Tuesday, July 24, 2018

"ஓ வாவ்" Wow

"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்"
" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி"
"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்"
"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்"
" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்"
"ஊ ஊ ஊ "
"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்"
"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ"
"சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா"
"எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்"
"பிறகு"
"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"
"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"
"விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்"Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯
 "அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்"
"அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது"
"வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது"
"போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்"
"புரியல்ல"
"அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,
அந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான்
ஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை"
"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"
"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .
.."..வாவ்,"
"பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்"
"அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று
மயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் "
.."..வாவ்,"
"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",
"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"
"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"
"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"
"அது சரி மயிலரின்ட கடக்குட்டியை  எங்க க‌ண்டனீ? அவன்கன்ட பழைய வீட்டிலயோ" "
"சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்"
"அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா"
"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"
"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"
"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"
"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"
"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"
"வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்"
"மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது  விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு"
"அப்படியே அக்கா! விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று  அம்மா  சொன்னவ"
" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯
"ஏன் அக்கா",
"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"
"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"
"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"
"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"
"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"
"அப்படியே"
"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

"ஓ  வாவ்"
"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"