Friday, June 4, 2010

மனதில் பதிக்க மறந்தோம்

தத்துவங்கள் பல தந்தனர்
தமிழ் தத்துவ ஞானிகள்
தமிழர் நாம் மறந்தோம்
தத்துவம் தனை மனதில் பதிக்க

சித்திரமாக சுவர்களில் பதித்தோம்
சிலையாக வடித்தோம் தெருக்களில்
வைத்தோம் குருபூசை-
மறந்தோம்வையத்துள் வாழ குரு கூறியவைகளை

உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில்
உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று
உபதேசங்களை கடை பிடிப்பது
கடினமென்று உணர்ந்து

மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை
உபதேசித்தவர்களின் பெயர்களிலும்மன்றங்களிலும்

No comments:

Post a Comment