தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.
சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.
கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.
புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.
மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.
"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.
கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.
"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.
சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.
சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.
கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.
இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.
"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.
"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"
"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"
"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"
ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.
குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.
"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"
"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"
"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"
"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்
"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"
"யாருக்கு அண்ணே"
"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"
Tuesday, April 8, 2014
Thursday, February 13, 2014
தண்ணி
அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்டான்.
மச்சான் கொட்டா ,கொல்டா என குகன் கேட்டான்.ஒன்றும் வேண்டாம் மச்சான் என்றேன்.
"என்ன தண்ணியை விட்டிட்டியோ?ஊரில நீ அடிக்காத தண்ணியா"
"இல்லை மச்சான் ஊரில போத்தல் கணக்கில கள்ளடிச்ச எங்களுக்கு,இங்க உவங்கள் அல்ககோல் வீதாசாரம் போட்டு பயப்படுத்துகிறாங்கள் அதுதான் "
"அரைப்போத்தல் கள்ளுக்கு உவங்கன்ட மூன்று போத்தல் பியர் அடிச்சா வாற வெறி வரும், பயப்படாமல் அடிடா"
இருவரும் உட்சாகபாணத்தை அருந்தி கொண்டிருக்கும் பொழுது சாய்நேஸ் ஒடிவந்தான் அவனுக்கு கொஞ்சம் கோக்கை ஊற்றிகொடுத்தேன் .சிரித்த படியே வாங்கி குடித்து விட்டு உள்ளே சென்று பெரிய ஏப்பம் விட்டான். "யாரப்பா இவனுக்கு கோக் கொடுத்தது" என உள்ளே இருந்து திருமதி குகன் குரல் கொடுத்தாள்.
"சுரேஸ்தான் கொஞ்சம் கொடுத்தவன்"
"சுரேஸ்! நாங்கள் இவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை , கோக் குடிச்சான் என்றால் ஒரே கைபர் அக்டிவ் "என்றாள். கொஞ்சம் கோபமாக சொன்னாள்.எனக்கு தலை சுற்றியது மாறிக்கிறி பியரை ஊத்தி கொடுத்து போட்டேனோ என, அவனுக்கு கொடுத்த கிளாசை மனந்து பார்த்தேன் கிளாஸில் கோக்தான் மனந்தது.
மனிசி அவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை அதுதான் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாள் என்ற குகன் you carry on மச்சான் என்றான்.எனக்கு ஏறிய வெறி படக்கென்று இறங்கிவிட்டது.பிறகு இரண்டு கிளாஸ் அடிச்ச பின்பு மீண்டும் ஒரு பதமான நிலைக்கு வந்தேன்.இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒருத்தருக்கும் நான் கோக் கொடுப்பத்தில்லை.
வீட்டை திரும்பி போகும்பொழுது மனிசி திட்டிக்கொண்டே வந்தாள்.
"ஏன் சாய் நேஸ்க்கு கோக் கொடுத்தனீங்கள்"
"என்னப்பா பியரை கொடுத்தமாதிரி கத்துகின்றாய்"பியர் அடிச்ச துணிவில் நானும் கத்தினேன் மனிசி அடங்கி போயிட்டாள்.இரண்டுநாள் கதைக்காமல் இருந்தவள் சொன்னாள் இஞ்சபாருங்கோ அப்பா இந்த நாட்டில யாரும் வீட்டை வந்தால் கூட தேனீரா,கொப்பியா,கூல் டிரிங்கோ வேணும் ,தேனீருக்கோ,கோபிக்கோ எத்தனை சீனி போடவேணும் என கேட்டுத்தான் கொடுக்க வேணும் ஊரில் கொடுக்கிறமாதிரி நங்கள் விரும்பிய தேனீரை நல்லா சீனியை போட்டு கரைச்சு கொடுக்ககூடாது.
அட விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் தேனீரில் இவ்வளவு ஜனநாயகம் எங்கன்ட சனம் பார்க்குது என்றால் நிச்சயம் சதாரணவாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் என மனதில் எண்ணிக்கொண்டேன்.
"இஞ்சாரும் எனக்கு இந்த கோக் விசயத்தில் இன்னும் சந்தேகம்"
"என்ன சந்தேகம்"
"கோக் குடிக்கச்சொல்லி விளம்பரம் போடுறாங்கள் ,மக்டொனாலில் கோக் கொடுக்கிறாங்கள் .கைபர் அக்டிவ் வந்திடும் என்றால் ஏன் கடைகளில் எல்லாம் விற்கிறாங்கள்....அது சரி கைபர் அக்டிவ் (hyperactive )என்றால் என்ன ?எதாவது வருத்தமா?"
"சீ சீ வருத்தம் கிருத்தம் இல்லை குழப்படி செய்து கொண்டிருப்பாங்கள் பெடியளை கொன்றால் பண்ண முடியாது"
"அட குழப்படி செய்வாங்கள் என்றபடியாளொ கோக் கொடுக்க கூடாது.குழப்படி செய்வது பெடி,பெட்டையளின்ட குணம்,சிலருக்கு உது பரம்பரையாக வரும்.சின்னவயசில நானும் குகனும் செய்யாத குழப்படியே,அப்பனின் குணம் அவனுக்கு வந்திருக்கும் ஏன் அவனின்ட அம்மா கொய்யா மரத்தில ஏறி விழுந்தெழும்பினது எல்லாம் குழப்படிதானே"
"உதுகளைப்பற்றி நீங்கள் ஆராச்சி செய்யாமல் இனிமேல் சின்னபிள்ளைகளுக்கு கோக் கொடுக்கும் பொழுது தாய் தெகப்பன்மாரிட்ட கேட்டுபோட்டு கொடுங்கோ"
"ம்ம்ம்ம்"
சாய்நேஸ் நாள்ளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஆக வளர்ந்து கொண்டிருந்தான்.அதேபோல எங்களது உற்சாகபாண பலவித பரிணாம வளர்ச்சியடைந்து சென்றுகொண்டிருந்தது .அதாவது பியர்,சிவப்பு,கறுப்பு என முன்னேறிக்கொண்டிருந்தது.
சிட்னியில் பாருங்கோ உவங்க உந்த வெள்ளைகள் கண்டதையும் கண்ட இடத்தில செய்ய விடமாட்டாங்கள் சட்டத்தை போட்டு கட்டுபடுத்தி வைச்சிருக்கிறாங்கள்.சுதந்திரமாக திரிந்த எங்களுக்கு சரிவராது . சட்டங்களை உச்சிப்போட்டு எங்கன்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் நாங்கள் கில்லாடிகள் என வெள்ளைகளுக்கு தெரியாது.சில மண்டபங்கள்,சில வீதிகளில் அல்ககோல் பிரி சோன் என்று பெயர்பலகை போட்டிருப்பாங்கள். நாங்கள் என்ன செய்வோம் என்றால் கோக் கானுக்குள் உற்சாக பாணத்தை கலந்து வெள்ளைகளின் சட்டத்தை பேய்காட்டியிருக்கிறோம்.
சில சமயங்களில் சாய்நேஸும் கோக் கானுடன் நிற்பதை கண்டிருக்கிறேன் .அப்பன் வெள்ளைகளை பேய்காட்ட மகன் அப்பனை பேய்காட்டுகிறானோ தெரியவில்லை.எல்லாம் அந்த உற்சாக பாணத்திற்கே வெளிச்சம்....
குடிவகையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி போல் எங்களுடைய மது அருந்தும் இடமும் பரிணாம வளர்ச்சி யடைந்திருந்தது. ஆரம்பத்தில் வீட்டின் வெளியே பின் விறாந்தை,கார் டிக்கி போன்றவற்றிலிருந்து மது அருந்திய நாங்கள் இன்று வீட்டின் மைய பகுதியில் பார் ஒன்றை நிரந்தரமாக உருவாக்கி மது அருந்த கூடியவசதியுடன் இருக்கின்றோம் .அப்படியான வசதியுடையதுதான் குகனின் வீடு.சாய்நெஸும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டான் அதனால் குகனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனயாக இருக்கவில்லை என்பது அவனது வாழ்க்கை முறையில் தெரிந்தது.
கைத்தொலைபேசி அலரியது .பெயரை பார்த்தேன் குகன் ...வழமையாக தொலை பேசி வந்தால் யாருடைய கோல் என்று பார்த்துதான் எடுப்பேன்.குகனின் கோல் வந்தால் அநேகமாக பதில் அளிப்பேன்.
"`ஹலோ மச்சான் எப்ப வந்தனீ"
"அங்கிள் தி ஸ் சாய்நேஸ்....அப்பா சனிக்கிழமை தான் வருகின்றார் ...I am going to propose to a girl on saturday ...it is a suprise party..அன்ரியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ"
"who is that lucky girl............."
"எங்கன்ட பிள்ளையோ அல்லது"
"ஒம் அங்கிள் சிறிலங்கன்"
".....சமரசிங்கே"
"Thanks for calling. I will be there. Bye
"
என்று கூறி டெலிபோனை துண்டித்தேன்.
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
"இஞ்சாரும் உவன் சாய் நேஸ் சனிக்கிழமை ப்ரொபோஸ் பண்ணப்போறானாம்"
"யார் அந்த சிங்கள பெட்டையையோ"
"ஓம்மோம் உமக்கு முதலெ தெரியுமோ"
"ஒம் தாய்காரி ஒருதடவை சும்மா சொன்னவ அவையளுக்கு பெரிசா விருப்பமில்லை,பெடியன் ஒற்றை காலில் நிற்கிறானாம்"
"விசர் பெடியன் ஒரு எங்கன்ட பெட்டையை கட்டியிருக்கலாம்"
"இஞ்ச அப்பா நாங்கள் உதுகளைப்பற்றி கதைக்கூடாது எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கு..."
"அது சரி .....எதோ பெட்டையை புரப்போஸ் பண்ணியிருக்கிறான் என்று சந்தோசப்படுவோம்..." "
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
சனிக்கிழமை பின்னேரம் குகனின் வீட்டுக்கு சென்றிருந்தோம்..இன்னும் சிலர் வந்திருந்தனர்.எல்லாமாக 20 பேர் கூடியிருப்போம் .குகனும் அப்பொழுதுதான் வந்திருந்தான்.அவனிடம் சுகம் விசாரித்துவிட்டு எல்லோரும் கூடி கதைத்துகொண்டிருந்தோம்.குகன் எல்லோரையும் பாரின் முன் வரச்சொன்னான்.சாய் நேஸ் பார் அட்டன்டன்டனாக உள்ளே நின்றான்.
"அங்கிள் வைன்,பியர்,ஸ்கொட்ச்"பெடிக்கு எட்டு வயசில கொக் கொடுத்தபொழுது கைபர் அக்டிவ் என்றாங்கள் பெடி இப்ப ஸ்கொட்ச் அடிக்குது எல்லாம் காலம்தான்டா என மனதில் எண்ணிகொண்டேன்.
"ஸ்கோட்ச் வித் கோக்"என்றேன்.பக்கத்தில் நின்ற லண்டன் காய் ஒன்று ஸ்கோட்ச் ஒன் த றோக் என்றார்.
என்னடா இந்த மனுசன் ஒன் த றொக் என்று சொல்லுறார் என கடக்கண்ணால் பார்த்தேன்.சாய்நேஸ் ஐஸ்கட்டியை போட்டு ஸ்கோட்ச்சை ஊத்தினான்.அப்ப தான் விளங்கிச்சு ஒன் தறொக்ஸ் என்றால் நடுத்தர வர்க்க குடிவகயை ஐஸ்கட்டியினுள் ஊத்தி குடிப்பது என்று.
எனக்கு இப்ப ரெட் லெபிள் அடிச்சா தலை இடி வருகுது நான் புளு லேபிள்தான் இனி பாவிக்க போறான் அந்தமாதிரி ஏறும் ஆனால் அடிச்ச மாதிரியே இருக்காது.வரும் பொழுது டுயுட்டி விரியில் எடுத்தனான் இருங்கோ கொண்டுவாரன் என உயர் சாதி குடியை அறிமுகம் செய்தான் குகன்.
ஒவ்வொரு குடி வகைக்கும் தனியாக கிளாஸ்கள் இருந்தன.ஸ்கோட்ச்சுக்கு தனியான கிளாஸ்,பியர் குடிப்பதற்கு தனியானது,வைன் மற்றும் கொக்டெயில் குடிப்பதற்கென தனிரகம்.அதாவது சாதி பிரிக்கப்பட்டிருந்தது.கிளாசில் மட்டுமல்ல குடிவகையிலும் பிரிக்கப்படிருந்தது.ஒரே இன குடிவகையாக இருந்தாலும் வர்க்க வேறுபாடு இருந்தது.கொல்ட் லெபிள்,புளு லெபில்,கிரீன் லெபிள்,பிளக் லெபிள்,ரெட் லெபிள் என வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஜொனி வோக்கர் இனம்,சிவாஸ் இனம் போன்ற இனங்களின் நடுத்தர வர்க்க குடிவகைகள் அதிகமாக காணப்பட்டது.
ஒரு குடிவகையை இந்த கிளாசில்தான் ஊத்தி அடிக்க வேண்டும் என்ற வர்க்க வேறுபாட்டு சிந்தனை எனக்கு எதோ குடிவகையில் மையவாத சிந்தனை போல் இருந்தது.உடனே பக்கதில் இருந்த வைன் கிளாசை எடுத்து கொஞ்சம் ஸ்கொட்ச்,கொஞ்சம் பியர்,சிரிதளவு வைன் ஊத்தி கொக்டெயிலா அடித்தேன்........குடிவகையில் வர்க்க வேறுபாடு தெரியவே இல்லை..... வெறி ஏறுவதற்கு தான் எல்லோரும் குடிக்கின்றனர் பிறகு ஏன் இந்த கிளாஸுக்குள் இந்த குடிவகைதான் ஊத்தி குடிக்க வேணும் என்று சட்டம் வைச்சிருக்கிறாங்கள்.இந்த குடிகார மையவாத சிந்தனையை ஒரு புரட்சி மூலம் ஒழிக்க வேண்டும் என எண்ணியபடியே மீண்டும் வைன் கிளாசில் ஸ்கொட்சை ஊத்தினேன்....விரும்பிய கிளாசில் விரும்பினதை அடிக்க வேணும் அதுதான் ஜனநாயகம் என்று புலம்பத் தொடங்கினேன்....
யாவும் கலப்படமற்ற சுத்த கற்பனை
மச்சான் கொட்டா ,கொல்டா என குகன் கேட்டான்.ஒன்றும் வேண்டாம் மச்சான் என்றேன்.
"என்ன தண்ணியை விட்டிட்டியோ?ஊரில நீ அடிக்காத தண்ணியா"
"இல்லை மச்சான் ஊரில போத்தல் கணக்கில கள்ளடிச்ச எங்களுக்கு,இங்க உவங்கள் அல்ககோல் வீதாசாரம் போட்டு பயப்படுத்துகிறாங்கள் அதுதான் "
"அரைப்போத்தல் கள்ளுக்கு உவங்கன்ட மூன்று போத்தல் பியர் அடிச்சா வாற வெறி வரும், பயப்படாமல் அடிடா"
இருவரும் உட்சாகபாணத்தை அருந்தி கொண்டிருக்கும் பொழுது சாய்நேஸ் ஒடிவந்தான் அவனுக்கு கொஞ்சம் கோக்கை ஊற்றிகொடுத்தேன் .சிரித்த படியே வாங்கி குடித்து விட்டு உள்ளே சென்று பெரிய ஏப்பம் விட்டான். "யாரப்பா இவனுக்கு கோக் கொடுத்தது" என உள்ளே இருந்து திருமதி குகன் குரல் கொடுத்தாள்.
"சுரேஸ்தான் கொஞ்சம் கொடுத்தவன்"
"சுரேஸ்! நாங்கள் இவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை , கோக் குடிச்சான் என்றால் ஒரே கைபர் அக்டிவ் "என்றாள். கொஞ்சம் கோபமாக சொன்னாள்.எனக்கு தலை சுற்றியது மாறிக்கிறி பியரை ஊத்தி கொடுத்து போட்டேனோ என, அவனுக்கு கொடுத்த கிளாசை மனந்து பார்த்தேன் கிளாஸில் கோக்தான் மனந்தது.
மனிசி அவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை அதுதான் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாள் என்ற குகன் you carry on மச்சான் என்றான்.எனக்கு ஏறிய வெறி படக்கென்று இறங்கிவிட்டது.பிறகு இரண்டு கிளாஸ் அடிச்ச பின்பு மீண்டும் ஒரு பதமான நிலைக்கு வந்தேன்.இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒருத்தருக்கும் நான் கோக் கொடுப்பத்தில்லை.
வீட்டை திரும்பி போகும்பொழுது மனிசி திட்டிக்கொண்டே வந்தாள்.
"ஏன் சாய் நேஸ்க்கு கோக் கொடுத்தனீங்கள்"
"என்னப்பா பியரை கொடுத்தமாதிரி கத்துகின்றாய்"பியர் அடிச்ச துணிவில் நானும் கத்தினேன் மனிசி அடங்கி போயிட்டாள்.இரண்டுநாள் கதைக்காமல் இருந்தவள் சொன்னாள் இஞ்சபாருங்கோ அப்பா இந்த நாட்டில யாரும் வீட்டை வந்தால் கூட தேனீரா,கொப்பியா,கூல் டிரிங்கோ வேணும் ,தேனீருக்கோ,கோபிக்கோ எத்தனை சீனி போடவேணும் என கேட்டுத்தான் கொடுக்க வேணும் ஊரில் கொடுக்கிறமாதிரி நங்கள் விரும்பிய தேனீரை நல்லா சீனியை போட்டு கரைச்சு கொடுக்ககூடாது.
அட விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் தேனீரில் இவ்வளவு ஜனநாயகம் எங்கன்ட சனம் பார்க்குது என்றால் நிச்சயம் சதாரணவாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் என மனதில் எண்ணிக்கொண்டேன்.
"இஞ்சாரும் எனக்கு இந்த கோக் விசயத்தில் இன்னும் சந்தேகம்"
"என்ன சந்தேகம்"
"கோக் குடிக்கச்சொல்லி விளம்பரம் போடுறாங்கள் ,மக்டொனாலில் கோக் கொடுக்கிறாங்கள் .கைபர் அக்டிவ் வந்திடும் என்றால் ஏன் கடைகளில் எல்லாம் விற்கிறாங்கள்....அது சரி கைபர் அக்டிவ் (hyperactive )என்றால் என்ன ?எதாவது வருத்தமா?"
"சீ சீ வருத்தம் கிருத்தம் இல்லை குழப்படி செய்து கொண்டிருப்பாங்கள் பெடியளை கொன்றால் பண்ண முடியாது"
"அட குழப்படி செய்வாங்கள் என்றபடியாளொ கோக் கொடுக்க கூடாது.குழப்படி செய்வது பெடி,பெட்டையளின்ட குணம்,சிலருக்கு உது பரம்பரையாக வரும்.சின்னவயசில நானும் குகனும் செய்யாத குழப்படியே,அப்பனின் குணம் அவனுக்கு வந்திருக்கும் ஏன் அவனின்ட அம்மா கொய்யா மரத்தில ஏறி விழுந்தெழும்பினது எல்லாம் குழப்படிதானே"
"உதுகளைப்பற்றி நீங்கள் ஆராச்சி செய்யாமல் இனிமேல் சின்னபிள்ளைகளுக்கு கோக் கொடுக்கும் பொழுது தாய் தெகப்பன்மாரிட்ட கேட்டுபோட்டு கொடுங்கோ"
"ம்ம்ம்ம்"
சாய்நேஸ் நாள்ளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஆக வளர்ந்து கொண்டிருந்தான்.அதேபோல எங்களது உற்சாகபாண பலவித பரிணாம வளர்ச்சியடைந்து சென்றுகொண்டிருந்தது .அதாவது பியர்,சிவப்பு,கறுப்பு என முன்னேறிக்கொண்டிருந்தது.
சிட்னியில் பாருங்கோ உவங்க உந்த வெள்ளைகள் கண்டதையும் கண்ட இடத்தில செய்ய விடமாட்டாங்கள் சட்டத்தை போட்டு கட்டுபடுத்தி வைச்சிருக்கிறாங்கள்.சுதந்திரமாக திரிந்த எங்களுக்கு சரிவராது . சட்டங்களை உச்சிப்போட்டு எங்கன்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் நாங்கள் கில்லாடிகள் என வெள்ளைகளுக்கு தெரியாது.சில மண்டபங்கள்,சில வீதிகளில் அல்ககோல் பிரி சோன் என்று பெயர்பலகை போட்டிருப்பாங்கள். நாங்கள் என்ன செய்வோம் என்றால் கோக் கானுக்குள் உற்சாக பாணத்தை கலந்து வெள்ளைகளின் சட்டத்தை பேய்காட்டியிருக்கிறோம்.
சில சமயங்களில் சாய்நேஸும் கோக் கானுடன் நிற்பதை கண்டிருக்கிறேன் .அப்பன் வெள்ளைகளை பேய்காட்ட மகன் அப்பனை பேய்காட்டுகிறானோ தெரியவில்லை.எல்லாம் அந்த உற்சாக பாணத்திற்கே வெளிச்சம்....
குடிவகையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி போல் எங்களுடைய மது அருந்தும் இடமும் பரிணாம வளர்ச்சி யடைந்திருந்தது. ஆரம்பத்தில் வீட்டின் வெளியே பின் விறாந்தை,கார் டிக்கி போன்றவற்றிலிருந்து மது அருந்திய நாங்கள் இன்று வீட்டின் மைய பகுதியில் பார் ஒன்றை நிரந்தரமாக உருவாக்கி மது அருந்த கூடியவசதியுடன் இருக்கின்றோம் .அப்படியான வசதியுடையதுதான் குகனின் வீடு.சாய்நெஸும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டான் அதனால் குகனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனயாக இருக்கவில்லை என்பது அவனது வாழ்க்கை முறையில் தெரிந்தது.
கைத்தொலைபேசி அலரியது .பெயரை பார்த்தேன் குகன் ...வழமையாக தொலை பேசி வந்தால் யாருடைய கோல் என்று பார்த்துதான் எடுப்பேன்.குகனின் கோல் வந்தால் அநேகமாக பதில் அளிப்பேன்.
"`ஹலோ மச்சான் எப்ப வந்தனீ"
"அங்கிள் தி ஸ் சாய்நேஸ்....அப்பா சனிக்கிழமை தான் வருகின்றார் ...I am going to propose to a girl on saturday ...it is a suprise party..அன்ரியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ"
"who is that lucky girl............."
"எங்கன்ட பிள்ளையோ அல்லது"
"ஒம் அங்கிள் சிறிலங்கன்"
".....சமரசிங்கே"
"Thanks for calling. I will be there. Bye
"
என்று கூறி டெலிபோனை துண்டித்தேன்.
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
"இஞ்சாரும் உவன் சாய் நேஸ் சனிக்கிழமை ப்ரொபோஸ் பண்ணப்போறானாம்"
"யார் அந்த சிங்கள பெட்டையையோ"
"ஓம்மோம் உமக்கு முதலெ தெரியுமோ"
"ஒம் தாய்காரி ஒருதடவை சும்மா சொன்னவ அவையளுக்கு பெரிசா விருப்பமில்லை,பெடியன் ஒற்றை காலில் நிற்கிறானாம்"
"விசர் பெடியன் ஒரு எங்கன்ட பெட்டையை கட்டியிருக்கலாம்"
"இஞ்ச அப்பா நாங்கள் உதுகளைப்பற்றி கதைக்கூடாது எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கு..."
"அது சரி .....எதோ பெட்டையை புரப்போஸ் பண்ணியிருக்கிறான் என்று சந்தோசப்படுவோம்..." "
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
சனிக்கிழமை பின்னேரம் குகனின் வீட்டுக்கு சென்றிருந்தோம்..இன்னும் சிலர் வந்திருந்தனர்.எல்லாமாக 20 பேர் கூடியிருப்போம் .குகனும் அப்பொழுதுதான் வந்திருந்தான்.அவனிடம் சுகம் விசாரித்துவிட்டு எல்லோரும் கூடி கதைத்துகொண்டிருந்தோம்.குகன் எல்லோரையும் பாரின் முன் வரச்சொன்னான்.சாய் நேஸ் பார் அட்டன்டன்டனாக உள்ளே நின்றான்.
"அங்கிள் வைன்,பியர்,ஸ்கொட்ச்"பெடிக்கு எட்டு வயசில கொக் கொடுத்தபொழுது கைபர் அக்டிவ் என்றாங்கள் பெடி இப்ப ஸ்கொட்ச் அடிக்குது எல்லாம் காலம்தான்டா என மனதில் எண்ணிகொண்டேன்.
"ஸ்கோட்ச் வித் கோக்"என்றேன்.பக்கத்தில் நின்ற லண்டன் காய் ஒன்று ஸ்கோட்ச் ஒன் த றோக் என்றார்.
என்னடா இந்த மனுசன் ஒன் த றொக் என்று சொல்லுறார் என கடக்கண்ணால் பார்த்தேன்.சாய்நேஸ் ஐஸ்கட்டியை போட்டு ஸ்கோட்ச்சை ஊத்தினான்.அப்ப தான் விளங்கிச்சு ஒன் தறொக்ஸ் என்றால் நடுத்தர வர்க்க குடிவகயை ஐஸ்கட்டியினுள் ஊத்தி குடிப்பது என்று.
எனக்கு இப்ப ரெட் லெபிள் அடிச்சா தலை இடி வருகுது நான் புளு லேபிள்தான் இனி பாவிக்க போறான் அந்தமாதிரி ஏறும் ஆனால் அடிச்ச மாதிரியே இருக்காது.வரும் பொழுது டுயுட்டி விரியில் எடுத்தனான் இருங்கோ கொண்டுவாரன் என உயர் சாதி குடியை அறிமுகம் செய்தான் குகன்.
ஒவ்வொரு குடி வகைக்கும் தனியாக கிளாஸ்கள் இருந்தன.ஸ்கோட்ச்சுக்கு தனியான கிளாஸ்,பியர் குடிப்பதற்கு தனியானது,வைன் மற்றும் கொக்டெயில் குடிப்பதற்கென தனிரகம்.அதாவது சாதி பிரிக்கப்பட்டிருந்தது.கிளாசில் மட்டுமல்ல குடிவகையிலும் பிரிக்கப்படிருந்தது.ஒரே இன குடிவகையாக இருந்தாலும் வர்க்க வேறுபாடு இருந்தது.கொல்ட் லெபிள்,புளு லெபில்,கிரீன் லெபிள்,பிளக் லெபிள்,ரெட் லெபிள் என வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஜொனி வோக்கர் இனம்,சிவாஸ் இனம் போன்ற இனங்களின் நடுத்தர வர்க்க குடிவகைகள் அதிகமாக காணப்பட்டது.
ஒரு குடிவகையை இந்த கிளாசில்தான் ஊத்தி அடிக்க வேண்டும் என்ற வர்க்க வேறுபாட்டு சிந்தனை எனக்கு எதோ குடிவகையில் மையவாத சிந்தனை போல் இருந்தது.உடனே பக்கதில் இருந்த வைன் கிளாசை எடுத்து கொஞ்சம் ஸ்கொட்ச்,கொஞ்சம் பியர்,சிரிதளவு வைன் ஊத்தி கொக்டெயிலா அடித்தேன்........குடிவகையில் வர்க்க வேறுபாடு தெரியவே இல்லை..... வெறி ஏறுவதற்கு தான் எல்லோரும் குடிக்கின்றனர் பிறகு ஏன் இந்த கிளாஸுக்குள் இந்த குடிவகைதான் ஊத்தி குடிக்க வேணும் என்று சட்டம் வைச்சிருக்கிறாங்கள்.இந்த குடிகார மையவாத சிந்தனையை ஒரு புரட்சி மூலம் ஒழிக்க வேண்டும் என எண்ணியபடியே மீண்டும் வைன் கிளாசில் ஸ்கொட்சை ஊத்தினேன்....விரும்பிய கிளாசில் விரும்பினதை அடிக்க வேணும் அதுதான் ஜனநாயகம் என்று புலம்பத் தொடங்கினேன்....
யாவும் கலப்படமற்ற சுத்த கற்பனை
Monday, December 30, 2013
வோர்மல்..(Formal)
சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவருவதை கண்ட சுதா "சுருதி! கிரான்ட்மா இஸ் தெயர்" என்று கத்தியபடியே ஒடிப்போனாள் .மகளை கண்ட தாயும் உடனடியாக சக்கரநாற்காலியை விட்டெழுந்து ஓடிப்போய் கட்டியணைத்துகொண்டாள் .இருவரும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.இந்த காட்சியை கண்ட விமானபணிப்பெண் திகைத்து ஒரு விநாடி அதிர்ந்து போனாள்.சக்கர நாற்காலி எதற்கு பாவிப்பது என்பதின் வரைவிலக்கணத்தை அறிய வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டாள்.
அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.
"அம்மா இவள்தான் மூத்தவள்"
"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.
"Hi Grandmamaa how are you........"
" I am good...தமிழ் தெரியாதோ"
"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"
"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..
"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"
"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."
"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"
"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.
காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"நீயும் கார் ஒடுவியே சுருதி"
"ஜெஸ் கிரான்ட்மா"
"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"
"ஒகே அம்மம்மா"
"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"
"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"
"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.
"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"
"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."
"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"
சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா
"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"
சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.
"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .
"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"
" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"
" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.
"இது குசினி "
"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"
"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "
"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "
"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"
"அது என்ன மினிபார்"
"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"
"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "
""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"
"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"
"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"
"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"
"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"
"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"
"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"
சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.
"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"
"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"
ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.
"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"
"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.
"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"
வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
"காய் சுணில்"
"காய் சுருதி"
இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.
"சுணில் சீ இஸ் மை மதர்"
"கலோ அன்ரி"
"கலோ"
சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு
"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"
"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"
"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"
"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"
"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "
"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"
"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"
"உப்படியே வாங்கோவன் "
"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.
"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"
"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"
"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."
"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".
"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."
ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...
அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.
"அம்மா இவள்தான் மூத்தவள்"
"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.
"Hi Grandmamaa how are you........"
" I am good...தமிழ் தெரியாதோ"
"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"
"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..
"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"
"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."
"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"
"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.
காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"நீயும் கார் ஒடுவியே சுருதி"
"ஜெஸ் கிரான்ட்மா"
"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"
"ஒகே அம்மம்மா"
"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"
"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"
"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.
"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"
"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."
"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"
சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா
"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"
சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.
"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .
"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"
" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"
" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.
"இது குசினி "
"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"
"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "
"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "
"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"
"அது என்ன மினிபார்"
"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"
"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "
""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"
"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"
"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"
"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"
"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"
"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"
"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"
சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.
"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"
"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"
ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.
"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"
"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.
"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"
வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
"காய் சுணில்"
"காய் சுருதி"
இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.
"சுணில் சீ இஸ் மை மதர்"
"கலோ அன்ரி"
"கலோ"
சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு
"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"
"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"
"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"
"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"
"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "
"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"
"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"
"உப்படியே வாங்கோவன் "
"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.
"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"
"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"
"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."
"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".
"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."
ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...
Saturday, October 12, 2013
முருகா நீயும் சுழியன்டாப்பா
அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று..
காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம்.
அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயக கட்சிகள் அரசாண்ட காலம்...சேர சோழர்கள் ஆண்ட காலம் போல் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தும் பக்தர்கள் முருக தரிசனத்திற்கு அலையேனவந்து எம்பெருமானுக்கு ஒரு நிரந்தர ஆலயம் அமைக்க வேணும் என்று எகமனதாக முடிவெடுத்து சிட்னி சைவமன்றம் என ஒரு அமைப்பை உருவாக்கி வைகாசி குன்றில் எம்பெருமான் முருகனுக்கு ஒருசிறு காணியும் வாங்கி ஒரு மண்டபம் அமைத்து அவனை குடியமர்த்தினார்கள் என சிட்னி முருகன் படலத்தை சொல்லிகொண்டே வந்தாள்.
சிவனின் கடைசி பெடி முருகன் வைகாசி குன்றில் இருந்தான்.ஆங்கிலபெயர் .....பெரும் தெருவும் மோட்டார் வீதியும் சந்திக்கும் ஒர் முக்கோணவடிவ காணியில் ஒரு சிறு மண்டபத்தில் தாய் தந்தை சகோதரத்துடன் அலங்கார கோலத்தில் வீற்றிருந்தான். நல்லூரானை அலங்கார கந்தன் என்பார்கள் அதுபோல சிட்னி முருகனை ஆடம்பர முருகன் என்று சொல்லலாம்.முருகா அவுஸ்ரேலியாவுக்கு உன்னை நம்பி குடிபெயர்ந்துள்ளேன்
எல்லாம்தந்து என்னை காத்தருள்வாய் என வேண்டுகொள் வைத்து வழிபட்டேன்...தொடர்ந்து முருகனிடம் சென்று வந்தேன். சென்றும் வருகின்றேன் .தொடர்ந்தும் செல்வேன்... ஒவ்வொரு கிழமையும் அவுஸ்ரேலிய பாடசாலை மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கந்தனின் மனதில் நல்லதாக படாதமையால் தனது பக்தர்களின் மனதில் உள்புகுந்து பக்தர்களே நீங்கள் எனக்கு நிரந்தர மண்டபம் அமைத்து ஏன் என்னை வழிபட நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டுவைத்தார்.இந்த கேள்வி எல்லா முருக அடியார்களையும் சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும்.இதனால் எழுந்ததுதான் சிட்னிமுருகனுக்கு நிரந்தர கோவில் கட்டும் எண்ணமாகும்.அது இருக்கட்டும் இப்ப விசயத்திற்கு வருவோம் இருபது வருடங்களுக்கு.முதல் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட முருகனின் மண்டபத்தை சூழ பல குடியிருப்புக்கள் இருந்தன யாவும் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள்.மண்டபத்தில் இருந்த முருகனுக்கு கோவிலில் குடியிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.எனக்கும் தொடர்மாடி வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு குடிபெயர வேண்டும் என்றஎண்ணம் உண்டாக முருகனிடம் வேண்டுகோள் வைத்து வங்கியிடம் கடன் கேட்டேன் வங்கி கேட்ட கடனை தந்தது .தனி வீடு வாங்கி குடி பெயர்ந்தேன். என்னுடைய எண்ணத்தை வங்கி நிறைவேற்ற முருகனின் எண்ணத்தை முருகு பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.முருகனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிசேகம் மிகவும் விபரிசையாக நடை பெற்றது.அந்த தெருவில் அப்படியான ஒரு சன நடமாட்டத்தை அந்த வீதிவாசிகள் தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள்.சனநடமாட்டம் மட்டுமல்ல வாகன நெரிசலையும்தான்.குடியிருப்புக்கான பகுதியில் எப்படி இப்படி மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்தார்கள் என அந்த வீதிவாசிகள் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து முருகனின் விசேட தினங்கள் மற்றும் ,வெள்ளிக்கிழமைகள் தோறும் வழிபாடுகள் நடைபெற தொடங்கிற்று.
வீதிவாசிகள் சிறு சிறு தொல்லைகளை எதிர் நோக்கத் தொடங்கினார்கள்.எங்களுக்கு சிறு தொல்லையாகத் தெரிந்த விடயம் வீதிவாசிகளுக்கு பெரியதொல்லையாக தென்பட்டது.நாங்கள் பக்தியுடன் எம்பெருமானுக்கு செய்த விடயங்கள யாவற்றையும் வீதிவாசிகள் தொல்லையாக எடுத்துகொண்டார்கள்.
வெள்ளிக்கிழமை வேலை முடிந்தவுடன் வீட்டை வந்து குளித்து காரில் முருகனை இரவு ஏழுமணி பூஜையில் தரிசிக்க போனால் எனக்கு முதலே பல முருகபக்தர்கள் தங்களது காரை அந்த சிறிய வளவில் நிறுத்தி விடுவார்கள இதனால் எனக்கு அங்கு நிறுத்தமுடியாமல் போய்விடும்.பிறகு என்ன வீதிகளில் தான் நிறுத்த வேண்டும். வீதிகளிலும் எம்மவர்களின் வாகனங்கள்தான் அதிகமாக இருக்கும்.முருகனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலால் சில சமயங்களில் யாராவது வீட்டின் ட்ரைவ்வே க்கு முன்னால் ஒருமாதிரி சுழிச்சு காரை நிறுத்தி விட்டு சென்றுவிடுவேன்.செல்லும்பொழுது அவர்களின் வீட்டின் பூந்தோட்டாத்திலிருந்து அழகான ரோஜா பூக்களை பறித்தெடுத்து சென்று காணிக்கையாக கொடுத்ததும் உண்டு. பூஜை முடிந்தவுடன் ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் ,கோவிலுக்கு அருகாண்மையிலுள்ள வீடுகளின் முன்பு உங்களின் வாகனங்களை தரிக்காதீர்கள்,பூக்களை பறிக்காதீர்கள் என்று ஆனால் நான் கண்டு கொள்வதில்லை.முருகன் கைவிடமாட்டான் என்ற ஒரு துணிவு.
வீதிவாசிகள் பொலிஸில் முறையிட்டார்கள்,நகரசபையில் மனுத்தாக்கல் செய்தார்கள் நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை காலப்போக்கில் எங்களுடைய தொல்லை தாங்கமுடியாமல் வீதிவாசிகள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு புறநகர்பகுதிகளுக்கு செல்ல தொடங்கினாரகள்.முருகனுக்கும் அவரகளின் காணிகள் மீது ஆசையிருந்தமையால் பக்தர்கள் மூலம் காணிகளையும் வீடுகளையும் தனதாக்கி கொண்டான்.இன்று முருகன் பல இன்வென்ஸ்மன்ட் புரொப்பட்டிக்கு சொந்தகாரன்.அன்று வீதிவாசிகளின் வீடுகளுக்கு முன்னால் ட்ரைவ்வேயில் காரை நிறுத்தியமைக்காக பொலிஸில் முறையிட்டார்கள் ஆனால் இன்று அதேவீதிவாசிகளின் காணிகளின் உள்ளே எமது வாகனங்களை நிறுத்துகிறோம்.எம்பெருமான் மகிமையோ மகிமை....
முருகா நீ சுழியன்டாப்பா..ஆனால் இன்னும் ஒரெ ஒரு வெள்ளை இனத்தவன் அசையாமல் இருக்கின்றான் அவன் உன்னை விட சுழியன்.எம்மவர்கள நம்புகிறார்கள், நீ அவனையும் வெகு சீக்கிரத்தில் வெளியேற்றிவிடுவாய் என்று உன்னை நம்பியோரை கைவிடமாட்டாய் என நானும் நம்புகிறேன்.
பக்தர்கள் சாப்பாட்டுகடை ஒன்றை உனக்காக ஆரம்பித்து பகுதிநேர வருமானத்திற்காக உதவினார்கள்.நீ உனது முழுநேர தொழிலை உட்கார்ந்திருந்து கவனிக்க பக்தர்கள் பகுதிநேர வருமானத்திற்காக நன்றாக உழைத்தார்கள்.நீயும் கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.
மண்டபத்தினுள் குடி புகுந்தவுடன் பெற்றோரையும் சகோதரத்தையும் ஸ்பொன்சர் பண்ணி அழைத்த எம்பெருமான் காலபோக்கில் பல உறவுக்காரர்களை ஸ்பொன்சர் செய்து கூட்டுகுடும்பமாக வாழ்கிறான்.பழனிமுருகன்,நல்லூர் கந்தன்,செல்வசந்நிதி முருகன் மற்றும் மாமன்,மாமி எல்லோரும் அடக்கம். சைவனாக இருந்த நீ இப்ப இந்துவாக மாறிவிட்டாய்.இதனால் உனது குடும்பம் இப்ப பெரியது.வரும் காலங்களில் இன்னும் பல உறவுகளை நீ ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.உன்னால் முடியும் நீ ஒரு சுழியன்டாப்பா!
சதாரண மக்கள் குடியிருப்பாக(low density zone) இருந்த உனது வாழ்விடத்தை வியாபர அதாவது கொமர்சல் பகுதியாக(commercial zone) மாற்றிவிட்டாய் ,நகரசபை நிர்வாகத்தினரின் சிந்தையில் புகுந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்திய நீ மகா சுழியன் எல்லாம் வல்ல இறைவன் .... கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எம்மவர்களின் கூற்றுக்கிணங்க பலர் இன்று உனது ஊருக்கே குடியெர்ந்துள்ளன்ர் ,இன்னும் பலர் குடிபெயர இருக்கின்றனர். ஒரு ஊரையே உன்பக்தர்களின் குடியிருப்பு ஆக்கிய பெருமை உன்னையேசாரும்.....
என்னதான் இருந்தாலும் , உன்ட சனம் முள்ளிவாய்காலில் அவதிப்படும் பொழுது கண்டுகொள்ளவில்லை.சிட்னியில வந்து பெரிய நடப்படிக்கிறாய் ..........
எண்டுபோட்டு யாழில் இந்த கிறுக்கலை நாளைக்கு போடுவம் என நித்திரைக்கு சென்றுவிட்டேன்...
" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்
தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் .முருகன் வேலால் குத்த வாற மாதிரி ஒரு கனவு கண்டனான் .உதுக்குத்தான் நான் சொல்லுறனான் படுக்க போகும்பொழுது விபூதி பூசி நல்ல நினைவுகளுடன் படுக்கவேணும் எண்டு .சொல்லிபோட்டு "நினவு நல்லது வேணும்" என்ற பாரதி பாடலை பாடிக்காட்டினாள்....
நானும் ஒமோம் எண்டு போட்டு ஓம்முருகா,ஓம்நமச்சிவாய,என உரத்தகுரலில் சொல்லிகொண்டு ...மனதில் எவனடி படுக்கப்போகும்பொழுது நல்லெண்ணத்துடன் படுக்கப்பபோறான்.........வாய் ஓம் முருகா என்றது....
காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம்.
அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயக கட்சிகள் அரசாண்ட காலம்...சேர சோழர்கள் ஆண்ட காலம் போல் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தும் பக்தர்கள் முருக தரிசனத்திற்கு அலையேனவந்து எம்பெருமானுக்கு ஒரு நிரந்தர ஆலயம் அமைக்க வேணும் என்று எகமனதாக முடிவெடுத்து சிட்னி சைவமன்றம் என ஒரு அமைப்பை உருவாக்கி வைகாசி குன்றில் எம்பெருமான் முருகனுக்கு ஒருசிறு காணியும் வாங்கி ஒரு மண்டபம் அமைத்து அவனை குடியமர்த்தினார்கள் என சிட்னி முருகன் படலத்தை சொல்லிகொண்டே வந்தாள்.
சிவனின் கடைசி பெடி முருகன் வைகாசி குன்றில் இருந்தான்.ஆங்கிலபெயர் .....பெரும் தெருவும் மோட்டார் வீதியும் சந்திக்கும் ஒர் முக்கோணவடிவ காணியில் ஒரு சிறு மண்டபத்தில் தாய் தந்தை சகோதரத்துடன் அலங்கார கோலத்தில் வீற்றிருந்தான். நல்லூரானை அலங்கார கந்தன் என்பார்கள் அதுபோல சிட்னி முருகனை ஆடம்பர முருகன் என்று சொல்லலாம்.முருகா அவுஸ்ரேலியாவுக்கு உன்னை நம்பி குடிபெயர்ந்துள்ளேன்
எல்லாம்தந்து என்னை காத்தருள்வாய் என வேண்டுகொள் வைத்து வழிபட்டேன்...தொடர்ந்து முருகனிடம் சென்று வந்தேன். சென்றும் வருகின்றேன் .தொடர்ந்தும் செல்வேன்... ஒவ்வொரு கிழமையும் அவுஸ்ரேலிய பாடசாலை மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கந்தனின் மனதில் நல்லதாக படாதமையால் தனது பக்தர்களின் மனதில் உள்புகுந்து பக்தர்களே நீங்கள் எனக்கு நிரந்தர மண்டபம் அமைத்து ஏன் என்னை வழிபட நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டுவைத்தார்.இந்த கேள்வி எல்லா முருக அடியார்களையும் சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும்.இதனால் எழுந்ததுதான் சிட்னிமுருகனுக்கு நிரந்தர கோவில் கட்டும் எண்ணமாகும்.அது இருக்கட்டும் இப்ப விசயத்திற்கு வருவோம் இருபது வருடங்களுக்கு.முதல் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட முருகனின் மண்டபத்தை சூழ பல குடியிருப்புக்கள் இருந்தன யாவும் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள்.மண்டபத்தில் இருந்த முருகனுக்கு கோவிலில் குடியிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.எனக்கும் தொடர்மாடி வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு குடிபெயர வேண்டும் என்றஎண்ணம் உண்டாக முருகனிடம் வேண்டுகோள் வைத்து வங்கியிடம் கடன் கேட்டேன் வங்கி கேட்ட கடனை தந்தது .தனி வீடு வாங்கி குடி பெயர்ந்தேன். என்னுடைய எண்ணத்தை வங்கி நிறைவேற்ற முருகனின் எண்ணத்தை முருகு பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.முருகனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிசேகம் மிகவும் விபரிசையாக நடை பெற்றது.அந்த தெருவில் அப்படியான ஒரு சன நடமாட்டத்தை அந்த வீதிவாசிகள் தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள்.சனநடமாட்டம் மட்டுமல்ல வாகன நெரிசலையும்தான்.குடியிருப்புக்கான பகுதியில் எப்படி இப்படி மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்தார்கள் என அந்த வீதிவாசிகள் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து முருகனின் விசேட தினங்கள் மற்றும் ,வெள்ளிக்கிழமைகள் தோறும் வழிபாடுகள் நடைபெற தொடங்கிற்று.
வீதிவாசிகள் சிறு சிறு தொல்லைகளை எதிர் நோக்கத் தொடங்கினார்கள்.எங்களுக்கு சிறு தொல்லையாகத் தெரிந்த விடயம் வீதிவாசிகளுக்கு பெரியதொல்லையாக தென்பட்டது.நாங்கள் பக்தியுடன் எம்பெருமானுக்கு செய்த விடயங்கள யாவற்றையும் வீதிவாசிகள் தொல்லையாக எடுத்துகொண்டார்கள்.
வெள்ளிக்கிழமை வேலை முடிந்தவுடன் வீட்டை வந்து குளித்து காரில் முருகனை இரவு ஏழுமணி பூஜையில் தரிசிக்க போனால் எனக்கு முதலே பல முருகபக்தர்கள் தங்களது காரை அந்த சிறிய வளவில் நிறுத்தி விடுவார்கள இதனால் எனக்கு அங்கு நிறுத்தமுடியாமல் போய்விடும்.பிறகு என்ன வீதிகளில் தான் நிறுத்த வேண்டும். வீதிகளிலும் எம்மவர்களின் வாகனங்கள்தான் அதிகமாக இருக்கும்.முருகனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலால் சில சமயங்களில் யாராவது வீட்டின் ட்ரைவ்வே க்கு முன்னால் ஒருமாதிரி சுழிச்சு காரை நிறுத்தி விட்டு சென்றுவிடுவேன்.செல்லும்பொழுது அவர்களின் வீட்டின் பூந்தோட்டாத்திலிருந்து அழகான ரோஜா பூக்களை பறித்தெடுத்து சென்று காணிக்கையாக கொடுத்ததும் உண்டு. பூஜை முடிந்தவுடன் ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் ,கோவிலுக்கு அருகாண்மையிலுள்ள வீடுகளின் முன்பு உங்களின் வாகனங்களை தரிக்காதீர்கள்,பூக்களை பறிக்காதீர்கள் என்று ஆனால் நான் கண்டு கொள்வதில்லை.முருகன் கைவிடமாட்டான் என்ற ஒரு துணிவு.
வீதிவாசிகள் பொலிஸில் முறையிட்டார்கள்,நகரசபையில் மனுத்தாக்கல் செய்தார்கள் நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை காலப்போக்கில் எங்களுடைய தொல்லை தாங்கமுடியாமல் வீதிவாசிகள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு புறநகர்பகுதிகளுக்கு செல்ல தொடங்கினாரகள்.முருகனுக்கும் அவரகளின் காணிகள் மீது ஆசையிருந்தமையால் பக்தர்கள் மூலம் காணிகளையும் வீடுகளையும் தனதாக்கி கொண்டான்.இன்று முருகன் பல இன்வென்ஸ்மன்ட் புரொப்பட்டிக்கு சொந்தகாரன்.அன்று வீதிவாசிகளின் வீடுகளுக்கு முன்னால் ட்ரைவ்வேயில் காரை நிறுத்தியமைக்காக பொலிஸில் முறையிட்டார்கள் ஆனால் இன்று அதேவீதிவாசிகளின் காணிகளின் உள்ளே எமது வாகனங்களை நிறுத்துகிறோம்.எம்பெருமான் மகிமையோ மகிமை....
முருகா நீ சுழியன்டாப்பா..ஆனால் இன்னும் ஒரெ ஒரு வெள்ளை இனத்தவன் அசையாமல் இருக்கின்றான் அவன் உன்னை விட சுழியன்.எம்மவர்கள நம்புகிறார்கள், நீ அவனையும் வெகு சீக்கிரத்தில் வெளியேற்றிவிடுவாய் என்று உன்னை நம்பியோரை கைவிடமாட்டாய் என நானும் நம்புகிறேன்.
பக்தர்கள் சாப்பாட்டுகடை ஒன்றை உனக்காக ஆரம்பித்து பகுதிநேர வருமானத்திற்காக உதவினார்கள்.நீ உனது முழுநேர தொழிலை உட்கார்ந்திருந்து கவனிக்க பக்தர்கள் பகுதிநேர வருமானத்திற்காக நன்றாக உழைத்தார்கள்.நீயும் கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.
மண்டபத்தினுள் குடி புகுந்தவுடன் பெற்றோரையும் சகோதரத்தையும் ஸ்பொன்சர் பண்ணி அழைத்த எம்பெருமான் காலபோக்கில் பல உறவுக்காரர்களை ஸ்பொன்சர் செய்து கூட்டுகுடும்பமாக வாழ்கிறான்.பழனிமுருகன்,நல்லூர் கந்தன்,செல்வசந்நிதி முருகன் மற்றும் மாமன்,மாமி எல்லோரும் அடக்கம். சைவனாக இருந்த நீ இப்ப இந்துவாக மாறிவிட்டாய்.இதனால் உனது குடும்பம் இப்ப பெரியது.வரும் காலங்களில் இன்னும் பல உறவுகளை நீ ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.உன்னால் முடியும் நீ ஒரு சுழியன்டாப்பா!
சதாரண மக்கள் குடியிருப்பாக(low density zone) இருந்த உனது வாழ்விடத்தை வியாபர அதாவது கொமர்சல் பகுதியாக(commercial zone) மாற்றிவிட்டாய் ,நகரசபை நிர்வாகத்தினரின் சிந்தையில் புகுந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்திய நீ மகா சுழியன் எல்லாம் வல்ல இறைவன் .... கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எம்மவர்களின் கூற்றுக்கிணங்க பலர் இன்று உனது ஊருக்கே குடியெர்ந்துள்ளன்ர் ,இன்னும் பலர் குடிபெயர இருக்கின்றனர். ஒரு ஊரையே உன்பக்தர்களின் குடியிருப்பு ஆக்கிய பெருமை உன்னையேசாரும்.....
என்னதான் இருந்தாலும் , உன்ட சனம் முள்ளிவாய்காலில் அவதிப்படும் பொழுது கண்டுகொள்ளவில்லை.சிட்னியில வந்து பெரிய நடப்படிக்கிறாய் ..........
எண்டுபோட்டு யாழில் இந்த கிறுக்கலை நாளைக்கு போடுவம் என நித்திரைக்கு சென்றுவிட்டேன்...
" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்
தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் .முருகன் வேலால் குத்த வாற மாதிரி ஒரு கனவு கண்டனான் .உதுக்குத்தான் நான் சொல்லுறனான் படுக்க போகும்பொழுது விபூதி பூசி நல்ல நினைவுகளுடன் படுக்கவேணும் எண்டு .சொல்லிபோட்டு "நினவு நல்லது வேணும்" என்ற பாரதி பாடலை பாடிக்காட்டினாள்....
நானும் ஒமோம் எண்டு போட்டு ஓம்முருகா,ஓம்நமச்சிவாய,என உரத்தகுரலில் சொல்லிகொண்டு ...மனதில் எவனடி படுக்கப்போகும்பொழுது நல்லெண்ணத்துடன் படுக்கப்பபோறான்.........வாய் ஓம் முருகா என்றது....
Tuesday, September 10, 2013
"என்ட............."
மனிதன் பிறந்தவுடன் தொடங்கிய என்ட என்னுடைய என்ற சொல் அவன் இறக்கும் வரை தொடரும் என்பது யாவரும் அறிந்தது.சுரேஸுக்கும் அது விதிவிலக்கல்ல.
அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசாலைக்கு வரமாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.ஆசிரியர் பெண் என்றபடியால் இருவரையும் சமாதானப்படுத்தினார்,அடுத்த நாள் எல்லாம் சகயமாகி போய்விட்டது.
"டீச்சர் இவர் என்ட சிலேட்டில கீறிப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட சிலேட் பென்சிலை உடைச்சுப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட கதிரையை எடுத்திட்டார்" ஆசிரியை விசாரனை தொடங்கியவுடன். "ஏன் அவனின்ட சிலேட்டில் கீறினனீ" "அவன் தான் என்ட சீலேட்டில் முதல் கீறினவன்,அதுதான் நானும் கீறினன்" "இல்லை டீச்சர் நான் கீறவில்லை அவன் தான் முதல் என்ட சிலேட்டில் கீறீனவன்.அவன் பொய் சொல்லுறான்" ஆசிரியை இருவரையும் வாங்கின் மேல் எழுந்து நிற்கசொல்லிவிட்டு படிப்பிக்க தொடங்கிவிட்டார்.தண்டனை முடிந்து இறங்கியவுடன் சுரேஸ் தனது சிலேட்டில் இருந்ததை எச்சில் போட்டு அழித்துவிட்டு நல்ல பிள்ளைமாதிரி கதிரையில் அமர்ந்தான்.
ஒரு நாள் தாயாருடன் கடைக்கு சென்றவன் அங்கு டீச்சரை கண்டவுடன்," அம்மா என்ட டீச்சர் நிற்க்கிறா போய் கதைச்சுப்போட்டு வாரன்"என்றவன் ஒடிப்போய் கதைத்தான்.அவனின் ஆரம்பகல்வி பல என்ட என்ற உறவுடன் முடிவுக்கு வந்தவுடன் . டீச்சர் நான் ஆறாம் வகுப்புக்கு என்ட புது பள்ளிகூடத்திற்கு போக போறன் என்று கூறி மகிழ்சிப்பட்டான்.
ஆரம்ப பாடசாலை முடிவடைந்து உயர்வகுப்பு பாடசாலைக்கு சென்றவுடன் அதிபர் உனது வகுப்பு 6பீ உன்ட வகுப்பாசிரியர் வந்து உன்னை அழைத்துசெல்வார் ,அந்த லைன்னில போய் நில்லு என அதிபர் கட்டளையிட்டார். அதிபரின் தோற்றமும் ,குரலும் அவனுக்கு பயத்தை உருவாக்கியது.அந்த பாடசாலையில் நீண்ட கதிரைகளும் மேசைகளும் இருந்தன.வகுப்பாசிரியர் 6பீ குறிப்பிட்ட வகுப்பை காட்டி எல்லோரையும் அந்த வகுப்பில் போய் இருக்கும்படி கூறினார் ,மாணவர்கள் அடிபட்டு,முண்டியடித்து ஒடிப்போய் முதல்வரிசையில் இருந்தார்கள்.சிலர் கடைசி வரிசையில் போய்யிருந்தார்கள்.முதல் இரு வரிசையிலும் படிக்க கூடியவர்கள் இருந்தார்கள். பின் வரிசையில் எனையோர் இருந்தார்கள். ஆசிரியரும் இதைத்தான் விரும்பினார்.படிக்க கூடியவர்களுக்கு சில சலுகைகளும் ஆசிரியரிடமிருந்து கிடைத்தது.படிக்க முடியாதவர்கள்,படிப்பில் அக்கறை இல்லாதோர்,படிப்பில் அக்கறையிருந்தும் படிக்க முடியாதோர்,சிவாஜி,கமல் ரசிகர்கள் கூட்டம் பின்வரிசையில் இருந்தார்கள்.
சுரேஸுக்கு நடுவரிசையில் ஒரு இடம் கிடைத்தது.கொஞ்சம் படிப்பு ,கொஞ்சம் விளையாட்டு என்ற ரகத்திற்க்குரிய வரிசை. அவனுக்கு பக்கத்திலிருந்தவனிடம் பேச்சை தொடங்கினான்.இருவரும் வேறு வேறு பாடசாலையிலிருந்து அங்கு வந்திருந்தார்கள். "உன்ட பெயர் என்ன" "வின்சன்ட் ஞானசீலன்,உன்ட " "சுரேஸ் சுப்பிரமணியன்" "என்ட குடும்ப பெயர் ஞானசீலன்" "உன்ட அப்பாவின் அப்பாவின் அப்பாவின் பெயர் என்ன?" "தெரியாது" "என்ட அப்பாவின்ட அப்பாவின்ட அப்பாவின் பெயர் ஞானசீலன்" சுரேஸ் ஒன்றும்புரியாமல் முழித்துக்கொண்டிருக்கையில் ஆசிரியர் ,பிள்ளைகள் சத்தம் போடாதையுங்கோ,உங்களுடைய வகுப்பாசிரியராகிய நான் தமிழும்,சமயமும் படிப்பிப்பேன் கணக்கு விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு வேறு ஆசிரியர் வருவார்.வகுப்பு அட்டவணை எழுதுகிறேன் நீங்கள் உங்கன்ட கொப்பியில் எழுதுங்கோ.ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டு பக்கத்து வகுப்பு ஆசிரியையுடன் விடுப்பு கதைக்க சென்றுவிட்டார் மாணாவர்கள் எழுதிபோட்டு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.
அடுத்த பாடத்திற்கு மணி அடித்தவுடன் ஆசிரியர் உள்ளே வந்து கோபமாக சத்தம் போடாதையுங்கோ,எல்லோரும் எழுதியாச்சோ என கேட்டார்.
"ஒம் சேர்"என எல்லோரும் ஒன்றாக பதில் சொன்னார்கள்.
"அட்டவனையில் இப்ப என்ன பாடம் போட்டிருக்கு என்று பாருங்கோ"
"சமயம் சேர்"
"சரி எல்லோருக்கும் தேவாரம் தெரியுமோ,தெரிஞ்ச ஆட்கள் கையை உயர்ந்துங்கோ"
"ஒம்,சேர் " என கோரொசா குரல் கொடுத்துப்போட்டு அனேகர் கையை தூக்கினார்கள்கையை உயர்த்தாத வின்சன்டை பார்த்து
"ஏன் உனக்கு தேவாரம் தெரியாதோ "
"இல்லை சேர் எனக்கு தெரியாது நான் கிறிஸ்டியன் என்ட மதம் கத்தோலிக்கம்"
".எல்லொரும் கையை கீழ விடுங்கோ இந்தவகுப்பில் எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கின்றீர்கள் ".நாலு பேர் எழும்பி நின்றார்கள்.. உங்களுக்கு நான் அதிபருடன் பேசி கத்தோலிக்கம் படிபிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய ஆசிரியர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.எனையோரின் இந்து சமய பாடநேரத்தில் இவர்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கபட்டது.
எட்டாம் வகுப்பில் சுரேஸ் படிக்கும் பொழுது ஒரு நாள் பக்கத்து வகுப்பு மாணவனுடன் தகராறு ஏற்பட்டு அடித்துவிட்டான்.அவன் எட்டாம் வகுப்பு "சி "பிரிவை சேர்ந்தவன் .அவனது வகுப்பை சேர்ந்த இன்னொருத்தன் கண்டுவிட்டான் எங்கன்ட "சி"வகுப்புக்காரனை "பி" வகுப்புக்காரன் அடிச்சுப்போட்டான் பள்ளிக்கூடம் விட்டு போகும் பொழுது எல்லோரும் வாங்கோடா போய் அவனை அடிப்போம் என அந்த வகுப்பின் சண்டியத்தலைவன் அழைப்புவிட்டான். பாடசாலை விட்டு வெளியே சுரேஸ் வந்தவுடன் c பிரிவையை சேர்ந்த குழுவினர் அவனை ஏன்டா எங்கன்ட வகுப்பு பெடியனுக்கு அடிச்சனீ என கேட்டு தாக்கினார்கள் .சுரேஸ்சின் நல்ல அந்த நேரம்பார்த்து ஆசிரியர்களும் வெளியே வந்தார்கள் .அடிபட்டவர்கள் இடைத்தவிட்டு ஒடிவிட்டார்கள். A,B,C,D என்ற பிரிவுகள் கல்வி தராதரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படிருந்தன.A பிரிவின் கடைசி மாணவனின் புள்ளிகளை B பிரிவின் முதல் மாணவன் பெற்றிருப்பான் இப்படியே இறங்குவரிசையில் போகும் ,அதேபோல சண்டித்தனத்தில் ஏறுவரிசையில் செல்லும்,அதாவது A பிரிவைசேர்ந்தவர்கள் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பார்கள் B பிரிவைசேர்ந்தவர்கள் சண்டித்தனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
பாடசாலை பருவம் முடிவடைந்தவுடன் ஊர் சுற்றும் காலம் தொடங்கியது.ஊர்கோவிலில் பரம்பரைபரம்பரையாக அவனின் குடும்பம் திருவிழா செய்து வந்துகொண்டிருந்த்தது.ஊரார் நாலுதிசையிலும் உள்ளவ்ர்களுக்கு திருவிழாக்களை பிரித்து .'வடக்கு மானிப்பாயிரின்ட ,தெற்குமானிப்பாயிரின்ட என் கொடுக்கப்படிருந்தது.
"தம்பி எங்கன்ட திருவிழா வருகிறது விஞ்ஞாபனத்தை கொண்டுபோய் கொடுத்துப்போட்டு திருவிழாகாசையும் வாங்கிகொண்டு வா,முதலில் மாமாவிட்டயும் ,சித்தப்பாவிட்டயும் போய் வாங்கு,"
"அப்பா,நான்முதலில் கனகுமாமாவின்ட வீட்டை போகட்டே"
"சீ,சீ அந்த மனிசன் கஞ்சன் கொஞ்சமாத்தான் போடுவான் ,பிறகு மற்றசனமும் அதை பார்த்து கொஞ்சமாய்தான் போடும்,சுந்தர் மாமாவிட்ட முதல் போ அவர்தான் போனமுறை அதிகமா போட்டவர் ,பிறகு சித்தப்பாவிட்ட போ,இந்த முறை எங்கன்ட திருவிழாவை நல்ல எழுப்பமா செய்யவேணும் ,நாலு சனம் திருவிழாவை பற்றி கதைக்க வேணும் எங்கன்ட திருவிழாக்காரின்ட வீடுகள் எல்லாம் தெரியும்தானே"
"ஓம் அப்பா" அவர்களுடைய திருவிழா முடிவடைந்து,தேர்திருவிழாவும்வந்தது.தேர்திருவிழாவில் எல்லொரும் எந்த திருவிழாகாரர் நல்லாய் செய்தது என்ற கதைதான் கதைப்பார்கள்.ஓவ்வோருத்தரும் தங்களுடையது சிறந்தது என்பார்கள்.தேர்திருவிழா அன்று வேஸ்டியணிந்து அம்மாவினுடைய சங்கிலியையும் போட்டு தேரின் வடத்தை பிடித்து அரோகரா என கத்தி இழுத்துகொண்டிருத்தவனுக்கு ,சகமாணவி ஒருத்தி பாவாடைதாவணியில் கனகாம்பரபூ தலையில் அலங்கரிக்க நிற்பதை கண்டவன் தன்னிலை மறந்தான். அவளின் காதலை பெறுவதற்காக சகாசங்களை செய்யத்தொடங்கினான்.இதை அறிந்த அந்த பெண் தனது காதலனிடன் சொல்லிவிட்டாள்.ஒரு மாலை நேரம் சுரேஸ் அவளின் பின்னால் தொடர்ந்து செல்லும் பொழுது ஐசே கொஞசம் நில்லும் என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.
"ஏன் நீ அவளுக்கு பின்னால சுத்துறாய்"
"அதை கேட்க நீ யார்" "அவள் என்ட காய்,அவளை நான் லவ்பண்ணுகிறேன்" சுரேஸ் அவளை பார்த்தான் அவளோ ஏளனமாக பார்த்து சிரித்த படியே சென்றாள்.
எங்கன்ட மொழியை சிங்களவன் அழிச்சு போடுவான் அதை தடுக்க வேண்டும் என்று விசன்ட் போராடபோனான்.சிங்களவன் மொழியையும்,அவனையும் அழித்தார்கள் இதை அறிந்த சுழியன் சுரேஸ் இது என்னடா நாடு வெளிநாடு போய் தப்பிகொள்வோம் என புலம் பெயர்ந்தான். புலத்தில் என்ட மதம் ,என்ட கடவுள் ,என்ட திருவிழா என்ட வீடு ,எங்கன்ட அவுஸ்ரேலியா .... என புலம்பிக்கொண்டு மீண்டும்... என்கன்ட ஊருக்கு போய்வருகிறான்.
அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசாலைக்கு வரமாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.ஆசிரியர் பெண் என்றபடியால் இருவரையும் சமாதானப்படுத்தினார்,அடுத்த நாள் எல்லாம் சகயமாகி போய்விட்டது.
"டீச்சர் இவர் என்ட சிலேட்டில கீறிப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட சிலேட் பென்சிலை உடைச்சுப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட கதிரையை எடுத்திட்டார்" ஆசிரியை விசாரனை தொடங்கியவுடன். "ஏன் அவனின்ட சிலேட்டில் கீறினனீ" "அவன் தான் என்ட சீலேட்டில் முதல் கீறினவன்,அதுதான் நானும் கீறினன்" "இல்லை டீச்சர் நான் கீறவில்லை அவன் தான் முதல் என்ட சிலேட்டில் கீறீனவன்.அவன் பொய் சொல்லுறான்" ஆசிரியை இருவரையும் வாங்கின் மேல் எழுந்து நிற்கசொல்லிவிட்டு படிப்பிக்க தொடங்கிவிட்டார்.தண்டனை முடிந்து இறங்கியவுடன் சுரேஸ் தனது சிலேட்டில் இருந்ததை எச்சில் போட்டு அழித்துவிட்டு நல்ல பிள்ளைமாதிரி கதிரையில் அமர்ந்தான்.
ஒரு நாள் தாயாருடன் கடைக்கு சென்றவன் அங்கு டீச்சரை கண்டவுடன்," அம்மா என்ட டீச்சர் நிற்க்கிறா போய் கதைச்சுப்போட்டு வாரன்"என்றவன் ஒடிப்போய் கதைத்தான்.அவனின் ஆரம்பகல்வி பல என்ட என்ற உறவுடன் முடிவுக்கு வந்தவுடன் . டீச்சர் நான் ஆறாம் வகுப்புக்கு என்ட புது பள்ளிகூடத்திற்கு போக போறன் என்று கூறி மகிழ்சிப்பட்டான்.
ஆரம்ப பாடசாலை முடிவடைந்து உயர்வகுப்பு பாடசாலைக்கு சென்றவுடன் அதிபர் உனது வகுப்பு 6பீ உன்ட வகுப்பாசிரியர் வந்து உன்னை அழைத்துசெல்வார் ,அந்த லைன்னில போய் நில்லு என அதிபர் கட்டளையிட்டார். அதிபரின் தோற்றமும் ,குரலும் அவனுக்கு பயத்தை உருவாக்கியது.அந்த பாடசாலையில் நீண்ட கதிரைகளும் மேசைகளும் இருந்தன.வகுப்பாசிரியர் 6பீ குறிப்பிட்ட வகுப்பை காட்டி எல்லோரையும் அந்த வகுப்பில் போய் இருக்கும்படி கூறினார் ,மாணவர்கள் அடிபட்டு,முண்டியடித்து ஒடிப்போய் முதல்வரிசையில் இருந்தார்கள்.சிலர் கடைசி வரிசையில் போய்யிருந்தார்கள்.முதல் இரு வரிசையிலும் படிக்க கூடியவர்கள் இருந்தார்கள். பின் வரிசையில் எனையோர் இருந்தார்கள். ஆசிரியரும் இதைத்தான் விரும்பினார்.படிக்க கூடியவர்களுக்கு சில சலுகைகளும் ஆசிரியரிடமிருந்து கிடைத்தது.படிக்க முடியாதவர்கள்,படிப்பில் அக்கறை இல்லாதோர்,படிப்பில் அக்கறையிருந்தும் படிக்க முடியாதோர்,சிவாஜி,கமல் ரசிகர்கள் கூட்டம் பின்வரிசையில் இருந்தார்கள்.
சுரேஸுக்கு நடுவரிசையில் ஒரு இடம் கிடைத்தது.கொஞ்சம் படிப்பு ,கொஞ்சம் விளையாட்டு என்ற ரகத்திற்க்குரிய வரிசை. அவனுக்கு பக்கத்திலிருந்தவனிடம் பேச்சை தொடங்கினான்.இருவரும் வேறு வேறு பாடசாலையிலிருந்து அங்கு வந்திருந்தார்கள். "உன்ட பெயர் என்ன" "வின்சன்ட் ஞானசீலன்,உன்ட " "சுரேஸ் சுப்பிரமணியன்" "என்ட குடும்ப பெயர் ஞானசீலன்" "உன்ட அப்பாவின் அப்பாவின் அப்பாவின் பெயர் என்ன?" "தெரியாது" "என்ட அப்பாவின்ட அப்பாவின்ட அப்பாவின் பெயர் ஞானசீலன்" சுரேஸ் ஒன்றும்புரியாமல் முழித்துக்கொண்டிருக்கையில் ஆசிரியர் ,பிள்ளைகள் சத்தம் போடாதையுங்கோ,உங்களுடைய வகுப்பாசிரியராகிய நான் தமிழும்,சமயமும் படிப்பிப்பேன் கணக்கு விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு வேறு ஆசிரியர் வருவார்.வகுப்பு அட்டவணை எழுதுகிறேன் நீங்கள் உங்கன்ட கொப்பியில் எழுதுங்கோ.ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டு பக்கத்து வகுப்பு ஆசிரியையுடன் விடுப்பு கதைக்க சென்றுவிட்டார் மாணாவர்கள் எழுதிபோட்டு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.
அடுத்த பாடத்திற்கு மணி அடித்தவுடன் ஆசிரியர் உள்ளே வந்து கோபமாக சத்தம் போடாதையுங்கோ,எல்லோரும் எழுதியாச்சோ என கேட்டார்.
"ஒம் சேர்"என எல்லோரும் ஒன்றாக பதில் சொன்னார்கள்.
"அட்டவனையில் இப்ப என்ன பாடம் போட்டிருக்கு என்று பாருங்கோ"
"சமயம் சேர்"
"சரி எல்லோருக்கும் தேவாரம் தெரியுமோ,தெரிஞ்ச ஆட்கள் கையை உயர்ந்துங்கோ"
"ஒம்,சேர் " என கோரொசா குரல் கொடுத்துப்போட்டு அனேகர் கையை தூக்கினார்கள்கையை உயர்த்தாத வின்சன்டை பார்த்து
"ஏன் உனக்கு தேவாரம் தெரியாதோ "
"இல்லை சேர் எனக்கு தெரியாது நான் கிறிஸ்டியன் என்ட மதம் கத்தோலிக்கம்"
".எல்லொரும் கையை கீழ விடுங்கோ இந்தவகுப்பில் எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கின்றீர்கள் ".நாலு பேர் எழும்பி நின்றார்கள்.. உங்களுக்கு நான் அதிபருடன் பேசி கத்தோலிக்கம் படிபிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய ஆசிரியர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.எனையோரின் இந்து சமய பாடநேரத்தில் இவர்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கபட்டது.
எட்டாம் வகுப்பில் சுரேஸ் படிக்கும் பொழுது ஒரு நாள் பக்கத்து வகுப்பு மாணவனுடன் தகராறு ஏற்பட்டு அடித்துவிட்டான்.அவன் எட்டாம் வகுப்பு "சி "பிரிவை சேர்ந்தவன் .அவனது வகுப்பை சேர்ந்த இன்னொருத்தன் கண்டுவிட்டான் எங்கன்ட "சி"வகுப்புக்காரனை "பி" வகுப்புக்காரன் அடிச்சுப்போட்டான் பள்ளிக்கூடம் விட்டு போகும் பொழுது எல்லோரும் வாங்கோடா போய் அவனை அடிப்போம் என அந்த வகுப்பின் சண்டியத்தலைவன் அழைப்புவிட்டான். பாடசாலை விட்டு வெளியே சுரேஸ் வந்தவுடன் c பிரிவையை சேர்ந்த குழுவினர் அவனை ஏன்டா எங்கன்ட வகுப்பு பெடியனுக்கு அடிச்சனீ என கேட்டு தாக்கினார்கள் .சுரேஸ்சின் நல்ல அந்த நேரம்பார்த்து ஆசிரியர்களும் வெளியே வந்தார்கள் .அடிபட்டவர்கள் இடைத்தவிட்டு ஒடிவிட்டார்கள். A,B,C,D என்ற பிரிவுகள் கல்வி தராதரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படிருந்தன.A பிரிவின் கடைசி மாணவனின் புள்ளிகளை B பிரிவின் முதல் மாணவன் பெற்றிருப்பான் இப்படியே இறங்குவரிசையில் போகும் ,அதேபோல சண்டித்தனத்தில் ஏறுவரிசையில் செல்லும்,அதாவது A பிரிவைசேர்ந்தவர்கள் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பார்கள் B பிரிவைசேர்ந்தவர்கள் சண்டித்தனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
பாடசாலை பருவம் முடிவடைந்தவுடன் ஊர் சுற்றும் காலம் தொடங்கியது.ஊர்கோவிலில் பரம்பரைபரம்பரையாக அவனின் குடும்பம் திருவிழா செய்து வந்துகொண்டிருந்த்தது.ஊரார் நாலுதிசையிலும் உள்ளவ்ர்களுக்கு திருவிழாக்களை பிரித்து .'வடக்கு மானிப்பாயிரின்ட ,தெற்குமானிப்பாயிரின்ட என் கொடுக்கப்படிருந்தது.
"தம்பி எங்கன்ட திருவிழா வருகிறது விஞ்ஞாபனத்தை கொண்டுபோய் கொடுத்துப்போட்டு திருவிழாகாசையும் வாங்கிகொண்டு வா,முதலில் மாமாவிட்டயும் ,சித்தப்பாவிட்டயும் போய் வாங்கு,"
"அப்பா,நான்முதலில் கனகுமாமாவின்ட வீட்டை போகட்டே"
"சீ,சீ அந்த மனிசன் கஞ்சன் கொஞ்சமாத்தான் போடுவான் ,பிறகு மற்றசனமும் அதை பார்த்து கொஞ்சமாய்தான் போடும்,சுந்தர் மாமாவிட்ட முதல் போ அவர்தான் போனமுறை அதிகமா போட்டவர் ,பிறகு சித்தப்பாவிட்ட போ,இந்த முறை எங்கன்ட திருவிழாவை நல்ல எழுப்பமா செய்யவேணும் ,நாலு சனம் திருவிழாவை பற்றி கதைக்க வேணும் எங்கன்ட திருவிழாக்காரின்ட வீடுகள் எல்லாம் தெரியும்தானே"
"ஓம் அப்பா" அவர்களுடைய திருவிழா முடிவடைந்து,தேர்திருவிழாவும்வந்தது.தேர்திருவிழாவில் எல்லொரும் எந்த திருவிழாகாரர் நல்லாய் செய்தது என்ற கதைதான் கதைப்பார்கள்.ஓவ்வோருத்தரும் தங்களுடையது சிறந்தது என்பார்கள்.தேர்திருவிழா அன்று வேஸ்டியணிந்து அம்மாவினுடைய சங்கிலியையும் போட்டு தேரின் வடத்தை பிடித்து அரோகரா என கத்தி இழுத்துகொண்டிருத்தவனுக்கு ,சகமாணவி ஒருத்தி பாவாடைதாவணியில் கனகாம்பரபூ தலையில் அலங்கரிக்க நிற்பதை கண்டவன் தன்னிலை மறந்தான். அவளின் காதலை பெறுவதற்காக சகாசங்களை செய்யத்தொடங்கினான்.இதை அறிந்த அந்த பெண் தனது காதலனிடன் சொல்லிவிட்டாள்.ஒரு மாலை நேரம் சுரேஸ் அவளின் பின்னால் தொடர்ந்து செல்லும் பொழுது ஐசே கொஞசம் நில்லும் என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.
"ஏன் நீ அவளுக்கு பின்னால சுத்துறாய்"
"அதை கேட்க நீ யார்" "அவள் என்ட காய்,அவளை நான் லவ்பண்ணுகிறேன்" சுரேஸ் அவளை பார்த்தான் அவளோ ஏளனமாக பார்த்து சிரித்த படியே சென்றாள்.
எங்கன்ட மொழியை சிங்களவன் அழிச்சு போடுவான் அதை தடுக்க வேண்டும் என்று விசன்ட் போராடபோனான்.சிங்களவன் மொழியையும்,அவனையும் அழித்தார்கள் இதை அறிந்த சுழியன் சுரேஸ் இது என்னடா நாடு வெளிநாடு போய் தப்பிகொள்வோம் என புலம் பெயர்ந்தான். புலத்தில் என்ட மதம் ,என்ட கடவுள் ,என்ட திருவிழா என்ட வீடு ,எங்கன்ட அவுஸ்ரேலியா .... என புலம்பிக்கொண்டு மீண்டும்... என்கன்ட ஊருக்கு போய்வருகிறான்.
Thursday, August 22, 2013
சிட்னி புலம்பல்
சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.
பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.
மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.
அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.
பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.
மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.
நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று
மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.
இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.
இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....
அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்.....
ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.
பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.
மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.
அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.
பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.
மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.
நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று
மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.
இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.
இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....
அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்.....
Tuesday, July 2, 2013
crush....கிரஷ்
பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும் சீன இந்திய,இந்திய வெள்ளை,வெள்ளை சீன என கலப்பின ஜோடிகள் ஆகும்.
ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.
.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.
சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.
"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"
"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.
"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.
"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"
"இல்லை அண்ணே"
"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"
"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"
"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே
இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.
அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.
"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.
"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.
"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "
"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"
" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "
"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"
"They cannot say anything. it's against the law,"
"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"
"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."
"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"
"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"
"So what?"
"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"
"That is your fault"
"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"
"mmmmmm. Like I am going to believe you"
ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.
.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.
சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.
"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"
"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.
"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.
"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"
"இல்லை அண்ணே"
"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"
"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"
"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே
இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.
அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.
"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.
"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.
"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "
"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"
" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "
"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"
"They cannot say anything. it's against the law,"
"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"
"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."
"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"
"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"
"So what?"
"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"
"That is your fault"
"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"
"mmmmmm. Like I am going to believe you"
Subscribe to:
Posts (Atom)