Thursday, April 20, 2017

நமச்சிவாய

ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான்.
"சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான்
கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து  அமர்ந்திருந்தார்.
"என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப  பழகிட்டியோ"
"நீச்சலுக்கு வரயில்லை"
"பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு  வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே"
"சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான்அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள்போலகிடக்கு"

"என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மனசு கொஞ்சம் ததும்பத்தான் செய்யுது,மகனும் மருமகளும் வெளியாலபோயிட்டினம்,அதுதான் நான் உவங்களை கூட்டிக்கொண்டு வந்தனான்"

கந்தரின்ட பேரன் ஒருத்தனுக்கு மூன்று வயதுதான் இருக்கும் கையில்  போனை வைச்சு விளையாடிக்கொண்டிருந்தான் மற்றவன்ஆறு வயசிருக்கும்  தடாகத்தில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தான்.
"‍ஹாய் உங்கன்ட பெயர் என்ன"
திரும்பி ஒரு முழுசு முழுசிப்போட்டு மீண்டும் ஐபோனில் இளையான் கலைத்துகொண்டிருந்தான்.
"நீ என்னடாப்பா ஊர் பெடியளிட்ட கேட்கிறமாதிரி அவனிட்ட தமிழில் கேட்கிறாய் அவங்களுக்கு தமிழ் தெரியாது"
"ஏன் அண்ணே நீங்கள் தமிழ்தானே அவங்களோட தமிழில் கதைக்கலாம் தானே"
"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"
சொல்லி போட்டு தன்னுடைய பேரன்களை பற்றி புகழத்தொடங்கினார்.
"உவன் இருக்கிறானே அண்ணனை வென்டவன் .ஐபொனுக்குள்ள புகுந்து விளையாடுவான்.எனக்கு தெரியாதெல்லாம் அவனுக்குஅத்துப்படி."
"எத்தனை வயசு "
"இப்பதான் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடினவன்.,காலையிலிருந்து பின்னேரம் வரை உதை வைச்சு நோன்டிகொண்டிருப்பான்  செய்யிற வேலைகள் எல்லாம்  ஆறு வயசு காரங்களின்ட வேலைமற்ற எங்கன்ட தமிழ்பிள்ளைகளை விட இவன் கெட்டிக்காரன்."
இப்படித்தான் ஒருநாள் தாய் தகப்பனுடன் வந்தவன் ,அவையள் சூவிமிங்பூலில்  இறங்கிட்டினம் இவன் கதிரையிலிருந்து விளையாடிகொண்டிருந்தவன் திடிரென தாய் தகப்பனை பார்த்திருக்கிறான் அவையளை காணவில்லை என்று போட்டு 000 அடிச்சுபோட்டான்,அவையள் திரும்பி வரும்பொழுது பெடியன் லொலிபொப் கையுடன் பொலிஸாருடன் சிரிச்சு கதைச்சு கொடுநிற்கிறான்.
கந்தரின்ட புளுகுமூட்டைகளை நங்கு அறிந்த சுரேஸ்
"இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டுமாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததைபார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில்நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன்
 " நமச்சிவாய"

மன அழுத்தம் வந்தால்நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம்.
நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது
சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்?
"சம்பந்தர் சேர்"
"எத்தனை வயசில பாடினவர்"
"மூன்று வயசில"
"கெட்டிக்காரன்"
"ஏன் அந்த தேவாரத்தை பாடினவர்"
"பெற்றோர்கள் அவரை கரையில் வைத்துவிட்டு நீந்த சென்றுவிட்டார்கள்,அவர்களை காணவில்லை என்று பயந்த சம்பந்தர் சுவாமிகள்அம்மையே அப்பா என்று அபயக்குரல் எழுப்பினார் உடனே உமாபதியாரும் சிவபெருமானும் தோண்றி அவருக்கு பால் கொடுத்துஅவரின் அழுகையை நிறுத்தினார்கள்"
உடுப்புக்களை மாற்றி ஈர உடைகளை பையுனுள் வைத்து தோல்பையை எடுத்துகொண்டு கந்தரிடம் சென்றான்.
"அண்ணே நான் வாரன்"
"சுரேஸ்  அவசரமாய் போறியோ"
"இல்லை அண்ணே ஏன் "
"இவனோட கொஞ்ச நேரம் இருக்கிறியோ பெரியவனின் உடுப்பை மாற்றிப்போட்டு ஒடிவாரன்"
"தம்பி இந்த அங்கிளோட இருங்கோ அண்ணாவுக்கு செஞ் பண்ணியிட்டு உடேனே வாரன்என்று ஆங்கிலத்தில் சொல்ல
பார்த்து மீண்டும் ஒரு முழியள் முழிச்சு போட்டு ஐபோனில் முகத்தை புதைத்தவன்என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனைபார்த்து ஒரு புன்முறுவலை உதிர்ந்தவன் பக்கத்தில்  இருக்கும்படி தலையால் சைகை காட்டினான்.
தன்னை படம் எடுத்தான் பிறகு சுரேசைக் கேட்காமலயே  அவனையும் படம் எடுத்தான்.சிறிது நேரம் போக விழுந்து விழுந்து சிரிக்கதொடங்கிவிட்டான் .சுரேஸ் பயந்து போனான் ,
"வட் கப்பின் வை யு ஆர் லாவிங்"
 ஏன் இவன் சிரிக்கிறான் என்று பதட்டப்படாமல் கேட்ட படியே வந்த கந்தர்"தாங்ஸ் சுரேஸ்என்றார்.
தமையனிடம் கைதொலைபேசியை காட்டினான் அவனும் கெக்கட்டம் விட்டு சிரிக்க தொடங்கி விட்டான்.
கந்தர் ஆங்கிலத்தில் அவங்களை திட்டிப்போட்டு கைதொலைபேசி வாங்கி பார்த்து சிரித்துவிட்டு  சுரேசிடம் காட்டினார்.
திடுக்கிட்டு விட்டான் அவனது முகம் நரியின் முகமாக மாற்றப்பட்டிருந்தது.
வி கான் மொர்ப் யு  பேஸ் இன்டு டொன்கி,மங்கி,அன்ட் டொக்"ஹா...ஹா ...என்று சொல்லி விடை பெற்றனர் பசங்களும் கந்தரும்.
"நமச்சிவாய.நமச்சிவாய"
மீண்டும் அவன் மனம் பாடசாலைக்கு சென்றது.
"நரியை பரி ஆக்கியது யார்"
"சிவபெருமான்"
"நமச்சிவாய....நமச்சிவாய"
வைப்பிரேசன் மோட்டிலிருந்த கைத்தொலைபேசி அதிர்ந்தது.
இதுவும் ஒரு அதிசயம் தான் ,பிறமனிதர்களின் தொடுதலின்றி எமது உடம்பை அதிரவைக்க‌ முடியுதே...எல்லாம் தொழிநுட்பத்தின்உச்சம் தான்.... நினைத்தபடி
‍"‍ஹலோ "
"இன்றைக்கு மாணிக்க வாசகரின்ட குரு பூஜை "
"அதுக்கு நான் என்ன செய்ய "
"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் வார வழியில சுதாவின்ட வீட்டை போய் அவளின்ட அம்மாவின்ட சீலை ஒன்று தருவா வாங்கிகொண்டு வாங்கோ"

"என்னடி ஆத்த உனக்கு அம்மாவின்ட சீலை கட்டுற வயசு வந்திட்டெ"
"ஐயோ... எங்கன்ட பெரியவளை புட்டுக்கு மண் சுமந்த‌ கதையில் வருகின்ற
 செம்மணச்செல்வியா  வெளிக்கிடித்து பின்னேரம் குரு பூஜைக்கு கூட்டிப்போக வேண்டும் அதுகுத்தான் ."
"சரி வாங்கிகொண்டு வாரன் வைக்கட்டா"
"ஓம் வையுங்கோ"

எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்தகாலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ.
இப்ப  ஐடி கார்ட் ,மொபைல் எல்லாத்தையும் கழுத்தில  தொங்கவிடுறமாதிரி அந்த காலத்தில உருத்திராட்சையைதொங்கவிட்டுகொண்டு சனம் திரிஞ்சதுகள் .இந்த உருத்திராட்சைகளுக்கும் இமயமலையிலிருந்த எம்பெருமானுக்கும் வயர்லெஸ்  தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமோ.கையில் இரும்பால் செய்த ஆயுதங்கள் ,தலையில் பரபோலிக் அன்டனா....எல்லாம்தொடர்பாடலுக்கு ஏற்றவகையிலிருந்திருக்கு...
"நமச்சிவாய  நமச்சிவாய"
என்ன கோதாரி பிடிச்ச எண்ணங்கள் என்றபடி    சுதாவீட்டுக்கு போய் சேலையை எடுத்துகொண்டு வீடு சென்று அங்கிருந்த சிவாஸைபார்த்தான்.என்ன தீர்த்தமாடப்போறியே வடுவா பயளே என்று கேட்பது போலிருந்தது ...


Friday, April 7, 2017

முதல் விமானப்பயணம்

"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களதுஇருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்திலஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால்வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.
"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டைதேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.
இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனேபோட்டுவிட்டேன்.

முப்பதுவருடங்களுக்குமுன்புமுதல்விமானப்பயணம்சென்னையிலிருந்துகொழும்புக்குஏர்லங்காமூலம்ஆரம்பமானதுமானிப்பாயிலிருந்துமினிவானில்தலைமன்னார்சென்றுஅங்கிருந்துகப்பலில்ராமேஸ்வரம்போய்ரயிலில்சென்னைபோய்சேர்ந்தேன்
போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்துகாத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் .

இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து  எனது முதல்  விமானப்பயணம் ஆரம்பமானதுவிமானநிலையத்திற்குவழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்குநாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலைஅந்த வயதில்பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம்பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.
டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடாபைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ்கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில்அவையளினட வேலை போய்யிடும்என சொல்லி உசுப்பேத்தினான்.

எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது.
சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும்புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில்நின்றுகொண்டேன்.
"இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்துகொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்"
பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டுவெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு  சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்"
அவளுக்கு தெரியுமேஎனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒருமாதிரி                                                                                                                                                                                         சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்துகொண்டேன்.  .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.
அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்புநின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால்  என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம்அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனைமுழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாதுஎன்பதாகவே இருந்தது.
உணவு பரிமாறினார்கள்முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை  போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன்சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளைசேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்ததுசேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும்சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது.
இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனதுகைப்பையை எடுக்க‌ எழும்பினேன்பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கைபட்டியை போடுமாறு.   புகையிரதத்திலிருந்து  இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான்கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன்.
முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள்எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால்இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர்பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய்ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார்,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன்.
ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான்சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வரகட்டிட நடைபாதையின் மேலேபோர் என்றால் போர் சமதானம்என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது....

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றேவிளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கைஎன்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."