Monday, March 22, 2010

நம்பமுடியவில்லை

எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது) சில பேர் கொப்பி பேஸ்ட் பண்ணிணம்..............நானும் என்ட பங்கிற்கு ஒன்றை எழுதி பார்தேன்,தொடர்கதை ஒன்றும் இல்லை ஒருநிமிச கதை,இந்த கதையையும் ஒருக்கா வாசித்து பாருங்கோ..நல்லம் என்று சொன்னீங்கள் என்றா தொடர்ந்து அறுப்பன்(எழுதுவன்).

கவிதாவுக்கு நம்ப முடியவில்லை பாஸ்கரன் இப்படி செய்வான் என்று.பாஸ்கரன் கவிதாவின் அண்ணணுடன் ஒன்றாக படித்தவன்,ஒரு நாள் பாஸ்கரனும் சுதனும் உரையாடி கொண்டிருந்தது கவிதாவின் காதில் விழுந்தது.போராட்டங்கள், ஆயுதங்கள் மற்று இயக்கங்களை வளர்ப்பது எப்படி மற்றும் சோசலிசம், கம்னியூசம் என்று எல்லாம் கதைப்பதை கேட்ட கவிதா மெல்லமாக சென்று தந்தையிடம் சொல்லிவிட்டாள். தந்தையும் சுதனிடம் விசாரித்த போது சுதனும், பாஸ்கரன் இயக்கம் ஒன்றில் இருப்பதாகவும் தன்னையும் இணையும்படி கேட்பதாகவும் தந்தையிடம் கூறினான். அடுத்த நாள் தந்தை சுதனை அழைத்து கொண்டு கொழும்பு சென்று ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்து அனுப்பிவிட்டார்.

முன்னொரு காலத்தில் அண்ணாவிடம் கதைக்கும் போது சிங்கள் இராணுவம் வீதியில் செல்லும் போது இப்படி நின்று கிரனைட் எறிய வேண்டும் என்று சொன்ன பாஸ்கரனா இப்பொழுது இப்படி தேசியதிற்கு எதிராக புலத்தில் இருந்து குரல் கொடுகிறான், கவிதாவால் நம்பமுடியவில்லை

No comments:

Post a Comment