Thursday, September 15, 2011

துவக்கு

என்னை கைப் பிடித்தவன்
மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை
அதேபோல் நானும் எந்த வேறுபாடும்
பார்ப்பதில்லை
என்னை அவன் இயக்கினான்
நானும் இயங்கினேன்
தோளில் சுமந்தான்
நானும் அழகாக தூங்குவேன்
நண்பனுக்கு அறிமுகம் செய்தான்
அவன் என்னை பார்த்து வியந்தான்
ஒரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைஎதிரி என்றான்
இன்னோரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைதுரோகி என்றான்
மற்றொருநாள் இவன் வீழ்ந்தான்
நானும் வீழ்ந்தேன்,முனகினான்
மற்றொருவன் ஒடி வந்தான்
என்னை தூக்கினான்
நிறுத்தினான் அவன் முனகளை
இனியோரு நாள் இவனும் வீழ்வான்
நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன்
ஆனால் என்னை இயக்குபவன் .......

No comments:

Post a Comment