Thursday, April 12, 2018

முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa

முருகமூர்த்தி அவனுக்கு  பெற்றோர் இட்ட பெயர்பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களைவைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும்  அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்புகூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள்,
 அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன்சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தைதுப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும். பாட்டிக்கு ஒம் என்று சொல்லிவிட்டான்
.அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பாட்டி இறை பதமடைந்து விடவே .அவன் வெள்ளிக்கிழமைகளிள் தாயாருடன் சென்று விளக்கேற்றி வந்தான்.
ஒரு நாள் கோவிலுக்கு பின்னேரம் விளையாட போட்டிருந்த உடுப்புடன் போகதயாரானான்.அதை அவதானித்த தாயார்
"பாட்டி எப்படி கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லி தந்தவ"
"குளித்து சுத்தமா போகவேனும் என்று சொன்னவ,நான் காலம்பிற குளிச்சிட்டன்"
"உந்த புழுதிக்குள்ள உழுது திரிச்சனீயள்ளோ,காற்சட்டையையும் செர்ட்டையும் பார்,கைகாலை கழுவி வேறு சட்டையை போட்டுக்கொண்டு வா"
அவனுக்கு குளிக்கிறது என்றால் கொல்ல கொண்டு போறமாதிரி,கிணற்றடியில் கை காலை கழுவிட்டு ஓடி வந்து தீபாவளிக்கு சீத்தை துணியில் தைத்த சேர்ட்டையும் காற்சட்டையும் போட்டுக்கொண்டு வந்தான்.அந்த சேர்ட்டை அவன் போடமல் வைத்திருந்தமைக்கு காரணம் அதில் வரும் மண்ணெயின் மணம் தான்.
"டேய் கோவிலுக்கு போகும் பொழுது உது என்ன தியட்டருக்கு போற மாதிரி போட்டிருக்கிறாய், ஒடி போய் வெள்ளை சேர்ட்டை போடு"
"வெள்ளை சேர்ட் ஊத்தையாக இருக்கு அப்பா"
"அப்ப ,சேர்ட் போடாமல் போயிட்டு வா "
"ஐயோ நான் மாட்டேன்"
அவனை அழைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது சால்வையை அவனது காற்சட்டைக்கு மேல் சுற்றிவிட்டு,விபூதி யை பூசி இப்ப நீ அம்மாவுடன் கோவிலுக்கு போகலாம் என்றார்.அவனுக்கு வெட்கமாக இருந்தாலும் தந்தைக்கு பயத்தில் கோவிலுக்கு தாயாருடன் சென்றான்.
இனிமேல் இப்படித்தான் கோவிலுக்கு வரவேனும் இது உனக்கு வடிவாயிருக்கிறது,ஒம் அம்மா என்று தலையாட்டினான்.தனியாக செல்லும் பொழுது வெள்ளை சேர்ட்டும் போட்டுகொண்டு போவான். அவன் சால்வையை வேஸ்டியாக கட்டும் வயதை தாண்டிவிட்டான் என உணர்ந்த தந்தை தீபாவளிக்கு இந்த தடவை அவனுக்கு வேஸ்டி வாங்கி கொடுத்தார். ஆனால் அவன் தந்தையின் பழைய வேஸ்டியைதான் கட்டிகொண்டு செல்வான் .
அந்த முருகனும் இரண்டு பட்டுத்துணியை மாறி மாறி அணிந்து இருப்பார் அதை அணிய வரும் ஐயரின் வெள்ளை நிற வேஸ்டி பழுப்பு நிறமாக இருக்கும்.அதில கறுப்பு நிறத்தில பட்டிக் டிசைன் தெரியும்.அது வேறு ஒன்றுமில்லை விளக்குதிரியின் முனையை பிடித்த பின்பு வேஸ்டியில் துடைத்தமையால் வந்த டிசைன்.
கால போக்கில் கோவிலுக்கு போறதை நிறுத்தி கொண்டான் .,இறக்குமதி செய்யப்பட்ட சித்தாத்தங்கள் அவனை ஆள் கொள்ள தொடங்க பரம்பரையாக க‌டைப்பிடித்த கொள்கைகள் விடுபட தொடங்கின .தாயார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்துகொண்டிருந்தார்.முருகா இந்தமுருகை எங்கயாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடு என ஒவ்வொரு நாளும் முருகனை தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டாள்.
தாயாரின் வேண்டுதலுக்கு முருகன் செவிமடுத்து முருகை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.
"இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலையால் வருவீங்கள்"
"வழமையா வாற நேரத்திற்கு"
"கொஞ்சம் எர்லியா வர முடியுமோ"
"ஏன்"
"முருகன் கோவில் கொடியெறிவிட்டுதல்லோ"
"எப்ப"
" இரண்டு நாளைக்கு முதல், நாட்டு நடப்புகள் தெரியாது.வேலைக்கு போறது வந்திருந்து  கொம்புயூட்டரை பார்க்கிறது"
"சரி சரி கத்தாதை வயசு போன நேரத்தில உனக்கு கூடாது"
"ஓ ஓ எனக்கு வயசு போய்யிற்று உங்களுக்கு மட்டும் வயசு அப்படியே நிற்குதாக்கும்"
"நான் மார்க்கண்டேயர் பரம்பரை"
"சும்மா கொதியை கிளப்பாதையுங்கோ ,நீங்கள் மார்கண்டேயர் பரம்பரை என்பதை நான் சொல்ல வேணும்"
"சரி பின்னேரம் எர்லியா வாறன்"

"முருகு, வரும் பொழுது சுதாவின்ட வீட்டை போய் என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்தனான் எடுத்துக் கொண்டு வாங்கோ"

"இப்ப என்ன அவசரம் பிறகு எடுக்கலாம் தானே"
"சீ சீ  நான் திருவிழாவுக்கு என்று தைச்ச பிளவுஸ்"
"திருவிழா முடிய இன்னும் ஐந்தாறு நாள் இருக்கே"
"முருகு அதுக்கு போட பிளவுஸ் இருக்கு இன்றைக்கு மஞ்சள் கலர்  சீலை தான் எல்லோரும் உடுப்பினம் அதுக்கு பிளவுஸ் இல்லை அதுதான் முருகு பிளிஸ்"
எதாவது தேவை என்றால் கொஞ்சி குலாவிதனது காரியத்தை முடித்து கொள்வாள்.
வேலை முடிந்து வரும் பொழுது சுதாவீட்டை போனவன் அழைப்புமணியை அழுத்தினான்.கையில் கத்தரிக்கோலுடன் வந்த சுதா
"வாங்கோ,வாங்கோ,உங்கன்ட மிஸிஸ் கோல் பண்ணின‌வ நீங்கள்  வருவீங்கள் எண்டு"
"பிளவுஸ் தைச்சாச்சோ"
"கை தைச்சு முடியல ஐந்து நிமிடம் இருங்கோ ட‌க் என்று தைச்சுதாரன்"
"என்ன பிசியோ"
"ஒமோம் முருகன் கோவில் கொடியெறிட்டுது எல்லோரும் ஆறு எழு பிளவுஸ் என்று தைக்க தந்திருக்கினம் அதுதான்"
"அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா"
உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,"
கதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம்  கொடுத்து விட்டாள் சுதா.

இன்றைக்கு மனிசி கோவிலுக்கு போய்விடும் நிம்மதியா வீட்டிலயிருந்து கதை ஒன்றை கிறுக்குவோம் என்று நினைத்தபடியே வந்தவன்,
"இந்தாரும் அப்ப உம்மட பிளவ்ஸ்"
"ஐயோ தாங்க்ஸ் அப்பா நான் நினைச்சேன் நீங்கள் மறந்துகிறந்து போய்விடியளோ என்று"
"நீர் சொல்லி நான் என்னத்த எப்ப மறந்திருக்கிறன் சொல்லும்"
"உந்த நக்கல் கதைக்கு மட்டும் குறைச்சலில்லை,நீங்களும் குளிச்சு போட்டு வாங்கோவன் கோவிலுக்கு போய்விட்டு வருவோம்"
"நான் வரவில்லை நீர் போயிற்றுவாரும்"
"சும்மா அடம் பிடிக்காமல் வாங்கோமஞ்சள் வேஸ்டி எடுத்து வைச்சிருக்கிறன் சுற்றி கொண்டு வாங்கோ"
முருகு கோவிலுக்கு யாராவது வரச்சொன்னால் போகாமல் இருக்கமாட்டான்.விருப்பமில்லாவிடிலும் பயம் காரணமாக சென்று விடுவான்.
முருகும் மஞ்சள் வேஸ்டி அணிந்து கோவிலுக்கு சென்றான்.
முருகனை பார்த்து அரோகரா என இரு கை தூக்கி கண்ணை மூடி திறந்தான் முருகன் மஞ்சள் பூக்களாலும் மஞ்சள் பட்டுத்துணியாலும்அலங்கரிக்கப்பட்டு அழககாக காட்சியளித்தார்.சற்றே திரும்பினான் தலைசுற்றி போனான் ,நின்ற ஐயர்மாரும் மஞ்சள் வேஸ்டியை அழகாகஸ்திரி பண்ணி அணிந்திருந்தார்கள்பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மஞ்சள்  சேலைகளினதும் ,மஞ்சள் வேஸ்டிகளினதும் எண்ணிக்கைஅதிகமானது.பக்கத்தில் மெய்மறந்து நின்ற மனிசியிடம்
என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி மஞ்சளில் வந்திருக்கினம் என்ன விசயம்"
"உங்களுக்கு தெரியாதே இன்றைக்கு எங்கன்ட சப்பேர்ப்காரரின்ட திருவிழா"
"அதுக்கும் மஞ்சளுக்கும் என்னடியாத்தை சம்பந்தம்"
ஒவ்வொரு சப்பேர்ப்காரர்களுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கினம்"
யார் கொடுத்தது?முருகனே"
திருமதி முருகு அவனை சுற்றெரிப்பது போன்று பார்த்தாள்.
"கூல் கூல் சும்மா ஒரு பகடிக்குத்தான்"
"கோவிலில் நின்று என்ன பகடி வேண்டிக் கிடக்குது"
முருகா போற போக்கில எம்மவர்கள் உனக்கு கோர்ட் சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்பார்கள்.எனக்கு மனதில தோன்றியதை சொல்லிபோட்டேன் யாவும் உன் செயலே....உனக்கும் டெர்ஸ்கொட்  கொண்டு வந்திட்டாங்கள் உன் பக்தர்கள்...முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா  ......dress code
ஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து  விட்டுள்ளது.
என எண்ணியபடியே முருகனை வலம் வந்தான் முருகு....

8 comments:

  1. அவுஸ்ரேலியாவில் இப்ப முருகன் தேர்விழா சிறப்பு எனது இணைய வானொலி நட்புகள் நேரடி வர்ணனை என்று வெள்ளைவேட்டியில் பார்த்தேன் மஞ்சல் கலர் பார்க்கவில்லை!)))

    ReplyDelete
  2. பாவம் முருகமூர்த்தி எப்படி எல்லாம் தையல்கடை அக்காசி இடம் காத்து இருந்து கதை எழுதவேண்டி இருக்கு ஓய்வாக இதுவே நம் தேசம் என்றால் மாறுதலை அல்லவோ முருகா பாட்டியின் காலத்தில்)))

    ReplyDelete
  3. முருகனுக்கு எக்கலர் என்றால் பச்சை முக்கியம் ஆனால் விளம்பரதாரர்கள் பட்டுச்சாத்துகின்றோம் என்ற போர்வையில் தம் கட்சிவிளம்பரம் செய்வது நிச்சயம் அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது!))( மஞ்சல் வேட்டி கட்ட இன்னும் வயசு இருக்கு)))

    ReplyDelete
  4. பாட்டி இறைபாதம் அடைந்த !கற்பூரம் ஏற்றி-கொழுத்தி -(அவமங்களம்) கூல் கூல் பகிடிக்குத்தான்- இப்படித்தான் அண்ணே பலர் எங்க நேரகாலம் புரியாது சில எழுத்துப்பிழைகளை வைத்தே எம் வேட்டியை கிழிப்போர் ஊரில் நல்லாக இருக்கும் முருகன் பக்தன் கூட இணையத்தில் ஒரு பதிவு எழுதமாட்டான்! இதைச்சொன்னால் தூற்றும் உலகம் அண்ணே!))(

    ReplyDelete
  5. நாட்டு நடப்ப நகைச்சுவைக்குள்ளயும் நையாண்டிக்குள்ளேயும் ஒழிச்சு வச்சுச் சொல்லி இருக்கிறியள்....

    சுவாரிஸமா இருக்கு...

    முற்றுப் புள்ளிகளையும் எழுத்துப் பிழைகளையும் பந்தியமைப்பையும் ஒரு தடவை சரிபார்த்தால் வாசிக்க இன்னும் இலகுவாக இருக்கும்...

    தொடர்ந்து எழுதுங்கள் புத்தன்.

    ReplyDelete
  6. தனிமரம் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  7. "முற்றுப் புள்ளிகளையும் எழுத்துப் பிழைகளையும் பந்தியமைப்பையும் ஒரு தடவை சரிபார்த்தால் வாசிக்க இன்னும் இலகுவாக இருக்கும்"...

    வருகைக்கும் கருத்து ப‌கிர்வுக்கும் மிக்க நன்றிகள் ....இதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கு.... முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  8. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete