இருக்குது அத்துடன் அவர்களுடன் வேலை செய்யும் நண்பர்கள் இவர்களுக்கு அழைப்பு கொடுத்திருப்பார்கள் அது தான் அவர்கள் வந்திருப்பார்கள்.இது எல்லாம் நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள கூடாது."இட் இஸ் நொட் அ பிக் டீல்".அண்ணா ஊரில என்னுடைய அக்காவின் கல்யாணதிற்கு என்னுடைய நண்பன் ஒருத்தருக்கு அழைப்பிதழ் கொடுக்க போகக்க நீங்கள் தடுத்தது ஞாபகம் வருகிறதோ.ஒரே ஊரிலையே ஒரே நிறத்தில ஒரே மொழியில பேசுகிற ஒரு நண்பனிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது நீங்கள் என்ற அம்மாவிட என்ன சொல்லி தடுத்தனியள் என்று ஞாபகம் வருதோ?நண்பனிற்கு அழைபிதழ் கொடுத்து அவன் கல்யாணதிற்கு வந்தால் நாங்களும் அந்த சாதி என்று சனம் நினைக்கும்,அது போக நீ அவனை கூப்பிட பிறகு அவன் உன்னை கூப்பிட பிறகு நீ அங்கு போய் சாப்பிட வேண்டி வரும் ஆனபடியால் பேசாமல் இரு என்று எனக்கு ஏசினது ஞாபகம் வருதோ.அங்கு "பிக் டீலாக" இருந்த விடயம் இங்கே எப்படி "நொட் அ பிக் டீலாக" இருக்கிறது அங்கு பல ஒற்றுமைகள் இருந்தும் சாதியால் வேற்றுமை அழைப்பதழ் கொடுப்பதை தடுத்தியள்,இங்க பல வேற்றுமைகள் இருந்தும் (நிறம்,மொழி,கலாச்சாரம்,தேசம்) தராதரம் (வசதி,வாய்ப்பு) ஒற்றுமை காட்டுறியள் என்ற தாமதம் கந்தர் அந்த இடத்தில இருந்து மெல்ல நகர தொடங்கிட்டார்.

இமேஜ் கந்தர்

கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார்.காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று காரை விரைவாக ஓட்டினார்.அன்று மாலை சுரேஷுடன் தொடர்பு கொண்டு மச்சான் சொறிடா நான் அப்படி கேட்டிருக்க கூடாது என்றார்.நான் அப்பவே மறந்திட்டன் மற்றது உன்னுடைய உந்த இமேஜ் பிரச்சினை நீ சின்னவனாக இருக்கும் போதே தொடங்கிவிட்டது தானே.உனக்கு நினைவிருக்கிறதா நாங்கள் பெடியன்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய கணக்கு வாத்தியாரை மொட்டை வாத்தியார் என்று பட்டம் சொல்லி கூப்பிடுவோம் சொல்ல எல்லோரும் ஓம் என்று சொன்னார் ஆனா நீ உன்னுடைய இமேஜ் பழுதாகிவிடும் வாத்தியாரிடம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பாடசாலைக்கே வராமல் வாத்தியாரிட்ட நல்ல பெயர் வாங்கின ஆள் தானே சரி அதை தான் விடுவோம் எங்களுடன் படித்த சுமதியை ஆசைபட்டு அவளுக்கு உன்னுடையை காதலை தெரிவித்தால் ஏனைய மாணவிகளிடம் உன்னுடைய இமேஜ் பழுதடைந்து விடும் என்று போட்டு கடைசி வரைக்கும் காதலை தெரிவிக்காமல் உன்னுடைய இமேஜை பெட்டைகளிடம் காப்பாற்றின ஆள் தானே நீ.இப்பவும் நீ இந்த இமேஜிற்காக பாடுபடுகிறாய் வேலை தளத்தில் அதிகம் லீவு எடுக்கமாட்டாய் கேட்டால் மனேஜரிடம் உன்ட இமேஜ் ஸ்பொயில் ஆகிடும் என்பாய்.நீ ஒரு படைப்பாளி சிறந்த கருத்தாளன் ஆனால் சில விடயங்களை உன்னுடைய சொந்த பெயரில எழுதமாட்டாய் புனை பெயரில் தான் எழுதுவாய்.ஸ்கந்தா என்ற பெயருக்கு ஒரு இமேஜ் இருக்கு அதை கெடுக்க கூடாது அது தான் புனைபெயரில் எழுதுகிறேன் என்பாய்.கல்யாணம் கட்டின புதுசில் தண்ணி அடிப்பது என்றாலும் மனிசி வெளிநாட்டிற்கு போனால் தான் தண்ணி அடிப்பாய் காரணம் மனிசிக்கு உன்னுடய இமேஜ் பழுதடைந்துவிடும் என்று தானே.இப்ப வயசு போனபடியால் உன்னுடைய இமேஜ் நாடகம் மனிசிக்கு விளங்கிவிட்டது தண்ணி அடிப்பதை கண்டு கொள்வதில்லை.இப்படி பல இமேஜ் விளையாட்டுக்கள் உன்னுடையா வாழ்க்கையில் இருக்கு அதுகளை கிளற போனா ஒரு நாள் போதாது.அதை விடு பின்னேரம் வீட்ட வாறியோ ஒரு "புளு லேபல் ஸ்கொச்" இருக்கு மச்சான் வரும் போது கொண்டு வந்தவன் வாரும் அடிப்போம் என்றான் சுரேஷ்.ஆசையா தான் இருக்கு ஆனால் ஸ்டேட்டில் இருந்து மனிசியின் அண்ணன் வந்திருக்கிறான் அவர்களை தனியே விட்டிட்டு வாறது சரியில்லை என்று காய் வெட்டினான் ஸ்கந்தா.மச்சானையும் கூட்டி கொண்டு வாவன் என்று கட்டாயபடுத்தினான் சுரேஷ்.கூட்டி கொண்டு வாறது பிரச்சினை இல்லை மச்சான் அவருக்கு முன்னால் நான் தண்ணி அடிக்கிறதில்லை ஏன் என்றால் என்னுடைய இமேஜ் என்னாகிறது.(யாவும் கற்..ப...)கடலுக்கு எல்லை உண்டு கற்பனைக்கு எல்லை உண்டோ..??

எங்கன்ட ஆட்களோட இருக்க ஏலாது

அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா.பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான்.அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மாலை தேநீர் இடவேளையிள் சந்திக்கும் பொழுது தமிழா,சிங்களமா என்று கேட்டா அழகாக இருக்காது விச் பார்ட் ஒவ் சிறிலங்கா என்று கேட்போம் என்று நினைத்தான் அதுவும் அழகல்ல என்று முடிவு செய்து " ஜ யாம் சுரேஷ் வுரோம் ஜவ்னா" என்றான் பதிலிற்கு புஞ்சியும் "ஜ யாம் திலக் புஞ்சி வுரோம் மாத்தரை" என்றான்.இருவரினதும் சந்தேகமும் தீர்ந்தது அதன் பின் இருவரும் நண்பர்களாவே பழகினர் இருவரும் அரசியல் கதைப்பதில்லை தவித்து கொண்டே வந்தார்கள் இதன் காரணமாகவோ என்னவோ மச்சான் என்று கதைக்கும் அளவிற்கு நண்பர்களாகிவிட்டார்கள் இருவரும் தங்களது தேசியதிற்காக பாடுபட தான் செய்தனர் அவர்களை அறியாமலே அந்த உணர்வு வெளியிட தான் செய்தது.சுரேஷ் தனது தேசியம் சம்பந்தபட்ட நிகழ்வுகளிள் பங்குபற்றினான் அதை மாதிரி புஞ்சியும் தனது தேசியம் சார்ந்த நிகழ்வுகளிள் பங்குபற்ற தான் செய்தான்.சுரேஷின் தேசிய நிகழ்வுகள் புஞ்சியின் தேசியத்தை பாதிக்க தான் செய்யும் அதை போல் புஞ்சியின் தேசிய நிகவுகள் சுரேஷை பாதிக்க தான் செய்யும்.அன்று புஞ்சி "அப்பே மினுச்தெக்க இன்டபாய் பிலிகன்டபாய் ஒங்கொள்ளு கட்டி கொந்தாய்" (எங்களுடைய ஆட்களோ காலம் தள்ள ஏலாது நம்ப ஏலாது உங்களுடைய ஆட்கள் நல்லம்) என்று சுரேசிடம் கூறினான்.இந்த வசனத்தை சுரேசின் தந்தை பல வருடங்களிற்கு முதல் "எங்கன்ட சனதோட காலம் தள்ள ஏலாது எங்கன்ட ஆட்களோட ஓப்பிடக்க சிங்களவன் எவ்வளவோ மேல் என்று சொன்னது" தான் சுரேசிற்கு நினைவிற்கு வந்தது.அதாவது தாங்கள் சார்ந்த சமுகத்தில் தங்கள் சுயங்களை காட்டுபவர்கள் பிறிதொரு சமுகத்துடன் பழகும் போது அதனை காட்டி கொள்வதில்லை இதனால் மற்ற சமுகத்தை சார்ந்தவன் இந்த சமுகத்தில் உள்ளவை மிகவும் நல்லவர்கள் என்று மனகோட்டை கட்டுகிறார்கள்.எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் என்று மனசிற்குள் நினைத்து கொண்டான் சுரேஷ்.

Monday, May 10, 2010

மாப்பிள்ளை கொழும்பாம்

குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்றும் புரியாம முழித்தான்,குகன் முழிப்பதை கண்ட மதன் விசயத்தை சொன்னான் தனக்கு ஜ.சி.எம்.ஏ செய்ய தகுதி காணது ஆகையால் உனது ரிசல்சீடை போட்டொகொப்பி எடுத்து அதில் எனது பெயரை வெட்டி ஒட்டி மீண்டும் போட்டோகொப்பி எடுத்தா அது எனது ரிசல்ட்சீட் மாதிரி இருக்கும் அதை லண்டனிற்கு அனுப்பினா அதை அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள் ஒரு மாதிரி பதிவு பண்ணிபோடலாம்.பிறகு கொழும்பில் இருந்து டியூசனும் படித்து ஓடிட் நிறுவனத்திலும் வேலை பார்த்தால் பிரயோசனமாக இருக்கு ஆகவே தந்து உதவுமாறு நண்பணிடம் கேட்டான்.குகனும் கொடுத்து உதவினான்.
மதன் கொழும்பு சென்று படிக்க தொடங்கி சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாக இரண்டும்,முன்று கடிதம் போட்டிருந்தான் பிறகு தொடர்புகள் அற்று விட்டன குகனும் வெளிநாடு சென்று தனது படிப்பை தொடங்கி தொழில் பார்த்து கொண்டிருந்தான்.
குகனின் தந்தை ஒரு நாள் தொலைபேசியில் தங்கை சுதாவிற்கு நல்ல வரண் ஒன்று வந்திருப்பதாகவும் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து விசாரிக்கும்படி தந்தை கேட்டு கொண்டார்.பெடியன் சின்ன வயதில் இருந்து கொழும்பில் தான் படித்தது என்றும் சொன்னார்.குகன் தந்தை கொடுத்த இலக்கத்தை சுழற்றினான் மறுமுனையில் சிறிலங்கா ஆங்கில உரையாடல் தொடங்கியது.குகன் தன்னை அறிமுகபடுத்தி தன்னுடைய ஊரையும் தற்போது வெளிநாட்டில் வாழ்பதாகவும் தெரிவித்தான்.மதன் தான் ஒருவருடம் படித்த கொழும்பு பாடசாலையை குறிபிட்டு அங்கு தான் கல்வி பயின்றதாகவும் பெற்றோர்கள் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் விலாசி தள்ளினான்.குகனிற்கு இவனது பெயரையும்,குரலையும்,அவனது பெற்றோர்களின் ஊரை கேட்டதும் புரிந்துவிட்டது மதன் தனது நண்பன் தான் என்று ஆனால் மதனிற்கு காட்டிகொள்ளவில்லை.
தங்கை சுதாவிடம் தொடர்பு கொண்டு கிண்டல் பண்ணிணாண் என்ன மாப்பிளை கொழும்பாம் படித்தது,வளர்ந்தது எல்லாம் கொழும்பாம் என்ற கிண்டலிற்கு பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் சுதா திருமண நாளை எதிரிபார்த்து கனவில் மூழ்கி காத்திருந்தாள்.குகனும் அந்த நாளை எதிரிபார்த்து காத்திருந்தான் மதனை கிண்டல் பண்ண.

மீசை

சுரேஷ் தனது மீசையை தடவிய படியே தனது சிந்தனையை ஓட விட்டான் இந்த மீசை அரும்ப தொடங்கிய காலத்தில் இருந்து அது படும்பாட்டை பத்தி தான் இந்த மீசை வளர்வதிற்கே இத்தனை தடைகள் கட்டுபாடுகள் சூழ உள்ளோர்களாள் உண்டாக்கபடும் போது குழந்தை வளர்ந்து பெரிதாக வளரும் வரை எவ்வளவு கஷ்டங்களை அது எதிர்நோக்க வேண்டிய வரும் என்று அவனால் எண்ணி பார்க்கவே முடியவில்லை.
க.போ சாதாரணம் படிக்கும் போது சுரேஷ்ஷின் மீசை அதிகமாகவே வளர்ந்திருந்தது.ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் படிபிக்கும் போது சிரித்து விட்டான் ஆசியருக்கு கோபமாய் திட்ட தொடங்கிவிட்டார்,வில்லன்கள் மாதிரி மீசையை வளர்த்து கொண்டு படிக்க வந்திட்டான்கள் நாளைக்கு வகுப்பிற்கு வரும் போது உந்த மீசையை எடுத்து போட்டு தான் வரவேண்டும் என்று கட்டளை இட்டார் வேறு வழி இன்றி மீசையை முழுதாக எடுத்து விட்டு பாடசாலைக்கு சென்றான்.சக மாணவர்கள் கிண்டல் பண்ணிணார்கள் பொம்பிளை மாதிரி இருக்கிறது என்று.
தம்பி இப்ப தான் வடிவா இருக்கிது சின்ன பிள்ள மாதிரி நான் சொல்ல சொல்ல எடுக்காமல் இப்ப வாத்தி சொன்னவுடன் எடுத்து போட்டாய்.உண்மையாகவே வடிவாக இருக்கிறது,போய் கண்ணாடியில் முகத்தை பாரு எவ்வளவு வடிவாக சின்னபிள்ள மாதிரி இருக்கு இனி இந்த மீசையை வளர்காதே தம்பி என்று அன்பு கட்டளை இட்டாள் தாயார்.அப்பா மீசை வளர்த்து இருக்கிறார் நான் வளர்க்க கூடாதா என்று சிவா கேட்க அவருடைய வயசிற்கு வடிவாக இருக்கிறது,அது போக அவரின்ட முகதிற்கு அந்த மீசை அழகாக பொருந்துகிறது ஆனால் உனக்கு வடிவில்லை தம்பி அதிகார தோரனையுடன் கட்டளை இட்டாள்.கணவனிற்கு வடிவ் மகனிற்கு வடிவில்லை என்ன தத்துவம் - மனதில் எண்ணி கொண்டன் -
ஒரு நாள் ஊரிலிருந்து யாழ்நகரிற்கு பஸ்சில் போகும் போது சில பெண்கள் சினிமா பற்றி கதைத்து கொண்டிருந்தார்கள் அங்கிருந்த ஒரு பெண் குறும்பிற்காக ஒரு ஆணை காட்டி "அந்த போயின் மீசை பாரடி கமலகாசன் மீசை மாதிரி இருக்கு என்று சொல்லி தங்களுகுள்ள சிரித்து கொண்டார்கள்".
இதை கேட்ட சுரேசிற்கு மீசை வளர்க்க வேண்டும் என்ற ஆசை தொடங்கிவிட்டது இளம் பெண்களிற்கு மீசை மீது ஒரு "இது" இருக்கிறது என்ற கருத்து அவனை அறியாமலே தட்டி கொண்டது அன்றிலிருந்து யார் சொன்னாலும் மீசை வெட்டுவதில்லை என்று நினைத்து வளர்க்க தொடங்கிவிட்டான் அதை அழகு படுத்துவதிலும் பல நேரம் செலவு செய்தான்.மேல் படிபிற்காக கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது சுரேசிற்கு.
தம்பி உந்த மீசையை சின்னதாக வெட்டி தலை மயிரையும் வடிவாக வெட்டி கொண்டு போ உன்னுடைய மாமா உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருவார் அங்கு போய் நல்லா படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.
பஸ்சில் போகும் போது ஆனையிரவு சோதனை சாடியில் பொலிஸ் உத்தோயோகத்தர் ஏறினார் ஒரு நோட்டம் விட்டார் கொஞ்சம் இளம் வயதினரை எல்லாம் பார்த்து கேள்வியை கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு இராணுவ சிப்பாய் ஏறி அவர் நேரடியாக சுரேஷ் இருக்கும் இருக்கைக்கு வந்தார் "கோயத யன்னே" சுரேஷ் முழுசினான் உடனே பொலிஸ் உத்தியோகத்தர் தமிழில் "எங்க போறாய் ஏன் போறாய்" என்று கேட்க படிக்க போவதாக கூறினான் இராணுவ சிப்பாயிற்கு சந்தேகம் தோன்றவே பொலிஸ் உத்தியோகத்திரிடம் சிங்களத்தில் ஏதோ சொல்ல அவர் தமிழில் சுரேஷேசிடம் மொழி பெயர்த்து உன்னை கீழே இறங்கட்டாம் என்றார்.
சுரேஷிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை பயந்து பயந்து தன்ட ஜடி மற்றும் உயர் கல்வி படிபிற்கான சகல ஆவணங்களையும் எடுத்து கொண்டு கீழே இறங்கினான் கீழே நாலைந்து இராணுவ சிப்பாய்கள் அதற்கொரு சார்ஜன்ட் தர அதிகாரி நின்றிருந்தான் அவர்கள் சிங்களத்திள் ஏதோ கேட்க அதில் இருந்த இன்னொரு இராணுவ சிப்பாய் கொச்சை தமிழில் விசாரனை தொடங்கினான் உனக்கு "கொட்டி" தெரியுமா?? நீ "கொட்டியாவா??" கொட்டி டிரெயினிங் எடுத்ததா??அவன் எல்லாதிற்கும் இல்லை இல்லை என்றே பதில் கொடுத்தான்.சுரேஷிற்கு அழுகை வரும் போல் இருந்தது, உன்ட மீசை புலி மாதிரி இருக்கு என்றான்.
உடனே அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிங்களத்திள் ஏதோ கதைத்தவுடன் அவர்கள் அதட்டலாக "யன்ட யன்ட" என்றார்கள்.பொலிஸ் உத்தியோகத்தர் அதட்டலாக பஸ்சில போய் ஏறு என்றும் டேய் தம்பி உந்த மீசையை வெட்டி போட்டு சின்ன பெடியன்கள் மாதிரி திரியுங்கோ என்று அதட்டி அனுப்பி வைத்தார்.கொழும்பு வந்தவுடன் மாமா வெள்ளவத்தை யாழ் பஸ் நிற்கும் இடத்தில் நின்று என்னை வரவேற்றார்.
மாமாவின் வீட்டில் இரவு உணவு தாயாராக இருந்தது சாப்பிட்டுவிட்டு பயண களைப்பால் நித்திரை ஆகிவிட்டான்.
காலையில் எழுதவுடன் மாமா அறிவுரைகள் சொல்ல தொடங்கிவிட்டார் தம்பி இங்க கொழும்பில் கவனமா இருக்க வேண்டும் யாழ்பாணத்தில் திரிந்த மாதிரி பெடியன்களோட திரிய கூடாது,தமிழன் என்று காட்ட கூடாது தமிழ் பெடியன்களை கண்டால் தமிழில் கதைக்க கூடாது தமிழ் பெடியன்களோட கூட்டம் நிற்க கூடாது முக்கியமாக உன்னுடைய உந்த மீசையை எடுத்து போடு உந்த மீசையும் கன்ன உச்சியும் அப்படியே தமிழன் என்று அடையாளம் காட்டி கொடுத்திடும் மாமாவின் ஆசைக்காக தனது ஆசை மீசையை துறந்தான் சுரேஷ்.
கொழும்பு வாழ்க்கை பிடிபட சிங்களம் ஆங்கிலம் என்று படித்து பட்ட படிப்பையும் முடித்து உத்தியோகம் பெற்று கொண்டான் அதே வேளை மீசையும் வளர்த்து கொண்டான் கணக்காளராக அவுஸ்ரெலியா செல்லும் சந்தர்ப்பமும் கிட்டியது.
விமான நிலைய குடிவரவு குடி அகழ்வு அதிகாரி ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் படம் வித்தியாசமாக இருக்கு என்று சொல்ல இவனும் அது மீசை இல்லாத போது எடுத்து கடவுச் சீட்டு இப்போது நான் மீசை வைத்திருக்கிறன் என்று கூற அவரும் சிரித்து விட்டு "விஸ் யூ ஒல் ட பெஸ்ட்" என்று முத்திரையை குத்தி கையில் கடவுசீட்டை கொடுக்கும் போது அதிகாரியின் பெயரை பார்த்தான் "பாலேந்திரா" என்று இருந்தது.மனதில் நினைத்து கொண்டான் இவர் தமிழராக்கும் என்று.
திருமணம் முடிந்து மனைவி அவனது மீசையை தடவிய படியே உங்களுக்கு இந்த மீசை வடிவாக இருக்கிறது என்றது இன்னும் அவனுக்கு நினைவில் நிற்கிறது.15 வருடங்களின் பின் இன்று அவனது மகள் உந்த "முஸ்டாக்கை" எடுத்து போடுங்கோ அல்லது "டை" பண்ணுங்கோ வெள்ள முடி தெரிகிறது என்றார் அவன் கண்டு கொள்ளவில்லை.
நீண்ட நாட்களின் பின் நண்பன் இங்கிலாந்தில் இருந்து வந்தான் அவனும் இவனை கண்டவுடன் மச்சான் என்னடாப்பா இந்த மீசை நரைத்து போய் இருக்கிறது வயசு போனது அப்படியே தெரியுது,என்னை பார் நான் முந்தி வடிவாக மீசை வைத்திருந்தனான் எடுத்து போட்டன் நீயும் எடுடாப்பா பத்து வயசு குறைத்து காட்டும் என்றான்.அந்த அறிவுரையும் அவன் கண்டு கொள்ளவில்லை.
"போனால் மயிர் வந்தால் மலை" என்று பழமொழி சொல்லுவார்கள் அதாவது ஒரு மயிற் தான் என்ற ரீதியில் ஆனால் அது வளர்வதிற்கே இவ்வளவு கருத்து வேறுபாடுகள்,தடைகள் வரும் போது ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதிற்கு எவ்வளவு தடைகள் கருத்துக்கள்,முரண்பாடுகள் வரும் என்று நினைத்து பார்க்கவே சுரேஷ்ற்கு முடியவில்லை

கண்ணாடி லெனின்

சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது.
கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு.
பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அந்த எண்ணத்தை பொய்யாக்கியது பக்கத்தில் இருந்த இளசுகளின் ஆங்கில உச்சரிப்புகளும்,கிளி பேச்சும்.
மேடையில் அங்குமிங்கும் ஓடி திரிந்து கொண்டு மைக்கை செட் பண்ணி கொண்டிருந்தாள் ஒரு தமிழன்பர்,இடைகிடையே இன்னும் சில நிமிடங்களிள் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று கூறி கொண்டே இருந்தார் ஒரு படியாக நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
பட்டுவேட்டி,விபூதி குறியுடன் சுரேஷின் வயதை ஒத்த ஒருவர் மேடையில் ஏறினார் அழகான மூக்குகண்ணாடி அணிந்திருந்தார் தனது பேச்சை அழகு தமிழில் தொடங்கினார்,தொடங்கு முதல் பக்தி பாடல் ஒன்றை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.பாரதியார்,மகாத்மா காந்தி போன்றோரின் சுகந்திர தாகம் பற்றியும்,ஆத்மீக சிந்தனைகள் பற்றியும் சில நகைச்சுவை துணுக்குகளை போட்டு சபையோரை அலுப்பு தட்டாம தனது பேச்சை அரங்கிற்றி கொண்டிருந்தார்.
மேடையில் பேசியவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே குரல் கேட்ட மாதிரி இருக்கே என்று கேட்டு கொண்டிருந்தான் சுரேஷ்,இதை உணர்ந்தவன் போல் சிவகுமாரும் என்ன மேடையில் பேசுவது தெரிந்த நபர் போல் இருக்கிறதா என்று கேட்டான்.
ஒம்டாப்பா அது தான் யோசித்து கொண்டிருக்கிறேன் கிளிக் பண்ணுதில்லையடப்பா என்றான் சுரேஷ் இவன் தான்டப்பா எங்களின்ட பள்ளிகூடத்தில் சீனியரா படித்த பிரசாந்.சோவித் யூனியன் சோவியத் நாடு என்ற பொரு சஞ்சிகை மாசம்,மாசம் அடித்து இலவசமாக உலகம் பூராகவும் விநியோகித்தவர்கள் அதை படித்து போச்சு கமீயூனிசம் படித்து கொண்டு திரிந்த பிரசாந் தான்,பிறகு ஏதோ இயக்கத்தில் சேர்ந்து இரண்டு வருசதிற்கு பிறகு வரும் போது கண்ணாடியும்,தாடியும் வைத்து கொண்டு ஊரில தனது பெயரை நாலும் பேர் கதைக்க வேண்டும் என்று பெண்கள் பாடசாலை முடியும் நேரத்திலும் மோட்டார் சைக்கிளில் ஓடி திரிந்து கொண்டு,நண்பர்களை தோழர்கள் என்று அழைத்து கொண்டு திரிவான் அவன் தானாடப்பா என்று கூறி முடிக்க முதலே சுரேஷ் அடாடா இவன் தான்டா "கண்ணாடி லெனின் ".அட இவன் இங்கையா இருக்கிறான் இவன் அப்பவே தமிழ் தேசியதிற்கு எதிர் கருத்து வைப்பவன் ஒன்று பட்ட இலங்கையில் கமினீயூசம் வளர்க்க வேண்டும் என்று புலம்பினவன் இன்று எப்படி புலத்தில் படைப்பாளிகளின் கலை நிகழ்ச்சியில் முன் நிற்கின்றான் என்று கேட்டான் சுரேஷ்.
பிரச்சாந் மேடைகளில் தான் தமிழ் தேசிய ஆதரவாக பேசி புலத்தில் வாழும் எம்மவர்களிடையே பிரபலாமா இருந்து கொண்டு புனை பெயரில் பத்திரிகைகளிளும்,வானொலிகளிள���ம் தேசியதிற்கு எதிரான கருத்தை வைக்கிறான்.அவனை பொறுத்தவரையில் பிரபலம் தான் முக்கியம் மற்றது எல்லாம் இரண்டாவது தரம் தான் என்றார் சிவகுமார்.
தூங்கிறவனை,தூங்கிறது போல் நடிக்கிறனவை எழுப்ப ஏலாது என்று கூறிய சிவகுமாரை பார்த்த சுரேஷ் வாடாப்பா இதற்கு மேலும் இந்த விழாவில் இருக்க மனமில்லை என்று கூறிய படியே எழுந்து சென்று விட்டான்.

அவையளுக்கு

கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா.இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ.நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள இருந்தால் உங்களுக்கு தெரியும் தானே வெளியிளே வரவே விருப்பம் இருக்காது வேலைக்கு போயிட்டு வந்தது மேலேல்லாம் ஒரே அலுப்பா இருக்குது அது தான் அதுகுள்ள கொஞ்சம் கூட நேரம் ஸ்பேன்ட் பண்ணிணான் அது சரி இப்ப யார் வந்திட்டு போனது என்று சொல்லுங்கோ. அது என்னுடைய பிரண்ஸ் அது தான் யார் என்று கேட்கிறேன்.எனக்கு விளங்குது யார் வந்தது என்று இங்கே அப்பா எங்களுக்கு வீட்டு கடன்,கார் கடன்,பிள்ளைகளின் படிப்பு சரியான பிரச்சினைகள் இருக்கு இதில அவைக்கும் காசு கொடுக்கிறது என்றா நாங்க எங்க போறது??என்று வழமையான பல்லவியை பாடி முடித்தாள் புஷ்பா.இந்த பிரச்சினையை தான் நானும் இரண்டும்,மூன்று தடவை சொல்லி ஒரு மாதிரி சமாளித்து விட்டன் ஆனால் இந்த முறையும் அப்படி சமாளிக்க மனம் இடமளிக்குது இல்லை இந்த முறை அவைகளுக்கு கொஞ்சமாவது கொடுக்க தான் வேண்டும் நீர் சொன்ன வீட்டு கடன்,கார் கடன் அந்த கடன் இந்த கடன் எல்லாம் இருக்கும் போது தானே "கோம் தியேட்டர்,சுவீமீங் பூல்,ஸ்பா" என்று எல்லாம் எங்களின்ட வீட்டிற்கு செய்தனாங்கள் ஆனால் அவைகளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறது என்றா மனம் வருதில்லை என்ன?கொஞ்சம் உணர்ச்சிவசபட்டவனாக கேட்டான் சிவா.சுவீமீங் பூல்.ஸ்பா,கோம் தியேட்டர் அந்த வசதிகளை தேவையில்லாம இதுகுள்ள எடுக்க வேண்டாம் இங்க நாங்க உழைக்கிறோம் ஒழுங்காக டக்ஸ் கொடுக்கிறோம் ஆனாபடியா அதுகளை அநுபவிக்க தானே வேண்டும் மேலும் இங்கே எல்லாரும் வசதியாக தான் இருக்கிறார்கள் என்றா புஷ்பா.உவையள் ஊரில கொடுக்கு கட்டி கொண்டு பங்கு கிணத்தில குளித்து இரண்டு வருசதிற்கு ஒருக்கா டவுன் தியேட்டரில பஸ்சில படம் பார்த்து வந்த கோஷ்டிகளின் பிள்ளைகள் இவர்களுக்கு இப்ப.ஸ்பா,சுவிமீங் பூல்,கோம் தியேட்டர் எல்லாம் தேவைபடுகிறது ஆனால் "அவையளுக்கு கொடுக்கிறது என்றா மட்டும் சட்டம் கதைக்க வந்திடூவீனம்"என்று உரக்க கேட்க வேண்டும் போல இருந்தது சிவாவிற்கு இருந்தும் மெளனமாக இருந்தான் காரணம் அவனுக்கே புரியவில்லை.

கனகரின் கதறல்

அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ.
நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா?
கட்டாயம் வருவேன் என்று கனகர் உறுதிமொழி அளித்தார்.கலோ கந்தர் போனை வைத்து போடாதையும் உம்மோட கொஞ்சம் கதைக்க வேண்டும் இல்ல சும்மா தான் கேட்கிறன் ஒவ்வொரு கிழமையும் எங்களுடைய தமிழர்கள் ஏதாவது கலை நிகழ்ச்சி வைக்கிறார்கள் ஆனால் எல்லாம் உக்கிரேனியன்,ரஷ்யன்,கங்கேரியன் என்று ஒவ்வொரு தேசிய இனங்களின் மண்டபத்தில் தானே வைக்கிறோம்.நாங்கள் எங்களுக்கு என்று ஒரு மண்டபத்தை கட்டி ஈழ தமிழர் மண்டபம் என்று பெயர் வைக்கலாம் தானே என்றார் மறுமுனையில் கந்தர் என்ன இரண்டு,மூன்று கிளாஸ் போயிட்டுதோ அது தான் செய்ய முடியாத காரியத்தை பற்றி கதைக்கிறீர் ஒரு மண்டபம் கட்டுவது என்றால் எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமோ அது போக பிறகு நிர்வகிப்பதிற்கு எவ்வளவு செலவும் வரும் இதற்கு எல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.
கனகரும் பதிலிற்கு எங்களுடைய ஆட்கள் கோயில்கள் பல கட்டீனம் தானே அதுக்கும் சரியான பணம் செலவும் ஆகும் தானே கோயில் கட்டுவதன் மூலம் நாங்கள் இந்து,இந்தியன் என்று தானே எங்களை முத்திரை குத்தி காட்டுகிறோம் ஏன் ஒரு தமிழன் பெயரில் தமிழ் மண்டபம் கட்ட கூடாது என்று கேட்க கந்தருக்கு கடுபாகி,எங்களுடைய மூதாதையோர் என்ன சொல்லி இருக்கீனம்.கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று தானே பிறகென்ன கேள்வி அது போக கோயில் தான் நல்ல வருமானம் வரும் இப்போ உதாரணதிற்கு உம்மிடம் தமிழர் மண்டபம் கட்டுவதிற்கு என்று பணம் கேட்டு நாலு தமிழர்கள் வந்தால் நீர் என்ன சொல்லுவீர்,இப்ப வசதி இல்லை வீட்டு கடன்,கார் கடன்,கிரடிட் கார்ட் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று புலம்பி தள்ளுவீர் அடுத்த முறை வாங்கோ தாரேன் என்று அடுத்த முறை வந்தாலும் இதை தான் சொல்லுவீர்.
ஆனால் கோயிலிற்கு காசு என்று வந்தால் சத்தம் போடாமல் கொடுத்து போடுவீர் தானே நீரே தமிழ் மண்டபம் கட்டுறது என்றா பணம் கொடுக்க மாட்டீர் பிறகு வந்திட்டீர் பாடம் புகட்ட என்று கந்தர் தொலைபேசியை துண்டித்து கொண்டார் கனகருக்கோ ஏமாற்றம் தான் நியாயமான கருத்தை சொன்னாலும் தண்ணியில் சொன்ன கருத்து என்று கனகர் கண்டுக்காம விட்டதை நினைத்து மனகவலையில் குடிகாரன் பேச்சு விடிந்தா போச்சு என்று இன்னும் உற்சாக பானத்துடன் தனது உறவை பலமாக வளர்த்து கொண்டான்.

அவளா இவள்

" காய் யூ ஆர் மிஸ்டர் சிவகுமார் வுரோம் ஜவ்னா "என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திடுகிட்டவனாய் யேஸ் என்றான் சிறிது நேரம் முழித்து கொண்டு இருந்த சிவாவை பார்த்து நான் தான் சந்திரவதனி உங்களுடன் படித்தனான் நினைவில்லையா என்று கேட்டா பிறகு தான் அவளை அடையாளம் காணமுடிந்தது சிவாவிற்கு.சிவா தனது கீதாவிற்கு சந்திரவதனியை அறிமுகபடுத்திவிட்டு மூவரும் கதைத்து கொண்டிருந்தார்கள் "சிவா நீங்கள் அப்படியே பாடசாலையில் படிக்கும் போது இருந்த மாதிரியே இருக்கிறீங்க தலைமையிர் தான் கொஞ்சம் நரைத்திருக்கிறது என்றவள் தான் மருத்துவராக அமேரிக்காவில் பணிபுரிவதாகவும் இரண்டுகுழந்தை இருப்பதாக கூறியவள் கணவரை பற்றி கூறவில்லை சிவாவும் அவனை பற்றி கேட்கவில்லை.விடைபெற்று கொண்டு சென்ற சந்திராவையே பார்த்து கொண்டிருந்தா சிவாவை அவனது மனைவி என்னப்பா அவளையே பார்த்து கொண்டிருக்கிறீங்க பழைய நினைவுகள் ஏதாவது ஞாபாகம் வருகிறதா என்று கிண்டலாக கேட்டவுடன் அவன் சுயநினைவுக்கு வந்தான்.
சந்திரா எங்களுடன் படிக்கும் போது இரட்டைபின்னலும் பிண்ணி ஆணைகோட்டை நல்லெண்ணேயும் வைத்து அந்த எண்ணேய் நெற்றியிலும் சாதுவாக படந்திருக்கும் ஒரு கறுத்த ஸ்டிக்கர் பொட்டும் வைத்து கொண்டு பிளீட்டட் அரைபாவடை சட்டை,பாட்டா செருப்பு போட்டு கொண்டு வரும் பொழுது அழகாக தான் இருக்கும் நானும் பார்த்து மனகோட்டை கட்டினது தான் இல்லை என்று சொல்லவில்லை என்றவனை பார்த்த மனைவி கீதா "இப்ப என்ன அவள் என்னைவிட வடிவாக இருக்கிறாளோ என்று சற்று பொய் கோபத்துடன் கேட்டாள்" உடனே சிவா இல்லையப்பா அப்ப பார்த்த சந்திராவிற்கும் இப்ப பார்த்தவுடன் வாயடைத்து போயிட்டேன்.
இப்ப தலைமயிரும் அழகாக வெட்டி சாதுவான மரூன் கலரும் அடித்து டீசார்ட்,ஜீன்ஸ் என்று வரும்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது அது தான் பார்கிறேன் அவளா இவள் என்று.

பிரசாதம்

சிவாவின் அலுவலகம் அன்றும் வழமை போல பிசியாகவே இருந்தது தங்களிற்குரிய பணியை எல்லோரு ம்செய்து கொண்டிருந்தார்கள் மதிய உணவு இடைவேளை வரும்வரை எல்லோரும் மந்திரிக்கபட்ட மனிதர்கள் போல் கணணி,தொலைபேசி என்று ஒன்று தாவி இன்னொன்றிற்கு பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவு வந்தது கூட சிவாவிற்கு தெரியவில்லை.கம் சிவா வீ வில் கோ வோ லஞ் என்று ஸ்டெல்லா அழைத்ததும் அவனிற்கு மதிய உனவு ஞாபகமே வந்தது உடனே அவன் தனது உணவை மைகோரேவில் வைப்பதிற்கு எடுத்து செல்லும் போது அவனது மணம் நேற்று வைத்த இறால் குழம்பு,இறால் பொறியல் எல்லாம் இருக்கும் ஒரு சின்ன வெட்டு வெட்டலாமென்று நினைத்து கொண்டு மைகோரேவேவில் வைத்த சூடான உணவை திறந்து பார்த்த போது ஒரே ஏமாற்றம் தான் காத்திருந்தது அதில் இருந்ததோ மரகறி சைவ உணவுகள். அவன் சிறிது நேரம் சிந்தித்து இன்று வெள்ளிகிழமையா இல்லையே வியாழகிழமை தானே என்று உறுதியானதுடன் மனைவி சுதாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மரகறி சப்பாடுஅ என்ன விசயம் என்று கேட்ட போது சுதா கொஞ்ச உரத்த குரலில் சிவா இன்று "பாபாவின் நாள்" ஆனபடியால் தான் மரகறி இனிமேல் ஒவ்வொரு வியாழகிழமையும் மரகறி தான் என்றாள்.ஏனப்ப வெள்ளிகிழமை மரகறி தானே சாப்பிடுறனாங்கள் பிறகேன் வியாழகிழமையும்.உங்களுக்கு விருப்பம் என்றால் வெள்ளிகிழமை மச்சம் சாப்பிடுங்கோ ஆனால் வியாழகிழமைகளிள் இனிமேல் பீளீஸ் மரகறி தான் சாப்பிடுங்கோ என்றாள் சரி என்று தொலைபேசியை துண்டித்து கொண்டான் சிவா.
சுதா பணிபுரியும் இடம் பாபாவின் பக்தர்கள் அதிகம் நிறைந்த இடம் அது தான் இப்படி உரத்த குரலில் சொல்லுகிறாள் என்று சிவாவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டது வேலை முடிந்து வீடு வரும் பொழுது மகள் சாய்மீராவிற்கும் தனக்கும் மக்டோனால்சில் பேகர் வாங்கி வந்தவன்,மகளும்.சுதாவும் பஜனை போவதாக ஞாபகம் வரவே தனது பங்கை சாப்பிட்டுவிட்டு மகளின் பங்கை குளிர்சாதனபெட்டியில் வைத்து விட்டு அவன் தொலைகாட்சியில் மூழ்கிவிட்டான்.
"டாட் காய் என்று ஒடி வந்த மகள் தனது கையில் இருந்த பொதியை கொடுத்து கியர் பிரசாதம் சாப்பிடுங்கோ என்று அன்போடு கொடுத்து தோலில் பாய்ந்து கொண்டாள் அவனும் பொங்கல்,சுண்டல்,அவள் ஏதாவது இருக்கும் என்று திறந்து பார்தான் உள்ளே இருந்ததோ ஒரு மரகறி சான்விச் மற்றும் கேக் இரண்டு மூன்று பெயர் தெரியாத இனிப்பு பண்டம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
பிள்ளை எனக்கு பிரசாதம் தந்தபடியா பிள்ளைக்கு "மக்கி" வாங்கி வைத்திருகிறேன் போய் எடுத்து சாப்பிடுங்கோ என்று மகளுக்கு சொல்ல அவளும் ஆர்வத்துடன் எடுத்து சாப்பிட தொடங்க மனைவி சுதா ஓடிவந்து உங்களுக்கு என்ன விசரா இன்றைக்கு வியாழகிழமை டிவோர்டிஸ் ஒருத்தரும் மச்சம் சாப்பிடகூடாது நீங்கள் சாப்பிட்டது போதாது என்று பிள்ளைக்கும் கொடுத்து அவளையும் கெடுத்து போடுங்கோ என்று ஏதோ பயங்கரகுற்றம் செய்தது போல் கத்தினாள்.
சிவாவின் மன உலகம் சிறிது நேரம் சிந்திக்க தொடங்கியது எனது அம்மா நாங்கள் சைவர்கள் வெள்ளிகிழமை எங்களது புனித நாள் மரகறி தான் சாப்பிடவேண்டும்.பொங்கல்.சுண்டல்,அவள் இதுகள் தான் பிரசாதம் என்ற கருத்தை எனக்கு புகட்டினாள் அவாவின் அம்மா இந்த கருத்தை வாவிற்கு புகட்டி இருப்பா ஆனால் இப்போது நாங்கள் பாபா டிவோர்டிஸ், வியாழகிழமை புனித நாள் பாண்,கேக் பெயர் தெரியாத இனிப்பு பண்டங்கள் எல்லாம் பிரசாதம் என்ற கருத்தை எனது மகளின் அம்மா எனது மகளிற்கு புகட்டுகிறாள் என்று நினைத்து கொண்டிருக்கும்போது.டாட் அம்மா நித்திரை கொண்ட பிறகு எடுத்து சாப்பிடுவோம் என்று மெல்ல அவன் காதில் மகள் சாய்மீரா சொல்ல தான் நனவுலகிற்கு திரும்பினான் சிவா ஓம் மீரா ஆனால் அடுத்த வியாழகிழமை "மக்" சாப்பிடகூடாது என்றவனிடம் ஓம் "டாட்" என்ற மீரா அவளது மடியிலேயே தூங்கிவிட்டாள்.

நவீன கூலிகள்

அன்று வெள்ளிகிழமை அலுவலகத்தில் கண்ணன்,ராதாகிருஷனன்,பழனியாண்��ி ஏனையோர் எல்லோரும் தங்கள் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்கள் வெள்ளை இனத்தவர்கள் மதிய உணவு வேளையுடன் பப்பிற்கு என்று சென்றுவிட்டார்கள்.
பழனியாண்டியின் தாத்தா வெள்ளையர்களின் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளராக இலங்கைக்கு சென்றவர் பின்பு அங்கே தங்கி இலங்கை பிரஜா உரிமை பெற்றுவிட்டார் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கும் கொண்டு வந்தவர்.ஆகையால் பழணியாண்டியும் அவுஸ்ரெலியாவிற்கு குடிபெயர தொழில்சார் கல்வி தகைமை கொண்டவானாக இருந்தான்.
ராதாகிருஷ்ணண் பெயர் தான் இந்து பெயர் ஆனால் அவனுக்கு தமிழ் தெரியாது கிந்தி நல்லா தெரியும் காரணம் அவன் பிஜி தீவுகளிள் வசித்தவன் அவனுடைய பெற்றோர் தமிழர்கள் ஆனால் பிஜியில் கரும்பு தோட்ட தொழிற்காக வெள்ளையர்களாள் அழைத்து வரபட்டு கிந்தி பெருமான்மையுடன் சேர்ந்து இந்டியன் என்ற அடையாளத்தை பெற்று கிந்தி மொழியை பாடங்களாக பயின்று,தமிழ் பெயரை தவிர தமிழன் என்று சொல்ல வேறு எந்த அடையாளமும் அற்றவன்.
கண்ணண் இந்தியன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் கணணி நிபுணண்,இந்தியன் என்று பெருமையாக பேசுபவன் மூவரும் தமிழர்கள் ஆனால் அடையாளங்களை இழந்த தமிழர்கள்,மூவரும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள் நிறம்,மொழி,மதம் ஒன்றாக இருந்தும் அவர்களாள் தமிழால் பேசமுடியவில்லை.அன்றும் மூவரும் மேலதிகாரி இல்லாதபடியா அதிகமாக பேசினார்கள்,வழமை போல் கண்ணண் இந்திய பெருமைகளை பேசினான்.இந்தியாவை விட்டால் உலகில் வேறு ஒருத்தரும் இல்லை என்றும் அமெரிக்கா முதல் அவுஸ்ரெலியாவரை இந்தியர்கள் கணணியில் கொடிகட்டி பறகிறார்கள் இந்தியர்கள் இல்லாதுவிடில் உலகமே இயங்காது என்ற மாதிரி அளந்து கொண்டே சென்றான்.
நீங்கள் கொடிகட்டி பறக்கலாம் ஆனாலும் உங்களை அவன் கூலிகளாக தான் பாவிகிறான் என்பதை அம்றந்துவிட வேண்டாம் ஒரு காலத்தில் எங்கள் மூதாதையர்களை கரும்பு தோட்டதிற்கும்,தேயிலை,இறப்பர் தோட்டதிற்கும் வேலை செய்வதிற்கு கூலிகளாக வெள்ளையர்கள் கப்பலில் அழைத்து வந்தார்கள் அவர்களும் பொருளாதர நிலைமை காரணமாக குடிபெயர்ந்தார்கள் பிஜி,இலங்கை,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிற்கு.இப்போழுது தொழில்சார் நிபுணர்கள் என்ற ரீதியில் விமானத்தில் நாங்களே கூலிகளாக சொந்த விருப்பில் வருகிறோம்.அந்த அள்விற்கு வெள்ளைகாரர்கள் தங்கள் நாட்டை செழிமையாக வைத்துள்ளார்கள் அதனால் நாங்கள் கூலிகளாக வேலை செய்கிறோம் உங்கள் நாட்டில் சனத்தோகையில் 15- 20% மான இவர்களின் பொருளாதார கல்வி நிலைமைகளை வைத்து கொண்டு நீங்கள் கொடிகட்டி பறக்கிறீங்கள் என்று சொல்ல ஏலாது 80% வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை பற்றி சிந்தியுங்கள் என்று பழனியாண்டி கூறியதை ஆமோதிப்பதை போல் ராதாகிருஷ்ணணும் நாங்கள் எல்லோரும் ஒரு விதத்தில் நவீன கூலிகள் தான் என்றவன் இந்த கம்பெனியில் வேலை செய்யும் ஏனைய சமூகத்தவர்கள் வேலை பற்றி கவலைபடாது வீடு சென்று விட்டார்கள்.ஆனால் நாங்கள் ஏனும் வேலையில் நிற்கிறோம் ஏனெனில் எங்களின் அடிமை குணம் மாறவில்லை அத்துடன் பணத்தின் மீது எமக்கு இருக்கும் மோகம் என்று சொன்ன ராதாகிருஷ்ணண் நேரத்தை பார்த்தான் 7 மணி காட்டியது மூவரும் வேலை செய்த நேரம் 8 மணி வரை என்று பதிவு செய்து வீடு செல்ல தயாரானார்கள்.

அரோகரா!!ஆலேலோயா!!

சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள்.
க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதாகவும் இருந்தான்.கண்ணணை கண்டால் சிறிது அட்வைஸ் பண்ணவும் செய்தான் கோயிலிற்கு வரும் படியும் வறுபுறுத்தினான்,சிவா கோயிலிற்கு சென்று அங்கு தேவாரம் படித்து முதியோரிடம் ஆத்மீக கதைகளும் கதைத்து வீடு வருவான்.சிவாவின் குரலையும் ஆத்மீக பற்றையும் முதியோர்கள் பாராட்டினால் அவனுக்கு அது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் அதை கண்ணணிடமும் தன் சக நண்பர்களிடமும் சொல்லி பெருமைபடுவான்.
ஒரு முறை மாக்கான் கடையில் கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடதாக கண்ணண் சொல்ல இன்று வெள்ளி கிழமை ஏன் மாட்டு இறைச்சி போட்ட கொத்துரோட்டியை சாப்பிடாய் என்று திட்டினான்,பரிட்சை முடிவுகளும் வந்தது சிவாவிற்கு பல்கலைகழகம் கிடைக்கும் என்று உறுதியான முடிவு கிடைத்தது கண்ணணுக்கோ தந்தி கம்மி முடிவு தான்( 4 வெயில்)கண்ணணுக்கு பெற்றோர்களிடம் திட்டு விழுந்தது உன்னோடு படித்தவன் பல்கலைகழகம் செல்ல போகிறான் நீ சும்மா ஊற் சுற்றினது தான் மிச்சம் என்று.கண்ணணுக்கு தொடர்ந்து ஊரில் இருக்க விருப்பமில்லாம வெளிநாடு செல்ல ஆயத்தங்கள் செய்து வெளிநாடும் புறபட்ட்டுவிட்டான்.
நீண்ட நாட்களின் பின் தொலைபேசி அழைப்பு வந்தது நான் சிவாஸ் பேசுகிறேன் என்று ஆங்கிலத்தில் உரையாடினான்,அவனது பேச்சில் ஒரு தமிழ் வார்த்தை கூட இடம்பெறவில்லை ஒரு மதபோதகர் போல் உரையாடினான். தான் கனடாவில் உறவினர் வீட்டில் வந்து நிற்பதாகவும் வந்து தன்னை சந்திக்கும்படியும் கூறி இருந்தான்.
கண்ணணும் மகிழ்ச்சியுடன் உற்சாக பான போத்தல் இரண்டை காரிற்குள் போட்டு கொண்டு நண்பனை சந்திக்க சென்றான்.கண்ணணை கண்ட சிவாவும் கட்டி அணைத்து பரஸ்பரம் சுகம் விசாரித்தனர்.சிவாவின் உறவினர்கள் சிவாவை ஜேசு ஜெபத்தை தொடங்குவோமா என்று அழைத்தது கண்ணணை திடுகிட வைத்தது.அப்பொது தான் சிவா சொன்னா தான் கிறிஸ்தவானக மாறிவிட்டான் என்றும் உன்னையும் இன்று ஜெபத்தில் பங்குபற்ற தான் அழைத்தனான் என்று கூறியவன் கண்ணணிண் பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்த கூட்டத்துடன் சேர்ந்து "ஆலேலோயா" என்று ஜெபிக்க தொடங்கிவிட்டான்.
சிவாவுடன் சேர்ந்து பழைய நினைவுகளை மீட்கலாம் என்று உற்சாக பானத்துடன் உற்சாகமாக சென்றவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.மனிதனி மன உலகம் இவ்வளவு மலிவானதா மாற்றம் அடைய கூடியதா நினைத்து கொண்டு வீடு வந்து தனிமையில் உற்சாகபானத்துடன் உற்சாகமாக இருக்க தொடங்கிவிட்டான் கண்ணண்.

பொருள் உலகம் நிர்ணயிக்கும் ஆத்மீகம்

சிவா இந்த வருடம் நாங்கள் பாபாவின் பிறந்தநாளிற்கு புட்டபத்திக்கு போகும் போது ஒருக்கா கொழும்பிற்கும் போயிட்டு தெகிவளை ஆஞ்சேநேயர் கோயிலிற்குன் போயிட்டு வர வேண்டும் என்று சுதா சொன்னதை கேட்ட சிவா ஏனப்பா போனமுறை தான் புட்டபத்திக்கு போயிட்டு வந்தனாங்கள் இரண்டு மூன்று வருசத்தால போகலாமே என்று சிவாவை பார்த்த சுதா உங்களிற்கு என்ன விசரா பாபாவின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் வாரேன் என்று மனதிற்குள் நான் அப்பவே நினைத்துவிட்டேன் ஒவ்வொருவருடமும் போக வேண்டும் இது பாபாவின் விடயம் இதில் ஒரு மாறுதலும் இல்லை சொல்லிபோட்டேன்.இப்ப நாங்கள் இந்த அவுஸ்ரெலியாவில் சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழுகிறோம் என்றா அதற்கு அந்த பாபா தான் காரணம்.
புட்டபத்தி போய் அவருடைய தரிசனம் கிடைத்து 2 கிழமையாவது அந்த சூழலில் இருந்தால் தனிசுகம் தான் அது எல்லாம் உங்களிற்கு விளங்கபோகுது கொஞ்சமாவது பயபக்தி இருக்க வேண்டும் என்றவளை பார்த்த சிவா"அடியே நாங்கள் இருகிறதிற்கு காரணம் பாபா இல்லை கப்டன்குக்கும் அவனுடைய படைகளும் காரணம் அத்தோடு நாட்டில் இருகிற பிரச்சினை எனது பட்டபடிப்பு இதுகள் தான் காரணம் என்று கத்தை வேண்டும் போல் இருந்தது"இருந்தாலும் தன்னியலாமையை நினைத்து நொந்து கொண்டான்.
எனது பெற்றோர்கள் அன்று கிரமாத்தில் இருந்து பட்டினத்தில் இருக்கும் நல்லூர் கந்தனை தரிசிக்க பண வசதி இல்லாம வருடத்தில் ஒரு நாள் நடந்து தேர்திருவிழா பார்க்க செல்வார்கள் அவர்களிற்கு ஒவ்வொருநாளும் போக வேண்டும் என்று ஆசை இருந்தும் பண வசதி இன்மையால் முடியவில்லை.கடல் கடந்து நயினை நாகபூசனி அம்மனை தரிசிக்க முடியவில்லை இராமேஸ்வரம் போகமுடியவில்லை எவ்வளவு ஆத்மீக ஆசைகளை நிறைவேற்றமுடியவில்லை காரணம் அவர்களின் பொருளாதார நிலைமை.
ஆனால் இன்று மனிதசாமியின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் சென்று ஆத்மீக ஆசைகளை நிறைவேற்ற அவளின் பொருளாதர நிலைமை சீராக இருக்கின்றது,ஆத்மீக ஆசைகளையும் நிறைவேற்றிகொள்ள பொருள் உலகம் தான் நிர்ணயிகிறது என்று தனது மனதிற்குள் சிவா நினைத்து கொண்டு விமான டிக்கடை புக் பண்ண தொலைபேசியை எடுத்தான்.எல்லாம் பாபாவின் செயல் என்று சொல்ல வந்தவன் எல்லாம் டொலரின் செயல் என்று தனகுள்ளே சிரித்து கொண்டான்.

பொருள் உலகம் நிர்ணயிக்கும் காதல்

சிவா நேற்று இரவு தனது மகன் சுரேஷ் சொன்ன வார்த்தையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாம குழம்பி போய் இருந்தான் 24 வயசு தான் சுரேசிற்கு, 22 வயசு தான் சுரேசின் தங்கைச்சியான சுதாவிற்கு.சுரேஷ் புலத்தில் பிறந்து ஏனைய தமிழ் பிள்ளைகளை போல் நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது ஒரு அழகான வீடும் வாங்கி விட்டான்.
இவா தான் என்னுடைய கேள் பிரண்ட் இவா தான் கல்யாணம் கட்ட போறேன் என்று தன்னுடைய கேள் பிரண்டை அறிமுகபடுத்தினான் தன் தகப்பனிற்கு,சிவாவும் மிச்சம் நல்லம் என்று புன்முறுவலுடன் கை கொடுத்தான்,சுரேஷின் காதலியை முதலே சிவாவிற்கு அறிமுகமானவள் தான்.ஆனால் சுரேசின் காதலி என்று அல்ல நண்பணின் மகள் என்ற ரீதியில்.
சிவா தனது இளமை பருவத்தை அசைபோடுகிறான்,க.போ.த உயர்தரம் மூன்றாம் தரம் சோதனை எடுபதிற்காக டியூசன் செல்லும் போது தான் அங்கு முதல் தடவையாக மாலதியை கண்டு காதல் கொண்டது அவளும் பயந்து தன் காதலை வெளிபடுத்தினது,பிறகு இருவரும் சைக்கிளிள் செல்வது உயர்தர பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும் தான் பேராதனைபல்கலைகழகதிற்கு சென்றது மாலதிக்கு யாழ்பல்கலைகழக விஞ்ஞானபீடம் கிடைத்தமை,விடுமுறைகளிள் யாழ்வரும் போது பெற்றோர்களிற்கு தெரியாம மாலதியை சந்திபது ஆனாலும் ஊர் மூலம் அம்மாவிற்கு தெரிய வர அவாவும் தன்னுடைய பங்கிற்கு அப்பரிடம் பத்த வைக்க பிறகு இருவருமாக சேர்ந்து காதலை பிரிக்க கூறிய காரணங்கள்,தம்பி மாலதியை மறந்து போடு அவள் வீட்டில் மூத்த பிள்ளை மற்ற இரண்டு பெட்டைகளையும் அவள் தான் பார்க்க வேண்டும் நீ அவளை கட்டினா உன் தலையில் தான் எல்லா பொறுப்பும் விழும்,அவர்களுடைய அப்பாவும் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் தானே அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது உனக்கு தம்பியும்,தங்கைச்சியும் இருக்கீனம் அவர்களை படிபித்து கல்யாணம் கட்டி வைக்கிறது எல்லாம் உன் பொறுப்பு.அப்பாவும் நீ படித்து முடிய முன்னம் ஓய்வு பெறவேண்டும் என்று ஒரு அழுகையுன் தன் எதிர்பார்புகளை சிவாவின் தாயார் கூற,பெற்றோரின் விருப்புக்கு ஏற்ப காதலை துறந்து படித்து பட்டம் பெற்று பொறியளாராக இலண்டன் வந்து பின் தங்கைக்கு இலண்டண் மாப்பிளை கட்டி வைத்தது,தம்பியை இலண்டணிற்கு வரவழைத்து படித்தமை ,பின் சிவா நாடு சென்று இலண்டன் மாப்பிளை என்று பெற்றோர் நிச்சயித்த பெண்ணை தனது 35 வயசில் சிவா திருமணம் செய்து இலண்டண் சென்று குழந்தை செல்வங்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது,அவுஸ்ரெலியா நல்லதாம் குழந்தைகளின் எதிர்காலம் நல்லதாம் அத்துடன் காலநிலையும் கிட்டதட்ட எங்களுடைய ஊர் மாதிரி என்று மனைவியின் உறவினர்கள் கூறியதிற்கு இணங்க அவுஸ்ரெலியாவில் குடி பெயர்ந்து சகல பொருளாதார வசதிகளுடன் பிள்ளைகளும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த் இவ்வேளையில்.......
"டாட் இவா என்னுடைய கேள்பிரண்ட் இவாவை நான் திருமணம் செய்ய போறேன் என்று சுரேஷ் "வெளிபடையா சிவாவிடம் சொல்லி விட்டு போயிட்டான் ஆனா அவரோ தனது பழைய நினைவில் ஆழ்ந்து போய் மனைவி கூப்பிட திடுகிட்டு எழும்பி,அந்த நாளிள எனக்கு பொருளாதார சூழ்நிலையால் மாலதியை கைவிட நேர்ந்தது ஆனா இன்று நம்ம பெடியன் பொருளாதாரத்தில் நல்லா இருகிறான்,அவனிற்கு வேற என்ன கவலை இருகிறது என்று வாயிற்குள் முணுமுணுத்தபடி மனைவியிடம் செல்கிறார்...பொருள் உலகம் தான் காதலை வெற்றியடைய செய்யும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்....

தேடாமல் தேடி வந்தது

பள்ளி பருவத்தில் கல்வியை தேடினேன் பெற்றோர்களின் முயற்சியால் பல்கலைகழகம் செலவதிற்கு ஏற்ற கல்வியை பெற்றேன்.பட்டதாரி என்ற அந்தஸ்து கிடைத்தது.சாதாரன நடுதர வர்க்கத்தை சேர்ந்த நான் நடுதர வர்க்கத்தில் மேல்தட்டு வர்கதிற்கு போக வேண்டும் என்ற ஆசை பொருளை தேட தூண்டின அதற்கு எனது பட்டதாரி என்ற பட்டம் கைகொடுத்தது.
பிரபல வர்த்தகர் தனது ஒரே பெண்ணிற்கு படித்த மாப்பிள்ளை தேடி கொண்டு இருந்தார் தரகர் வீடு வந்து எனது பெற்றோரிடம் சொன்னதை கேட்டு கொண்டிருந்தேன்,மாப்பிள்ளைக்கு பெண்ணின் தந்தை தனது வர்த்தக ஸ்தாபனத்தை சீதனமாக கொடுப்பதாகவும் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதிற்கான செலவுகளை தானே கவனித்து கொள்வதாக சொன்னவுடன்,எனக்கு பெண்ணை பார்பதை விட பணத்தை பார்பதிற்கான ஆசை தோன்றவே எப்படியாவது அந்த பெண்ணை கல்யாணம் கட்டிவிடுவாதக முடிவெடுத்தேன்.
அம்மா கொஞ்சம் சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று இழுதடிப்பாள் என்ற பயம் இருந்ததால் நேரடியாகவே அம்மாவிடம் "சாதகத்தை தூக்கி கொண்டு போய் சாஸ்திரிமாரிடம் காட்டாமல் உங்களுக்கு விருப்பம் என்றால் உடனே செய்து விடுங்கோ எனக்கு உந்த சாஸ்திரங்களிள் நம்பிக்கை இல்லை என்று ஏதோ பகுத்தறிவாளன் என்ற தோரணையில் சொல்லிவிட்டேன்"
அம்மாவும் சரி நாளைக்கு போய் பெண்ணை பார்க்கலாம் எல்லாம் சரி என்றால் கல்யாணத்தை அடுத்த மாதம் வைக்கலாம் என்றாள்
தனிநபர் வர்த்தக ஸ்தாபனத்தை "லிமிட்டட் கம்பனி" என்ற தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற தேடலில் மூழ்கி வெற்றியும் பெற்றேன் "கம்பனி டிராக்டர்"என்ற பதவியையும் பெற்று கொண்டேன் கல்யாணத்தின் பின் காமதேடல் நாளுக்கு நாள் அதிகமாகவே,மனைவியிடம் கிடைத்தை விட வெளியில் அநுபவிக்கும் ஆசை தூண்டவே சபலத்திற்கு ஆளாகி அந்த தேடலிலும் ஒரு கரை கண்டேன்.வீடில் ஒரு உத்தம புருஷனாகவும் "ரோல் மொடலாகவும்" காலத்தை தள்ளினேன்.
குழந்தைகள் வளர்ந்து வர எனது தேடலும் தொடர்ந்து கொண்டே சென்றது புகழ் என்ற தேடலிற்கும் அடிமை ஆனேன் கோவில்,முதியோர் இல்லம்,சமூக சேவை நிறுவனங்களிற்கு அன்பளிப்பு என்ற போர்வையில் பணத்தை கொடுத்து எனது புகழ்மாலையை நானே வாங்கினேன்.தர்மகர்த்தா,கொடைவள்ளள் போன்ற பட்டங்கள் ஓட்டி கொண்டன மனம் மகிழ்ந்தேன்.
சில பழைய நினைவுகள் (சின்னவீடு,வியாபார கழுத்தறுப்புகள்) மனதை நெருட,ஆத்மீக தேடல் மூலம் அமைதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஆத்மீக குருவை தேடி அலைந்தேன் ஊரில் தேடினேன் அயல் நாட்டிலும் தேடினேன்.ஆத்மீக குரு தனது மன நிம்மதியை தொலைத்து விட்டு நிற்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.இவர்களாள் எனது மனதிற்கு அமைதி கிடைக்க போவதில்லை என்ற எண்ணத்தில் இருக்கும் போது வலது பக்கம் நெஞ்சும் வலிக்க தொடங்கியது.பிரபல மருத்துவராக பணிபுரியும் எனது மகனை தொடர்பு கொண்டு விடயத்தை கூறினேன்.அவன் அம்புலன்ஸ் அனுப்புகிறேன் உடனே வாங்கோ நான் "டெஸ்ட்" பண்ணுகிறேன் என்றான்.
அரை மணித்தியால பரிசோதனை எல்லாம் முடிந்தது இன்று பின்னேரம் உங்களிற்கு "பைபாஸ்" செய்ய வேண்டும் என்னும் இரண்டு நாள் விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றான்.
நான் அதிர்ந்து போய்விட்டேன் எவ்வளவு தர்மங்கள் செய்து இருப்பேன் எனக்கு ஏன் இப்படி வந்தது என்றேன்.அவன் உங்கள் வயது மற்றது "ஸ்ரேஸ்"(மன உளைச்சள்) என்றான்.என்னவெல்லாம் தேடினேன் ஆனால் இதை நான் தேடவில்லை தேடாமல் வந்த இதை நான் என்ன செய்ய?