Sunday, April 11, 2010

ரம்பா என்ட கஸ்பனின்ட பிரண்டின்

இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள்.அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன்.பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா,சரத் என்ற ஒரு சதத்திற்கு உதவாத செய்திகளை படிக்கத்தான் தெரியும் என்றவள்,அந்த பெடியன் எங்கட யாழ்ப்பாணத்து பெடியனாம் உண்மையோ சந்தேகத்துடன் கேட்டாள்.என்னுடைய சினேகிதனின் தம்பியைதான் கட்டப்போறாள் ,அந்த பெடியனை சின்னவயசில கண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் பில்டப் பண்ணி கதையை சொண்ணதுதான் தாமதம் அவளின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏன் இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்ற செல்ல கோபத்துடன்,தொலை பேசியை எடுத்தவள் மறு முனையில் கலோ சொல்லமுதலே "இஞ்ச ரம்பா கலியாணம் கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியையாம் "என்றவள் தொலை பேசியை துண்டித்தாள்.தொலைபேசி வீட்டுக்கு வந்தாலோ அல்லது வெளியே தொலை பேசி எடுத்தாலோ "ஜயோ ரம்பா கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியாம்" என்று சொல்ல மறக்கவில்லைமறுநாள் தொலை பேசியை நான் எடுத்தேன் ,அண்ணே நீங்கள் சரியான ஆள் ரம்பா உங்களின்ட பிரண்டின் தம்பியையாம் கட்டுறாள், நீங்கள் எனக்கு சொல்லவே இல்லையே? உங்களுக்கு இப்பவும் அந்த பிரண்ட்டுடன் தொடர்பிருக்குதோ?என்றாள் உறவுக்கார பெண் ஒருத்தி.போன கிழமையும் டெலிபோன் பண்னினவன் கலியாணத்திற்கு வரச்சொல்லி கூப்பிட்டான் என்று றீல் விட்டேன்,படசாலை விட்டபின்பு அவனை நான் சந்திக்கவுமில்லை டெலிபொனில் கதைக்கவுமில்லை இதைஎல்லாம் இவர்களுக்கு சொல்லி நான் ஏன் என்னுடைய பிரபல்யத்தை குறைப்பான் என்ற நல்லெண்ணம் தான் காரணம் .அன்று மாலை கோயிலில் பிரசாதம் வாங்கி அருகில் இருக்கும் மதிலில் சாய்ந்தபடியே சாப்பிட்டுகொண்டுஇருந்தேன்.என்னடாப்பா ரம்பாவின் பெடியன் உன்களின்ட ஊர் பெடியணாம் உன்னோடைபடிச்சவனின்ட தம்பியாம் என்று எனது முதுகை தட்டியபடியே வந்தார் என்கன்ட கந்தர்,எனக்கு எரிச்சலாக வந்தது இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை.கடந்த மே மாதம் என்னுடன் படித்தவன் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றான். அவனைப்பற்றி எவரும் என்னிடம் விசாரிக்கவில்லை.ஆனால் இந்த ரம்பா யாரையோ கட்டப்போகிறாளாம் அதைப்பற்றி நேரிலும்,தொலை பேசியிலும் விசாரிக்கின்றனர் ,என்னடா உலகம் இது.உயிரை ,உடலை இனத்திற்காக அர்ப்பணித்தவர்களை விட ,உடலைகாட்டி நடித்த நடிகை எம்மவர் மனதில் இடம் பிடித்துள்ளார் என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.நாட்கள் செல்ல மற்றவர்கள் என்னிடம் ரம்பாவைப்பற்றி கேட்கமுதலே நானேசொல்ல ஆரம்பித்தேன்,என்னுடைய பிரண்டின் தம்பியை தான் ரம்பா கட்டப்போறாள் என்றும் இதனால் எனக்கு எதோ புகழ் வருவது போல எண்ணினேன் .இடக்கிட ரம்பா கனவிலயும் வாரா......நித்திரையில் புலம்பினேன்..,மனைவி என்னப்பா ரம்பா என்று புலம்பினீங்கள் ...அது ஒன்றுமில்லை என்னுடைய பிரண்டின் தம்பியை கனவில கண்டனான் அதால ரம்பா என்று புலம்பிட்டன் போல என சாமாளித்துகொண்டேன். (யாவும் அதிஉச்ச கற்பனையே)

No comments:

Post a Comment