Friday, December 31, 2010

நான் ஒரு சுழியன் குட்டி கிறுக்கல்

"அடோ என்ன ரோட்டில நிக்குது ஒடு ஒடு வீட்டுக்கு"என்று பொலிஸ்க்காரன் அரை குறை தமிழில் திட்டி பொல்லால் அடிப்பது போல கிட்ட வர எடுத்தோம் ஒட்டம்.அவன் போனபிறகு மீண்டும் ஒன்று கூடினோம்.இவன் சிங்களவன் எங்கன்ட இடத்தில வந்து சண்டித்தனம் காட்டுறான் ,உவங்களுக்கு வெடி வச்சாத்தான் சரி என்று வீரவசனம் பேச கூட நின்ற எனையவர்களும் சேர்ந்து சம்மதிப்பது போல உசார் ஏத்தினார்கள்.நாங்கள் ஒன்றுகூடுவதும் பொலிஸ் ஜீப்பை கண்டால் ஒடி ஒழிப்பதுமாக காலங்கள் சென்றன.சிவாவை சில நாட்களாக காணவில்லை,என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தோம்,அவன் இயக்கத்தில சேர்திட்டானாம் என்று குமார் சொன்னான் ,ஆனால் நணபர்களால் நம்பமுடியவில்லை.ஒருநாள் இரவு 9 மணியளவில் வீட்டை வந்தான்,உந்த சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும்,அதற்கு நாங்கள் ஒரு இயக்கமாக இயங்க வேண்டும் முதலில் ஆட்கள் ஒன்று சேரவேணும் பின்பு ஆயுதம் வாங்கி எம்மை பலப்படுத்த வேணும் என்றவன்,என்னை வந்து இயக்கத்தில் இணையும் படி கேட்டான்.போராட வந்திடுவேன் ஆனால் பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைச்சிருக்கு மச்சான் போய் படிப்பை முடித்துவிட்டு கட்டாயம் இயக்கத்தில் வந்து இணைந்து கொள்வேன் எனசொல்லி அவனை சுழிச்சு விட்டேன்.பிறகு அவனை சந்திப்பதை கூடியளவு தவிர்த்தேன்.நான் அவனை புறக்கணிப்பது அவனுக்கு புரிந்தபடியால என்னை சந்திக்க வாராதை தவிர்த்திக்கொண்டான்.யாழ் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரத விதமாக சிவாவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.மச்சான் நீ நேற்று மேடையில் விடுதலை,சமதர்மம் போன்ற விடயங்களைபற்றி மேடையில் பேசினாய் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் மிகவும் நல்லாய்யிருந்தது.அவற்றை நடைமுறை படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க வேணும்,மேடை பேச்சுகளால் ஒன்றும் செய்ய முடியாது என விளக்கம் கொடுக்க தொடங்க ,மச்சான் எனக்கு விரிவுரைக்கு நேரமாகுது என்று பொய் சொல்லி அவனை மீண்டும் சுழிச்சுப்போட்டேன்.இவனுடன் தொடர்புகளைவைத்திருக்கக்கூடாது என்று கொழும்பு பல்கலைகழகத்திற்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றலாகி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது,மச்சான் நீ சுழியண்டா என்ற குரல் கேட்டு திரும்பினேன் ,சிவா நின்றான்.ஏன்டாப்பா அப்படி சொல்லுகிறாய்,கொழும்புக்கு போகிராயாம்,ஒம்டாப்பா இங்கு இருந்தா படிச்சு முடிக்கஏலாது,ஒரே பகிஷ்கரிப்பும் ஒரே பிரச்சனையாக இருக்குது அதுதான் கொழும்புக்கு போய் படிப்பை முடித்துவிட்டு இங்கு திரும்பி வந்து எங்கன்ட சனத்திற்கு உதவலாம் என்று நினைக்கிறேன்.சிவா தான் அடுத்தகிழமை இந்தியாவுக்கு போவதாக சொல்லி விடை பெற்றான்.`படிப்பு முடிந்தவுடன்,ஏன் யாழ்ப்பாணத்திற்கு இந்த பிரச்சனகளுக்கு மத்தியில் போவான் கொழும்பில் ஒரு வேலையை பார்ப்போம் என்ற முடிவுடன் ,வேலை தேடும் படலம் ஆரம்பமானது.வேலையும் கிடைத்தது.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பழகிய சிங்கள பெண்னின் நட்பு காதலாக மாற இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்புக்கள் அதிகமாகினது.பஸ்கள்,ரயில்கள் ,பீச்,சினிமா என ஒன்றாக திரிந்தோம்.இதை கண்ட ஊர்காரன் ஒருவன் எனது பெற்றொருக்கு சொல்ல,அப்பா ரயில் பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தார்.அண்ணை உன்னை நோர்வேக்கு கூப்பிடுகிறானாம் நீ பாஸ்போர்ட் எடுத்து ரெடியாக இரு ,அடுத்த கிழமை நோர்வே எம்பசிக்கு இன்டர்வீயுக்கு போகவேணும் உனது போஸ்ட் கிரயுவேட்டை அங்க போய் செய் என்றார்.இப்ப என்ன அவசரம் இங்க வேலை செய்யிறன் இங்கயே செய்து முடிக்கலாம் என்றேன் .எனக்கு தெரியும் நீ ஏன் இங்க இருக்க விரும்புகிறாய்யென,இங்கு இருக்கிற கதையை விட்டுப்போட்டு வெளிநாடுபோய் உருப்படுகிற அலுவலை பார் என்றார்.அப்பா வந்த நாளில் இருந்து மாலினியை சந்திப்பதை தவிர்த்தேன்.அப்பாவும் ஒரேபிடியாக இருந்து என்னை நோர்வேக்குஅனுப்பி விட்டார்.போகும் பொழுது கூட மாலினியை சந்திக்காமல் சுழிச்சுப்போட்டேன்.புதிய இடம் மொழி வேறு படிக்க வேண்டும் ஒரு மாதிரியாக மொழியை நன்றாக கற்றுக்கொண்டேன்.நான் சுழியன் எங்க போனாலும் சுழிச்சுப்போடுவேன். என்னுடைய மண்வாசனை அப்படியுங்கோ.வெள்ளைத்தோல் பெண்களை கண்டவுடன் ஒரு சபலம் ஏற்பட அதற்கு உடந்தையாக ஒருத்தியை நண்பியாக்கிக் கொண்டேன்.காதல் பண் ணிகல்யாணம் செய்யலாம் என நினைத்தேன்,காமம் பின்பு ஒன்றாக வாழ்ந்து பார்ப்போம் அதன்பின்பு ஒத்து வந்தால் கல்யாணம் என்றாள்.நானும் மனதில் இவளை சுழிச்சிப்போடலாம் என்ற எண்ணத்துடன் சம்மதித்தேன்.அவள் கல்யாணத்திற்கு சம்மதித்தாள் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.புது நாடு,ஜயா புது மாப்பிள்ளை.உறவுக்காரருக்கு எதுவும் தெரியாது. தமிழ் கலாச்சரத்துடன் பெண் வேணும் என்று சொல்ல பெற்றோர் தேடிப்பிடித்து பிளேன் ஏத்திவிட்டார்கள்.கல்யாயாணமும் ந்டந்து முடிந்ததுகதை ,கட்டுரை என்று எழுத தொடங்கினேன் முதலில் புலி எதிர்ப்பாக எழுதினேன் வாசகர்கள் படிப்பதாக தெரியவில்லை,உடனே புலி ஆதரவாகவும் தேசியம் சார்பாக இரண்டு கட்டுரை எழுதினேன் பாராட்டுக்கள் குவிந்தன மேடையில் ஏறும் வாய்ப்புக்களும் தானாக தேடிவந்தன.தொடர்ந்து புலி ஆதரவு முகமூடியுடன் எழுதினேன் . பயம் காரணமாக புலிகளை சுழிக்க முடியாமல் போய்விட்டது.முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் புலிகளுக்கு என்றவுடன்,புலிகளை இனி சுழிச்சு போடலாம் என்ற துணிவு ஏற்பட்டது.அப்பே லங்கா என்ற கோசத்துடன் எழுத தொடங்கினேன்.பெரும்பான்மையினரின் ஆதரவும் கிடைக்க தொடங்கியது.23 வருடங்களின் பின்புகுடும்பம் சகிதமாக யாழ் மண்னை தரிசிக்க சென்றேன்.ஊர் கோவிலுக்கு முதலில் சென்றேன்.ஆண்டாவா நீ என்னை விட சுழியன்,இவ்வளவு பிரச்சனைளுக்கும் தாக்குப்பிடித்து இப்ப வெளிநாட்டுக்காரன் அந்த மாதிரி ஒரு கட்டிடம் கட்டிதந்திருக்கிறான் அனுபவி ராசா அனுபவி என கும்பிட்டு போட்டு திரும்பும் பொழுது,ஒருவர் என்னை விட 10 வயது கூடிய தோற்றத்துடன் காலை நொண்டியபடி சென்றவர் என்னை 2,3, தடவை பார்த்துபோட்டு என்னருகே வந்து உங்களுடைய பெயர் கண்ணன் தானே , ஒம் என தலையாட்டினேன்.உள்ளே ஒரு பயம் ,வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் கடத்தப் போறாங்களோ தெரியவில்லை என முழித்தேன்.என்னை தெரியவில்லையடாப்பா வடிவாக பார் என்றவன் ,கோவிலை சுற்றி கும்பிட்டுபோட்டு வாரன் யோசிச்சு பாருடாப்பா என்று சொல்லி சுற்ற சென்றுவிட்டான்.சுற்றி முடிந்து அருகே வந்தவன் மச்சான் நீ சுழியண்டாப்பா என்னை தெரியாத மாதிரி நல்லாய் நடிக்கிறாய்,பயப்பிடாதே போராட உன்னை குப்பிடமாட்டேன் நான் சிவா என்றான்.கட்டி அனைத்து நட்பு கொண்டாடினோம்.காலுக்கு என்ன நடந்ததுடாப்பா என்றேன்.10 வருடங்களுக்கு முதல் தாக்குதலோன்ரின் பொழுது காலை இழக்க நெரிட்டத்தா சொன்னான். நல்ல வேளை இவனை சுழிச்ச்சுப்போட்டு வெளிநாடு போனது என்று மனதில் நினைத்து கொண்டு அவனிடமிருந்து விடை பெறும் பொழுது, கோயில் தர்மகர்த்தா ஒடி வந்து புனர்நிர்மான பணிகளுக்கு இயன்றளவு உதவி செய்யும்படி கேட்டார். உடனே 20 ஆயிரம் என்று சொல்ல பக்கத்தில் நின்ற மனைவி கோயிலுக்கு தானே கேட்கினம் கொஞ்சம் கூடவா கொடுங்கோவன் என்றாள்.50 ஆயிரம் கொடுங்கோ உங்களுடைய 2 மணித்தியால சம்பளம்தானே என பில்டப் கொடுக்க நானும் சம்மதம் என தலையை ஆட்டினேன்.ஆண்டவனுக்கு ஒரு அஸ்டாங்க நமஸ்காரம் செய்து போட்டு எழுந்தேன் சிவா நொண்டியபடியே நடந்து சென்றான் ....

தையனதக்கா நான் ஒரு ஈழத்தவன் குட்டிகிறுக்கள்

இனிய காலை வணக்கம் தொடர்ந்து கேட்க இருப்பது ஆத்மீக ஆராதனை என இந்திய தமிழ் பெண்குரல் வானோலியில் தவழ்ந்து வந்து என்னை எழுப்பியது. ஒவ்வொரு நாளும் என்னை எழுப்புவது இந்த ஆத்மீக ஆராதனைதான்.டி.எம்.எஸ்.இனிய குரலில் ஒரு இந்து பாடலும்,ஜோனி எபிரகாமின் குரலில் கிறிஸ்தவப்பாடலும்,இ. எம்.கானிபாவின் குரலில் இஸ்லாமிய பாடலையும் பாடி ,தங்களது மத கருத்துக்களை திணித்தார்கள்.நானும் கருத்துக்களை கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு காலைக்கடன்களை முடித்து பூஜை அறைக்குள் சென்றேன்.பூஜை அறையில் சமஸ்கிருத ஒம்,பக்கத்தில் இந்திய சாமியார் சாய்பாபா கையை உயர்த்தி பிடித்து ஆசிர்வாதம் வழங்கும் போஸ் கொடுக்க ஏனைய பழைய சாமி பிள்ளையார்,முருகன்,சிவன் எல்லோரும் ஓவ்வொரு மூலையில் இருந்து என்னை பார்த்துகொண்டிருந்தனர்.எல்லோருக்கும் ஒரு வணக்கம் செய்து போட்டு ,விபூதியை எடுத்து பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் நெற்றியில் கையை வைத்துவிட்டு வேலைக்கு போக தயாரானேன்.இஞ்சாருங்கோ அப்பாகுஞ்சு சப்பாத்தியும்,சனாக்கறியும்(கடலைக்கறி) சாப்பாட்டு பெட்டிக்குள் போட்டு பிறிட்ஜ்க்குள் வைத்திருக்கிறன் எடுத்துக்கொண்டு போங்கோ என மனிசி கட்டிலில் அரைதூக்கத்தில் இருந்தபடியே சொல்ல சரி அடியாத்தை என்று பதிலளித்து,உணவிலும் இந்தியாக்காரன் எங்களை ஆட்டிப்படைக்கிறான் என மனதில் புறுபுறுத்தபடியே காரை ஸ்டார்ட் செய்தேன்.பிரபல இந்தியா பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் முருகா முத்துக்குமரா என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.அவரின் குரலிலயே ஏனைய பாடல்களை கேட்டபடியே வேலைத்தளம் போய் சேர்ந்தேன்.காலை வணக்கம் சொல்லி போட்டு என்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினேன்.ஒரு வெள்ளை பக்கதில வந்து கலோ எப்படி இருக்கிறாய் ,நான் நலம் உன்னுடைய சுகம் எப்படி என்றேன் ( இருவரும் சுகமா இருக்கிற படியால்தான் இங்க இருக்கிறோம் என மனதிற்க்குள் நினைத்துக்கொண்டேன்.) என்னடாப்பா நல்ல சந்தோசமாய் இருக்கிறாய் என்ன விசயம் ,இன்று வெள்ளிக்கிழமை அதுதான் மகிழ்ச்சியா இருக்கிறேன்,மதியம் பியர் அடிப்போம் வாரீயா என அழைப்பு விடுத்தான்.பின்னேரம் கோவிலுக்கு போக வேணும் வரமுடியாது பதிலளித்தேன்.கிரேட் வேஸ்டேர்ன் ரோட்டில் இருக்கிற இந்தியன் டேம்பிலுக்கோ என் வினாவினான்.எனக்கு கோபம் வந்திட்டுது, இந்தியன் டெம்பில் இல்லை கிந்து டெம்பில் என்றேன் .இரண்டும் ஒன்றுதானே,நீயும் இந்தியன் தானே,இதுக்கு பிறகும் என்னால் பொறுமையாக இருக்கமுடியவில்லை,நீ இங்கிலிஸ்காரனோ அவுஸ்ரேலியனோ என்று கேட்க ,எனக்கு இங்கிஸ்காரனை பிடிக்காது நான் ஒஸி என்றான் அது மாதிரித்தான் நானும் இந்தியன் இல்லை ஈழத்தமிழன் உணர்ச்சிவசப்பட்டு கூறினேன்.கூல் ...கூல் என கட்டிப்பிடித்தான்.நாங்கள் ஈழத்தமிழர்கள் காசு போட்டு கோவிலை கட்டி முருகனுக்கு விசாக்கு அப்பிலை பண்ணி இந்தியாவில இருந்து இங்க கூப்பிட்டு வைச்சிருக்கிறோம் இவன் வெள்ளை விபரம் தெரியாமல் இந்தியன் டெம்பில் என்கிரான் லூசன் பரதேசி ..கிறுக்கன் என மனதில் திட்டி தீர்த்தேன்.வேலை முடிந்து வீடடை வந்தா,மனிசியும் பிள்ளைகளும் சன் டி.வி யில் மூழ்கியிருந்தார்கள்.அமிதாப்பச்சன் விளம்பரத்திற்க்கு வந்து போனார் அவரை தொடர்ந்து சச்சின் தமிழில் பேச மகள் கேட்டாள் அப்பா அவர் டமிழா நல்லாய் டமிழ் கதைக்கிறார்,ஒம் என தலையை ஆட்டி போட்டு அடுத்து வந்த ஜஸ்வரியா ராய்யை பார்த்து ரசித்தேன். தொடர்ந்தது ஒருநாடகம் எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.நயாகியின் சேலை நல்லாய் இருக்கு அடுத்த முறை இந்தியாவுக்கு போய் வாங்க வேண்டும் என மனிசியும் ,அந்த ஆண்டியின் பன்கிள்ஸ் நல்லாய் இருக்கு நான் அதை இந்தியாவில வாங்க வேணும் என் மகள்மாரும் சொப்பிங் லிஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார்கள்சரி,சரி எல்லாம் வாங்கலாம் இப்ப கோவிலுக்கு போக வெளிக்கிடுங்கோ சத்தம் போட்டேன்,உடனே டி.வியை நிறுத்தி போட்டு எல்லோரும் வெளிகிட ஆயத்தமானார்கள்.பிள்ளைகள் அந்த இந்தியன் டொப்பையும் ஜீன்ஸ்ஸையும் போடுங்கோ,நான் போனமுறை இந்தியாவில வாங்கின் பன்சாபி போடப்போகிறேன்,அப்பா நீங்களும் "'குமரன் சில்க்ஸ்"வாங்கிய் குர்தாரை போடுங்கோ என்றபடியே குளியலறைக்குள் சென்றாள்7 மணி பூஜைக்கு நாங்கள் கோவிலில் நின்றோம்.ஜயர் மணி அடித்து சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை செய்தார்.நான் தமிழில் அழகான வீடு வேண்டும் ,பிள்ளைகள் படித்து டாக்டர் ஆக வேண்டும் ,புது மோடல் பி.எம்.டபிள்யு வேணும் என்று எனது வழமையான அப்பிளிக்கேசன்களை போட்டுக் கொண்டிருந்தேன்.ஜயரின் மணிஒசை,மந்திரசத்தத்தில் நான் தமிழில் போட்ட வேண்டுகோள் முருகனுக்கு கேட்டிருக்குமோ தெரியவில்லை .ஜயர் திராவிட மொழி நமஸ்கார பஞ்சபுராண அருளுக என்று சொல்ல உடனே பிள்ளைகள் இந்திய நாயன்மார் பாடிய தேவாரம் ,திருவாசகம்,திருப்புகழ்,திருபல்லாண்டு,திருவிசைப்பா புராணம் என பாடி முடித்தனர்.நான் சின்னபிள்ளையா இருக்கும் பொழுது தேவாரம் மட்டும் நான் பாடுவேன் மிகுதியை ஜயர் பாடி முடிப்பார்.ஆனால் புலத்திலபிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுத்திருக்கிறோம்.எங்களுடைய தமிழ் சைவகலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கு எங்களால் ஆன ஒரு சிறு முயற்சிதானே,இல்லாவிடில் பிள்ளைகள் வெள்ளக்காரனின் கலாச்சரத்தை பின்பற்றி அழிச்சு போய்விடுங்கள் என்ற ஒரு முன் எச்சரிக்கைதான்.பிள்ளைகள் கோவிலில் தமிழ்சைவ கலாச்சாரத்துடன் இருந்தாலும் வெளியில் ஆங்கில கிறிஸ்தவ கலாச்சாரத்தில் முழ்கி திலைக்கினம் என எங்களு க்கு விளகிங்னாலும் விளங்காதமாதிரியிருப்பம்.பசிக்குது என்று பிள்ளைகள் சொல்ல கோவிலுக்கு பின்புறமிருக்கும் கடைக்கு சென்றேன்.அங்கு தோசை,மசாலாதோசை,இட்லி,பூரி,சாம்பார்,சட்னி என வித விதமான சாப்பாடுகள் இருந்தன.எங்களுடைய பாரம்பரிய சாப்பாடாகிய புட்டு,இடியப்பம்,சம்பல் , சொதி ஆகியன இருக்கோ என எட்டிப் பார்த்தேன் ஒன்றையும் கானவில்லை.உடனே மனிசி குரல் கொடுத்தாள் உதில நின்று விடுப்பு பார்க்காமல் தோசையும் ,இட்லியும் வாங்கி கொண்டு வாங்கோ இதில இருந்து சாப்பிடுவோம், காருக்குள் உந்த தோசைகள கொண்டுபோக ஏலாது காருக்குள் பிறகு தோசை மனக்கும்.சனிக்கிழமை பிள்ளைகளை தமிழ்பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு போனேன்.அசம்பிளி முடியும் மட்டும் நின்றேன்.தமிழ்தாய் வாழ்த்து பாடினார்கள் முடிவடையும் பொழுது" வாழ்க தமிழ்நாடே "எனதமிழ்நாட்டை வாழ்த்தி ஈழத்து சிறுவர்கள்பாடி முடித்தனர்.பின்பு திருக்குறள் செப்பினார்கள் ,தொடர்ந்து காந்தியை பற்றியும் அவரின் அகிம்சை கொள்கை,எமக்கு விடுதலை வாங்கித்தந்தார் காந்தி என்று புகழ்ந்தனர் ஈழத்து சிறுவர்கள்.பாரதியாரின் விடுதலை கீதம் ஒன்றைபாடி பாரதிக்கும் மரியாதை செலுத்தினர்.என்னடா ஒரே இந்தியாப் புராணம் பாடிக்கொண்டிருக்கிறோம் நாங்களும் எங்கன்ட பிள்ளைகளும் என நினத்துகொண்டு வெளியேறும் பொழுது தியாகி திலீபனுக்கு நினைவாஞ்சலி என்ற சுவரோட்டியை பார்த்து போட்டு அங்கு செல்வோம் அங்காவது எம்மவர் நிகழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்,அவருக்கும் அஞ்சலி செலுத்தி எம்மவர் புகழ் பாடுவோம் என்ற எண்ணத்தில் சென்றேன்.முதலில் மலர் வணக்கம் நடந்தது பங்கு கொண்டேன்.பிறகு பட்டிமன்றம் இன்றைய காலகட்டத்தில் அகிம்சை போராட்டமா ஆயுத போராட்டமா சிறந்தது என விவாதம், அங்கேயும் இரு இந்தியர்கள் அகிம்சை சிறந்தது என அகிம்சை பற்றி புளுக நம்மவர் இருவர் ஆயுதம் சார்பாக விவாதித்தனர்.ஆயுதபோராட்டத்தில் வளர்ந்த சமுகம் இன்று அகிம்சை பரப்புவதற்கும் இந்தியாவின் கருத்தாதிக்கத்தை எமக்கு திணிப்பதற்கு நாமே மேடை போட்டு கொடுத்துள்ளோம் என்று புறு புறுத்தபடியே மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.எங்க போய் சுத்திபோட்டு வாறீயள்,நாளைக்கு அரங்கேற்றத்துக்கு போகவேணும் உடுப்புகளை ரெடி பண்ணி வையுங்கோ என்றாள் .எனக்கு உதுகளை பார்க்கவிருப்பமில்லை நீர் போயிட்டு வாரும் என்றேன்.உங்களை யார் வந்து பார்க்க சொன்னது ,எனக்கு சீலையை உடுத்து கொண்டு அவ்வளவு தூரம் கார் ஒட ஏலாது சீலை கசங்கி போயிடும் அதுதான் உங்களை வரச்சொன்னேன்.பார்க்க விருப்பமில்லை என்றால் என்னையும் பிள்ளைகளையும் கொண்டுபோய்விட்டிட்டு நீங்கள் காருக்குள் நித்திரை கொள்ளுங்கோவன் எனகட்டளையிட்டாள்.அடுத்தநாள் அரங்கேற்றத்திற்கு சென்றேன் ,மேடையில் ஒரு குட்டி இந்தியாவே காணக்கூடியதாக இருந்தது.இந்திய கலைஞர்கள்,இந்திய உடைகள்,இந்திய மொழிகள்( கன்னடம் ,தெலுங்கு)இந்திய நடனங்கள்........இந்திய பெண்கள்பார்வையாளர்கள் மட்டும் எம்மவர்கள் .........தையன தக்கா தையன தக்கா ....என இசை ஒலிக்க தொடங்க .........நான் ஒரு ஈழத்தவன் எந்த கொம்பனும் எனக்கு இந்திய கருத்தியலை திணிக்க முடியாது .........தையனதக்கா தையனதக்கா..என பார்த்து இருந்து ரசித்தேன்..

யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு குட்டி கிறுக்கள்

டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா....எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டார்.நான் குவான்டேர்ஸில் தான் சிட்னியிலிருந்து சிங்கபூருக்கு போனனான்,இவன்கன்ட பிளேன் ஒருசததிற்கு உதவாது ,சாப்பாடும் சரியில்லை பணிப்பெண்களும் சரி ஆண்களும் சரி உதவாக்கரைகள் . சிங்கப்பூரிலிருந்து சிறிலங்கன் எயர்லைன்ஸில் தான் அங்கால போனனான்,"அது எல்லோ பிளைட்"நல்ல சாப்பாடும் அந்தமாதிரி உபசரிப்பும். கிரிபத்தும் சம்பலும் தந்தாங்கள் சொல்லி வேலையில்லை.கட்டுநாயக்காவில இறங்கினவுடன் என்னை அறியாமல் அழுது போட்டேன்,உன்னான அது ஆனந்த கண்ணீர்தான்.மனசுக்குள் ஒரு பயம் இருந்தது ஏனென்றால் இங்க சிட்னியில் ஒரு சில ஊர்வலங்களுக்கு போனனான் அதில என்னுடைய படங்களை எடுத்து ஆர்மிக்காரனுக்கு எங்கன்ட சனம் கொடுத்திருக்குமோ என்ற பயம்தான் .எங்கன்ட சனத்தைப்பற்றி உனக்கு தெரியும்தானே யாழ்மையவாத சிந்தனை கொண்ட சனம்தானே..(கிகிகிகி)ஆனால் ஆர்மிக்காரன் ஒரு தொந்தரவும் தரவில்லை மாத்தையா என்று நல்ல மரியாதையாகத் தான் கதைச்சவன் .எனக்கு 3 பாசையும் நல்லாய் தெரியும்தானே அதால எனக்கு சிறிலங்காவில எந்த மூலைக்கும் போய்வர முடியும் உன்னை மாதிரி 2 பாசைக்காரன் இல்லைத்தானே....வெள்ளவத்தைக்கு போயிட்டு அடுத்தநாளே யாழ்ப்பாணத்துக்கு போவதற்கு பஸ்ஸுக்கு டிக்கட்டை புக்பண்ணிப்போட்டேன்.கொழும்பு இப்ப அந்த மாதிரியிருக்குதடா அம்பி,30 வருசத்துக்கு முதல் நான் கொழும்ம்பில வேலை பார்க்கும் பொழுது இருந்தமாதிரி நல்லாயிருக்கு(?)கொழும்பில ஆட்களை கடத்துறாங்கள் என்று இணையங்களில் செய்தி போடுறாங்கள் அப்ப அது பொய்யோ அண்ணே?உவங்கள் உந்த இணையக்காரங்களை நம்பக்கூடாது,தாங்களும் தங்கட இனையத்தளமும் புகழ் பெற வேணும் என்று கண்டதையும் போடுறாங்கள்.உவங்களை நம்பக்கூடாது .நான் போயிட்டு சேவ்வாக வந்திட்டந்தானே.யாழ்ப்பாணத்துக்கு அந்த காலத்தில கே.ஜி காரான் பஸ் விட்டான் அது மாதிரி இப்ப டக்கிளஸ் விடுகிறான் சீ சீ விடுகிறார்.அவன் சீ அவர் இப்ப யாழ்ப்பாணத்தை நல்ல டிவலெப்மன்ட் செய்யிறார் என்று டக்கிளஸ்க்கு ஒரு புகழ்மாலையும் போட்டார்.ஊருக்கு போய் செய்த முதல் வேலை சாரத்தை கட்டிக்கொண்டு கிணற்றில போய் நல்லாய் அள்ளி தலை யில தண்ணி ஊத்தி குளிச்சன் ,ஜயோ அந்த சுகமிருக்கே சொல்ல வார்த்தையில்லை.குளிச்சுப்போட்டு எங்கன்ட கோயிலுக்கு போனேன்,ஒருத்தரும் என்னை மட்டுக்கட்டவில்லை ஆனால் நான் எல்லோரையும் கண்டுபிடிச்சிட்டேன் .அண்ணே ஆர்மிக்காரன் சனத்தோட எப்படி?அவங்கள் தாங்களும் தங்கடபாடும் எதாவது நொட்டினால்தான் பிரச்சனை மற்றும்படி அவங்கள் பேசாமல்தான் இருக்கிறாங்கள்.அனேகமான ஆர்மிக்காரங்கள் தமிழ் கதைக்கிறாங்கள்.நான் கோயிலில் நிக்கும் பொழுது இரண்டு ஆர்மிக்காரங்கள் வேஷ்டியுடன் வந்தவங்கள் நல்ல பயபக்தியுடன் கூம்பிட்டவங்கள்.கப்டன்,மேஜர் தர அதிகாரிகள் போல கிடந்திச்சு.போகும் பொழு து என்ட பேத்தியின் கன்னத்தில கிள்ளிப்போட்டு போனவன்.இப்படித்தான் ஒருநாள் என்ட மகளின் பெயரை சொல்லி கூப்பிட்டு கேட்டுது எட்டிப்பார்த்தேன் ஒரு ஆர்மிக்காரன் வெளியில நின்று தேசிக்காய் தாங்கோ என்று கேட்டான். அவ்வளவு அன்னியோன்னியமாக பழகிறான். என்னை கண்டவுடன் யார் என்று விசாரித்தான் மகளும் அது என்னுடைய அப்பா நேற்றுத்தான் வந்தவர் என்று சொல்ல அவன் உள்ள வந்து என்னுடன தமிழில் கதைக்க தொடங்கினான் நான் சிங்களத்தில் கதைக்க அவன் அதிர்ந்து போனான்.சிங்களத்தில பழமொழி இரண்டு சொல்ல அவன் முழித்த முழி இருக்கே அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பாக இருக்குது. அதற்கு பிறகு அந்த ஆர்மிக்காரன் எங்கு கண்டாலும் என்னோட சிங்களத்தில் கதைப்பான் மாத்தையா என்று சொல்லி நல்லமரியாதை.எத்தனை ஆர்மிக்காரன் சரியாம் இன்றைக்கு பெடியள் அடிச்ச அடியில என்று கேட்டு சந்தோசப்பட்டதும் நீங்கள்தான் இப்ப ஆர்மிக்காரன் உங்களை மாத்தையா என்று சொன்ன உடனே நல்லவன் என் செர்டிவிக்கேட் கொடுப்பதும் நீங்கள்தான் அண்ணே என்று சொன்னதும் கந்தர் கடுப்பானாலும் காட்டிக்கொள்ளவில்லை.தம்பி எங்கன்ட பள்ளிக்கூட பெடி பெட்டையள் கொஞ்சம் அட்டகாசம் நெடுகளும் ரொட்டில டியுசனுக்கு என்று சைக்கிளில் திரியுதுகள்.பெண்பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருப்பம் என்றில்லை எப்பவும் ரொட்டிலதான் அதுகளின்ட வாழ்க்கை போகுது.பெடியளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் பொழுது எல்லாம் ஒழுங்காக இருந்தது,இப்ப எல்லாம் தலைகீழாக கிடக்குது.களவு ,கொள்ளை, தெரு சண்டித்தணம்,சராயத்தை குடிச்சு போட்டு வம்புக்கு ஆட்களை இழுக்கிறது எல்லாம் அந்த மாதிரி நடக்குது.அண்ணே பெடியள் திரும்பி வந்துஅடிப்பாங்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்களோ என்று வம்புக்கு இழுத்தேன்.பெடியள் வரவேணும் வந்து உந்த களவு ,கொள்ளைகளை தடுக்கவேணும்,பெண்களுடன் சேட்டை விடுகிற கோஸ்டிகள்,குடிச்சுபோட்டு சண்டித்தனம் செய்யிறவன்களை எல்லாம் பிடிச்சு பச்சை மட்டையாள் அடிச்சு அடக்கி வைக்க வேணும்.நான் நினக்கிறேன் பெடியள் இன்னும் வன்னிகாட்டுக்குள் மறைந்து இருக்கிறான்கள் என்றுதான் ,பாருடாதம்பி ஒருநாளைக்கு வைப்பாங்கள் ஆப்பு அப்ப இந்த ஆர்மிக்காரங்கள் எடுப்பாங்கள் ஒட்டம்.அது சரி அண்ணே நேற்று உங்களை பப்பில் பியர்கிளாஸுடன் strippers சோவில் வெள்ளைகள் குழுக்கி ஆடினதை பார்த்துகொண்டிருந்ததாக கனகர் சொன்னவர் உண்மையோ?அட அந்த கதை உனக்கு தெரிந்துவிட்டதோ?என்ட வயசில எனக்கு எப்படி தப்புதாளங்களை கொன்றோல் பண்னுவது என்று தெரியும் ,அது போக இந்த நாட்டுக்கரான்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க வேணும் இல்லாவிடில் சுத்த பட்டிக்காடு என்று நினைப்பாங்கள்.ஆனால் ஊரில சனம் செய்யக்கூடாதுதடா நாங்கள் பரம்பரைபரபரையாக கட்டி காத்த கலாச்சாரம் என்னவாது. உதுகளை விடு நான் உன்னை சந்திக்க வந்த முக்கிய காரணம் ,என்னுடைய சொந்தகாரப்பெடியன் ஒருத்தனை கூப்பிட வேணும் உந்த ஏஜன்ட்காரனை உனக்கு தெரியும்தானே ஒருக்கா ஒழுங்கு படித்துதாடா தம்பி எவ்வவளவு காசு என்றாலும் நான் தாறேன்.அண்ணே இப்பதானே சொன்னீங்கள் யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு என்று பிறகு ஏன் அந்த பெடியனை இங்க கூப்பிட்டு கஸ்ட படுத்த யோசிக்கிறீயள் ,நீங்கள் எல்லாம் இங்க வந்து நாட்டில பிரச்சனை இல்லை என்று சொல்லி திரிவதால் அவுஸ்ரேலியா விசா கொடுக்கிறாங்கள் இல்லை .அதுகளப்பற்றி நீ யோசிக்க வேண்டாம் ,அது நான் லோயரை பிடிச்சு சேட் பண்ணி போடுவேன் ,அவனை பத்திரிகை துறையில்தான் வேலை செய்ய விட்டிருக்கிறேன்.......சிறிலன்காவில் பத்திரிகையாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லைதானே.......
இந்த கிறுக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து லீவுக்கு 10 நாள் போய் நின்று போட்டு திரும்பி வந்து சொந்தக்காரன்களை கூப்பிட வேணும் ஆனால் யாழ் நல்லாய் இருக்கு என்று புலம்பும் புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம்
This post has been edited by putthan: 21 December 2010 - 06:42 PM

Sunday, July 25, 2010

வொப்

நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள்.அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன்.வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபிரித்து ,மீசையும் வைச்சிருக்காம் பார்க்க சகிக்க முடியவில்லையாம் என்கிறாள்.நான் என்னத்த செய்ய, போனமுறை பார்த்த பெடியனுக்கு மொட்டை என்று நக்கலடித்தாள் இப்ப பார்த்த பெடிக்கு முடி அதிகமாம்.அதற்கு முதல் பார்த்த பெடியன் மம்ஸ் பேப் என்றாள் அதாவது அம்மா பிள்ளையாம் ,அம்மாவுக்கு பின்னால் திரிகிறானாம்,ஆனபடியால் அவன் வேண்டாம் என்றாள்.சரி அப்ப உம்முடையா அண்ணனின் பெடியன் ஊரில டாக்டராக வேலை செய்யிறான் அவனை கூப்பிட்டு கட்டி வைப்போமோ? என்று நான் கேட்க உள்ளே இருந்த நிசி ஒடி வந்து நோ டட் எனக்கு சிறிலங்கா போய்ஸை கட்டி வைக்க வேண்டாம்.அவர்கள் எல்லாம் என்னுடைய கல்சருக்கு சரி வரமாட்டினம்.அது என்னடி உனக்கு என்று ஒரு கல்சர்,நாங்கள் எல்லோரும் ஒரே கல்ச்சரில் இருக்கிற ஆட்க தானே,அம்மாவின் சொந்தம் வேற பிறகு என்ன கல்சர் கதை கதைக்கிறாய்!!இல்லை டட் நான் இங்க வளர்ந்தனான் எனக்கு அங்கு வளர்ந்தவர்கள் சரிவராது.இங்கு வாழ்ந்த போய்ஸ்தான் சரிவரும் என்று நினைக்கிறேன்.அப்ப வெள்ளைகாரனையோ கட்டப்போகிறாய் என்று ஏக்கத்துடன் தாயார் கேட்க,உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது என்று எனக்கு தெரியாது,கோபத்துடன் கதவை சாத்தியபடியே உள்ளே சென்று தூங்கிவிட்டாள் நிசி..யாரையாவது லவ் பண்னுகிறாளோ தெரியவில்லை,அதுதான் எல்லாத்தையும் வேண்டாம் என்று சொல்லுகிறாள் போல கிடக்குது,நீர் மெல்லமாக கேட்டுபாரும்.சீ ..ச்சீ ...அவள் அப்படி செய்யமாட்டாள்,நான் அப்படி வளர்க்கவில்லை.என்கன்ட ஆட்களுக்குள் இப்ப யார் யார் எந்த சாதி என்று கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு இப்ப எல்லோரும் படிச்சவங்களாக இருக்கு. ஊரிலயாவது பெடியன்களை பார்த்தவுடன் ஒரளவுக்கு தெரியும் ஆனால் இங்க எங்களையும் விட அவங்கள் மேல அல்லோ இருக்கிறான்கள் படிப்பிலும் சரி ,பொருளாதாரத்திலும் சரி.உப்படித்தான் வாசுகியின் மகள் என்கன்ட ஆட்களில் ஒருவனை லவ் பண்னி போட்டுது என்று சந்தோசப்படு கலியாணம் கட்டிவைச்சவங்கள்.கலியாணத்தன்று தான் தெரியும் அவையள் எங்களைவிட குறைஞ்சவையள் என்று,ஆனபடியால் நான் என்கன்ட சாதிப்பிரச்சனை பற்றி வடிவாக சொல்லி வைச்சிருக்கிறன் ,அவள் லவ் பண்ணமாட்டள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்றபடியே அருகில் இருந்த தேனீரை தந்தாள்.இப்ப உந்த வெளிநாட்டில ஒருத்தரும் பெரிதாக சாதி பார்க்கிறதில்லைதானே,நீர் மட்டும் ஏன் தூக்கி பிடித்துகொண்டு இருக்கிறீர்,அது சரி உம்முடைய இரண்டாவது அண்ணனின் பெடியன் சிங்களத்தியை கட்டியிருக்கிறான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறீயள்,ஆனால் மற்றவன் தமிழனுக்குள்ள சாதி மாறி கட்டினால் நக்கல் கதை உங்களுக்கு என்றவுடன் ,எங்கன்ட ஆட்களை சுரண்டாவிடில் உங்களுக்கு நித்திரை வராதே என்றபடியே சண் டிவியை ஒன் செய்தாள்.சிங்களவரில் உந்த சாதிபிரிவினை இல்லை என்று உங்களுக்கு தெரியும்தானே,அதுபோக அண்ணனின் பெடியன் கட்டின பெட்டை மகிந்தாவின் ஒன்றைவிட்ட தம்பியின் மனிசியின்ட ஒன்றைவிட்ட அக்காவின் மகள் .அப்ப மகிந்தா ரொயல் பமிலி அவையளுக்குள்ள நீங்கள் கட்டிய படியாள் நீங்களும் ராயல் பமிலி என்று சொல்லுறீயள்.ம்ம்ம்ம்ம்ம்ம்நிசியை கூப்பிட்டுகொண்டு நீரும் ஒருக்கா இங்கவாரும்.பிள்ளை நிசி நானும் ஒரு காலத்தில வொப்தான்,அதாவது ஒரு காலத்தில் அகதியாக வந்தவன் தான்,அதற்கு பிறகு படிச்சு பட்டம் பெற்று நல்ல உத்தியோகம் பார்க்க வெளிக்கிட்டனான்.இப்ப நீ பார்க்கும் குறும்தாடியும்,வாயை திறந்தால் ஆங்கிலம் ,பொழுது போக டெனிஸ் விளையாடும் அப்பா ஒருகாலத்தில வொப் ,இங்கு வரும் பொழுது கன்ன உச்சியுடன் மீசையை வைத்திருந்தனான்.ஏன் உன்னுடைய அம்மாவும் இப்ப பார்க்கிற மாதிரியில்லை,அவவும் முகத்தில் எண்ணை வளியும்,இரட்டை பின்னல்,ஸ்கேர்ட் ,பிளவுஸ் சுடன் தான் வந்தவ,இப்ப தலமயிரை வெட்டி போட்டு ஜீன்ஸும் போட்டுக்கொண்டிருக்கிறா.நாங்கள் எங்களை அறியாமாலேயே இந்த மேற்கத்தைய விழுமியங்களை பின்பற்றி எங்களை மாற்றிப்போட்டோம்.எங்களுடைய இந்த தோற்றத்தை பார்த்து பரம்பரை பரம்பரயாக நாங்கள் இந்த தோற்றத்துடன் வாழ்ந்தவர்கள் என்று எண்ணிவிடாத,இன்றைய வொப் தான் நாளைய கதாநாயகர்கள்.வெளிநாட்டுக்கு வரும் பொழுது அப்படிதான் இருப்பார்கள் ,5,6 வருடங்களுக்கு பிறகு மேற்கத்தைய விழுமியங்களை பரம்பரையாக பின்பற்றுபவர்கள் போல நடப்பார்கள்.நீ இங்கு பிறந்து வளர்ந்த படியால் உனக்கு உன்னுடைய அப்பா அம்மாவின் வொப் கோலங்கள் புரியவில்லை.உனக்கு விபரம்தெரியும் வயசு வரும் பொழுது கொம்மாவும் நானும் வொப் தோற்றத்தில் இருந்து மேற்கத்தைய தோற்றத்திற்கு நிறத்தைதவிர எனையவற்றை மாற்றி கொண்டுவிட்டோம்....எங்கன்ட ஆட்களில் 90ம்வீதமானவர்கள் வொப் கோலத்தினர்தான் வரும் பொழுது என்பதை மற்றும் நீ நினைவில் வைத்திரு.

Monday, July 12, 2010

களனி கங்கையின் இசை நிலவிலே
பெளத்த நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்துரயில்,
பஸ் ஒட்டி விளையாடிடுவோம்

யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம்
புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம்
முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு
அரபிய தொப்பிகளை பரிசளிப்போம்

புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம்
இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம்
மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால்
எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம்


மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம்
வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம்
மட்டுநகரில் கருவாடு காயவைப்போம்
தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம்
விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம்
சீனாக்காரனுக்கு துறைமுகம் கொடுப்போம்
இந்தியாக்காரனுக்கு காதில நல்லாய் பூ வைப்போம்

பொய்கள் சொல்வோம் கொலைகள் செய்வோம்
சர்வதேசத்திற்கு சவால் விடுவோம்
ஜக்கிய நாடுகள் சபைக்கு வழக்கு போடுவோம்
நமோ நமோ மாதா நம்மட மாதா...


பாரதியார் சிங்களவராக இருந்திருந்தால் இப்படி கவிதை எழுதியிருப்பார் ....சும்மா ஒரு கற்பனை

Friday, June 11, 2010

நித்தியானந்திகள்

ரிங்...ரிங்..ரிங்..தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் "மரியா" உங்களுடைய அபோயின்மன்ட் பின்னேரம் 3 மணிக்கு இருக்கு என்றாள்.நான் சரி "we will meet at 3ó clock same place"என்று சொல்லி தொலைபேசியை வைக்க,"சொப்பிக்"முடிவடைந்து வீட்டுகுள் நுழைந்தவள் யாரோட மூன்று மணிக்கு போக போறியல் இங்க நான் ஒருத்தி இருக்கிறேன் என்று இல்லை கண்டவள்கிண்டவளுடன் "போனில்"கதைப்பது பிறகு"அபோயின்மன்ட் விக்ஸ்"பண்ணுறது,இன்றைக்கு நான் கண்டபடியால் தெரிந்துவிட்டது இப்படி எத்தனை நடந்திச்சோ என்று புறுபுறுத்தபடியே உள்ளே சென்றவள் வாங்கிய பொருட்களை குளிர்சாதனபெட்டியில் போட்டாள்.சும்மா விசர் அலட்டாதையும் என்னுடன் வேலை செய்யும் "மரியா"வேலை விடயமாக மூன்று மணிக்கு ஒரு "மீட்டிங்"இருக்கு அதை தான் ஞாபகபடுத்தியவள் என்றேன்.குளிர்பானத்தை குடித்தபடியே என்னவோ நீங்க சொல்லுறதை தான் நான் நம்ம வேண்டும்,நானும் "டிகிரி கோல்டர்"தான் அந்த காலத்து பொம்பிளைகள் மாதிரி இல்லை என்று சிரித்தபடியே கூறினாள்.குளிர்பானம் அவளை குளிர்மைபடுத்தியது நானும் குளிர்பானத்திற்கு ஒரு நன்றியை சொன்னேன்."ரெலிபோன் ரிங்" பண்ணுது எடுங்கோ அப்பா நான் பெரியவனை "சுவிமிங் கிளாசில"விட்டிட்டு வாரேன் என்று வெளியே சென்றவள் திரும்பி வரும் பொழுது தொலைபேசியில் நான் சல்லடித்து கொண்டிருப்பதை கண்டாள்,கோபம் வந்தாலும் காட்டிகொள்ளாமள் உள்ளே சென்றாள்.ஆனந்தி,மனிசி வந்திட்டா பிறகு நான் கதைக்கிறேன் உம்முடைய நம்பரை சொல்லும் என்று அதை எழுதி கொண்டேன்.என்ன வெயிலோ என்று அன்பாக கேட்க,வெயில் வெளியில் இல்லை மனசிற்குள் தான் அனலாய் சுடுகிறது என்றாள்.ஏன் சும்மா கத்துகிறாய் என்று எனது குரலை உயர்த்த அடங்கியவளாக நீங்கள் ஏன் இப்ப சும்மா கத்துறியள் இப்படி கத்துவதனால் எனக்கு ஒன்றுமில்லை உங்களுக்கு தான் கூடாது."பிளேட் பிரசர்"கூடி ஒரு நாளைக்கு மண்டையை போட வேண்டி வரும்,மண்டையை போட்டாலும் பரவாயில்லை கை,கால் இழுத்து போட்டால் யார் வைத்து பார்க்கிறது என்றவள், எனிமேல் கோபம் வரும் போது சும்மா கத்தாமல் நித்தியானந்த சுவாமியின் கதவை திற காற்று வரும் சொற் பொழிவு சஞ்சிகைகளிளும் வருது தொலைகாச்சிகளிளும் வருகிறது பொறுமையாக இருந்து பாருங்கோ படியுங்கோ மனதில் அமைதி கிடைக்கும் சொல்லியபடியே ஒரு சஞ்சிகையை கொண்டு வந்து தந்தாள்.சொல்ல மறந்து போனேன் நீர் வெளியே போகும் பொது ஒரு "கோல்"வந்தது அது யாரோ உம்முடையை பஜனை குரூப்பில் இருப்பவராம் நித்தியானந்த கண்ணன் என்று பெயர் சொன்னார் சனிகிழமை சுவாமி நித்தியானந்தா பஜனையாம் உம்மை வரட்டாம் என்றேன்.அதுசரி யாரப்பா அந்த நித்தியானந்த கண்ணன்,அட உங்களுக்கு தெரியாதோ அது எங்கண்ட "பென்டில்கில்" கண்ணன் சிவபக்தர்களை சிவனடியார்கள் என்பது போல் கம்னியூஸ்டுகளை தோழர் என்பது போல் நித்தியானந்தாவின் பக்தர்களை நித்தியானந்திகள் என்று சொல்லுறனாங்கள்.அடுத்த சனிகிழமை நித்தியானந்த சுவாமிக்கு காலை 5 மணியில் இருந்து பின்னேரம் 5 மணி வரை பஜனை வைக்கிறோம் மத்தியான பிரசாதமும் உண்டு அவருடைய சொற்பொழிவுகளை நித்தியான்ந்தி பத்மா விளங்கபடுத்த உள்ளார் நீங்களும் வாங்கோ என்றாள்.சரி என்று தஞ்சாவூர் பொம்மை போல் தலையை ஆட்டி போட்டு நான் எங்களிண்ட யாழ் இணையைத்தை தட்டி பார்த்து கொண்டு இருந்தேன்.நித்தியானந்தாவின் லீலைகள் என்று வந்த செய்தியை படித்துபோட்டு இஞ்சவாரும் கதவை திறந்து காற்று வாங்கின சாமி சீலையை திறக்க போய் பிரச்சினையில மாட்டுபட்டு போனாராம் என்று மனிசியை கூப்பிட்டு காட்டினேன் மனிசி நம்பமாட்டாள் என்று அடம்பிடித்தாள் அவள் ஒரு நாளும் அப்படி செய்யமாட்டார் அது "கிராபிக்ஸ்"செய்த விளையாடு சாமியின் எதிரிகள் அப்படி செய்து போட்டார்கள் அந்த முகத்தை பார்த்தாலே தெரியுது இப்படியான கெட்டவேலைகள் செய்ய கூடியவர் அல்ல என்று.சுவாமியை இப்படி எழுதினவர்கள் பேசினவர்கள் எல்லாம் இடி விழுந்து சாக வேண்டும் என்று திட்ட வேறு தொடங்கிவிட்டாள்.அடியே கட்டின புருஷன் "ரெலிபோனில" கதைத்தாலோ பொம்பிளையோடு சிரித்து கதைத்தாளோ சந்தேகம் வந்து முறைத்து பார்பீர்கள் ஆனா இந்த பொறுக்கிகள் சாமியார் என்ற பெயரில் செய்தவைகளை படம் பிடித்து காட்டினாலும் நம்பமாட்டியள் என்று அடம்பிடிகிறியள் எதற்கு எடுத்தாலும் நாங்கள் "டிகிரி கோல்டர்"என்பீர்கள் உந்த புறம்போக்குகள்,பொம்பிளை பொறுக்கிகள் பின்னால் போகும் போது உங்கள் டிகிரிகள் உங்களுக்கு என்னத்தை செய்தன....இனிமேல் எவனுக்கு பின்னாலையும் சாமி,ஆனந்திகள் என்று போனீயோ கொலை விழும் அல்லது நான் வீட்டை விட்டு போகனும் இல்லை நீ விட்டு போகனும் என்றபடியே அரைபோத்தலை அடித்துபோட்டு நான் நித்தியானந்ததில் திளைத்தேன்.

Friday, June 4, 2010

மனதில் பதிக்க மறந்தோம்

தத்துவங்கள் பல தந்தனர்
தமிழ் தத்துவ ஞானிகள்
தமிழர் நாம் மறந்தோம்
தத்துவம் தனை மனதில் பதிக்க

சித்திரமாக சுவர்களில் பதித்தோம்
சிலையாக வடித்தோம் தெருக்களில்
வைத்தோம் குருபூசை-
மறந்தோம்வையத்துள் வாழ குரு கூறியவைகளை

உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில்
உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று
உபதேசங்களை கடை பிடிப்பது
கடினமென்று உணர்ந்து

மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை
உபதேசித்தவர்களின் பெயர்களிலும்மன்றங்களிலும்