Thursday, February 15, 2024

திரு வின் காதலர் தின பரிசு

 திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ)  பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை 

 

....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு...

இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  காதலர் தினத்திற்காக  வாசுகி  மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என  சிணுங்கலுடன் சொன்னாள்.

திரு வேலை பளுகாரணமாக  "ஒம் " என   சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது  இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார்.

வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்..

 

அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் .

அதுதான்

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படா அ....."

வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை  சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்)

ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள்.

உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார்.

வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று  கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க ,

"உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் "

சிறுது நேரம் யோசித்த திரு

"மாலையில் சற்று விரைவாக வருமாறு"

"ஏன் வரவில்லை"

"வேலைப்பளு கண்ணே"

"இன்று என்ன நாள் என தெரியுமா"

"தெரியவில்லையே தேனே"

"காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும்  காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .."

"அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது  மலரே"

"எங்கே வாசியுங்கள்"

திரு  உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் .

வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர்.

கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார்.

"மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது"

"எழுதுங்கள் நாதா"

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியோர் பெற்ற பயன்"

"அருமை நாதா"

வாசுகியை தன் வசம் மயக்கிய   மகிழ்ச்சியில்  

"பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது"

"எழுதுங்கோ பிரபு"

" அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே"

" இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் "

என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள்

 

..

Friday, September 29, 2023

 எங்கன்ட வோர்ட்

வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன்

திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்"

"இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே"

"எனக்கோ உங்களுக்கோ...." என  ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள்.

"  எம் பெருமான் முருகனையும் அவன் அப்பன் சிவனையும்  அழைத்தால் கோவிலுக்கு  போகப்போறீங்களோ என கேட்க வேணும் அதைவிட்டிட்டு டொக்ரிட்ட  போகப்போறீங்களோ என கேட்பது எந்த கலாச்சாரம்"

 "கலாச்சாரத்தை பற்றி நீங்கள் கதைக்கிறீயல் என்ன கொடுமை சரவணா"

"யார் அந்த சரவணன்? உம்ம‌ட பழைய பொய்பிரண்ட்..." என கேட்டு சிரிச்சு சமாதனம் பண்ணினேன்.

" உந்த மொக்கை ஜொக்குகளை கேட்டு என்ற காது செவிடாபோச்சு, விடியவெல்லன எழும்பி மனுசருக்கு அலுப்பு கொடுத்து கொண்டு போய் பார்க்கிற அலுவல்களை பாருங்கோ"

"இஞ்சாரும் லீவு போட்டுவிட்டு வாரும் முருகன் கோவிலுக்கு போயிட்டு வருவம்"

"மழை வரப்போகுது இன்றைக்கு"

"உந்த மொக்கை ஜோக்கை 25 வருசமா கேட்டு  புளிச்சு போச்சு ஹி ஹி"

ஒருமாதிரி புடுங்குப்பட்டு முருகனை தரிசிக்க புறப்பட்டோம்.கார் திறப்பை மனிசியிட்ட கொடுத்து

"நீர் ஒடுமப்பா"

" ஏன் என்ன நடந்தது உங்களுக்கு இன்றைக்கு? வழமையாக கார் ஓட தரமாட்டியல், பார்டிகளுக்கு போய்விட்டு திரும்பும்பொழுது மட்டும் கொஞ்சம் தடுமாரி தடுமாரி திறப்பை தருவியல்"

  "பார்வை கொஞ்சம் மங்கலாக இருக்குது "

" கண்ணாடி மாத்த‌ வேணுமோ தெரியவில்லை கோவிலுக்கு போய்விட்டு அங்க போவம்"

" சும்மா போம் இன்றைக்கு கோவிலை தவிர வேற இடத்தை போறதில்லை"

'உங்களுக்கு என்ன நடந்தது "

" விசர்கதையை விட்டிட்டு காரை ஓடும்" கொஞ்சம் அதட்டலாக சொன்னேன்  ,திரும்பி என்னை பார்த்து முழுசியவள்

"உந்த ராங்கி கதைக்களுக்கு குறைச்சலில்லை,அங்க ஒன்றும் வேலை செய்தில்லை ,இப்ப கண் வேற பிரச்சனை ,கார் ஒடுறது மட்டும் ஒழுங்க செய்தியல் அதுவும் இல்லை இனி போல கிடக்கு "

வேகமாக நடந்து  கார் கதவை திறந்து ஏறியவள் என் மீது இருந்த கோபம் ஆத்திரம் யாவற்றையும் கார் கதவின் மீது காட்டினாள்.நான் எதுவும் புரியாதவன் போல முன் சீட்டில் ஏறி அமேர்ந்தேன்.

 கார் ஓடிய விதம் ,என் மீது கோபம் இன்னும்  தனியவில்லை என்பதை காட்டியது.இப்படியே விட்டா என் உயிருக்கு உத்தரவாதமில்லை ,முருகனை சிட்னியில சந்திக்க முடியாது அவனை மேலோகத்தில் தான் சந்திக்க முடியும் என உணர்ந்து     

"இஞ்ச உம்மட வட்சப்புக்கு வீடியோ அனுப்பினேன் பார்த்தனீரே"

"இல்லை"

"நல்ல வீடியோ பார்த்திருக்கலாம் ஏன் பார்க்கவில்லை"

"நேரமில்லை"

வீட்டு வேலை செய்ய நேரமில்லை இதுக்குள்ள இவரின்ட வட்சப் வீடியோக்களை பார்த்து கொண்டிருக்க வேணுமாக்கும் என்ற அவளின்ட மைன்ட் வொஸ் எனக்கு விளங்கினாலும் ,அவளின் ஒற்றை பதில்கள் அவளுக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை என்பதை புரியவைத்தாலும் 

நான் சமாதன முயற்சியை கைவிடவில்லை.

 "வயசு போன நேரத்தில ஏன் கோபிக்கிறீர் ,இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால்" என சினிமா வசனத்தை சொல்ல

"கோவிலுக்கு போற நேரத்தில் ஏன் உந்த செத்த வீட்டு வசனம் "

இந்த நீண்ட பதில் அவள் சமாதானம் ஆகிவிட்டாள் என்பதை உணர்த்தியது.

" அந்த வீடீயோவை பாரும் நான் ஏன் கோவிலுக்கு போக வெளிக்கிட்டனான் என்று புரியும்"

"யார் அனுப்பினது? அப்படி என்ன இருக்கு? ,யார் பேசியிருக்கினம்? சுகி சிவத்தின்டயா?"

"எங்கட சிவா  யூ டியுப்பில் ,'கோவிலுக்கு ஏன் போகவேணும் இந்துக்கள் ' விளக்கம் கொடுத்திருக்கிறான்..கொடுத்திருக்கிறார்.

"என்ன அவனுக்கு பெரிய மரியாதை  கொடுக்கிறீயல் ,'கொடுக்கிறார்' என்று அவனும் நீங்களும் சேர்ந்து ஆடின ஆட்டம் எனக்கும் அவனின்ட மனிசிக்கும் தான் தெரியும் "   

"அது கடந்தவை அதுகளை இப்ப கிளறாதையும் மாற்றம் ஒன்றே மாறதவை "என புரட்சிகர வசனம் பேசி அவளை மடக்க நினைத்தேன்

"இஞ்சப்பா உந்த புருடா கதைகளை தாண்டித்தான் நானும் வளர்ந்தனான் எனக்கு உங்கன்ட வயசை விட   நாலு வயசு தான் குறைவு"

க‌தைத்து கொண்டு இருக்கும் பொழுதே சிட்னி முருகனின் வாசஸ்தலம் எம்மை வரவேற்றது.எம்பெருமான் முருகனின் விசேச தினங்களில் வாகன தரிப்பிடம் எடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல இரண்டு மூன்று தடவைகள் சுற்றி வந்தாலும் கிடைப்பது என்பது முயல் கொம்பு போன்றது.

நான் வாகனத்தை ஒடினால் இரண்டு சுற்று சுற்றுவேன் இடம் இல்லை என்றால் காரில் வருபவர்களை முருகனின் வாசல் ஸ்தலத்தில் இறக்கி விட்டு அருகில் உள்ள தெருக்களில் இடம் தேடி அலைந்து நிறுத்தி விட்டு முருகனுக்கு ஹாய் சொல்வது வழமை.

ஆனால் அன்று நம்ம துணை ஒடியதால் அடம் பிடித்து இரண்டுக்கு  மேல் பட்ட தடவைகள் சுற்றினாள் .

அன்று கார் பார்க்கில் நிற்கும் நம்ம தொண்டர்களில் சிலர் மிகவும் அன்பாக பழகினார்கள் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது .பெண்கள் கார் ஒடினால் முருகனின் பக்தர்கள் மனம் உருகிவிடுவார்கள் போல என நினைத்து,.

 ஏயார் ட்ரைவிக் கொன்ரோலர்ஸ் மாதிரி கண்ணும் கருத்துமாக விரைப்பாக முகத்தை வைத்து  கார் பார்க்கில் வேலை செய்யும் நம்ம அண்ணாமாரே இப்படி விளம்பரத்துக்கு சிரிப்பது போல சிரிக்கின்றனர் என கேட்க வேணும் போல் இருந்தது இருந்தாலும் கோவில் வளாகத்தில் வைத்து ஏன் வம்பு என நினைத்து  முருகனிடம் விடை கிடைக்கும் அவனிடம் விட்டுவிட்டேன்.

 காரை மூன்றாவது தடவையாகவும் திருப்பினாள் தரிப்பிடம் தேடி .பொறுமையை இழந்த நான்

"உதுக்கு தான் நான் ஒரே சுற்றில் பக்கத்து தெருவுக்கு போய் பார்க் பண்ணுகிறனான்"

"பொறுமையாக இருங்கோ முருகன் எனக்கு ஒரு ஸ்பொட் தருவார் "

" அடியே அவருக்கு வேற வேலை இல்லையே உமக்கு கார் ஸ்பொட் தரவே 24/7 வேலுடன் இருக்கிறார்"

"உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விடுங்கோ எனக்கு நம்பிக்கை உண்டு" மீண்டும் என்னை  விழியால் கோபமாக பார்த்தாள்..

அமைதியான நான் எனது கற்பனை குதிரையை சிறகு அடித்து பறக்க விட்டேன்.

இந்த தரிப்பிடத்தை மூன்று தடவைகள் சுற்றி விட்டோம் பெற்றோல் செலவு .பேசால் முருகனை நடுவில வைத்து ஒரு பெரிய கார் பார்க் கட்டியிருந்தா முருகனை சுற்றின பலன் கிடைத்திருக்கும். அப்படியே டரைவ் துரு தோசை கடையும் போட்டால் நல்ல வருமானம்  வரும்... இதை நான் சிபார்சு செய்ய ஒரு கோஸ்டி சம்மதம் தெரிவிச்சு கவுன்சிலில் அனுமதி எடுக்கும் .இதை விரும்பாத மற்ற கோஸ்டி பெட்டிசன் போடும் ,இன்னோரு கோஸ்டி இவன் யார் கவுன்சிலுக்கு அனுமதி கேட்டு போட உவன் என்னத்தை படிச்சவன் நான் சிறிலங்காவில் பேராதனையில் பட்டம் பெற்றவன் தாமரை கோபுரத்தை வடிவமைத்தவன்  என மார்பு தட்டி குழப்ப .,இதை எல்லாம் விடுப்பு பார்த்த என்னை மாதிரி சிலர் சமுக வலைத்தளங்களில் கிறுக்கி தள்ள  ஓ மை கோட்...

இருவர் எமது காரை நோக்கி வந்திச்சினம் , தரிப்பிடம் தரப்போயினமாக்கும் என நினைத்து கண்ணாடியை இறக்கினேன் . சிரித்தார்கள் நானும் சிரித்தேன் .

"உங்கட்டையும் இருக்குத்தானே"

வழமையாக என்னை கண்டால் வேற்று கிரகவாசியாக்கும் என சிரிக்கமால் சென்று விடுவார்கள் ஆனால் இன்று என் கார் தேடி வந்து உங்களுக்கும் இருக்குத்தானே என கேட்டது என்னை நிலைகுழைய வைத்தது. 

இத்தனை வருசமா ஒருத்தனும் கேட்காத கேள்வியை இவன்கள் கேட்கிறாங்கள் பக்கத்தில் மனிசி வேற, போதாக்குறைக்கு கோவில் இல்லாட்டி ...கேட்டிருப்பேன் பார்த்தால் தான் நம்புவியளோ?

என்னுடைய லோள்ளு குணம் அறிந்தவள் மனைவி முந்தி கொண்டாள்.

"இஞ்சப்பா இவை தேர்தலில் நிற்கினம் எங்கன்ட வோர்ட் கேட்டு நேற்று வீட்டை கொல் எடுத்தவையள்"

"ஒ அவையளோ? உங்களுக்கு தான் போடுவோம்"

" உங்கன்ட வீட்டில நாலு  வோட் இருக்குது பார்த்து போடுங்கோ"

"நிச்சயமாக"

நன்றி சொல்லி விடை பெற்றனர் .

"உவை இரண்டு பேரும் எந்த கோஸ்டி"என மனைவியிடம் கேட்டேன்

"இவையள் இருவரும் இரண்டு வேற வேற கோஸ்டிகளை சேர்ந்தவையல்"

"உவையல் முந்தியும் கனதரம் பதவியில இருந்தவையல் அல்லோ"

" இந்த தடவை கும்பாபிசேகம் வருது அதுதான் உசார ஒடி திரியினம்"

"ஓ ஓ முதல் மரியாதை விசேட கவனிப்பு அதுக்குத்தான் ஒடி திரியினம் ,இந்த தடவையும் கார்பார்க் கட்ட மாட்டினம் "

"காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தும் .அவையள் பதவிக்கு ஒடி திரிவினம்,இதில உங்கட்ட இருக்கோ என்ற கேள்வி ,நாங்க  கார் பார்க்  பண்ண  ஓடி திரிய வேணும். ஐந்தாறு தடவை சுற்றினாலும்   இடம் கிடைக்காது"

"இந்ததடவை கட்டுவினம்"

"தாலியை கட்டிச்சினம்....உந்த கார் பார்க் பிரப்போசலை கொண்டு வந்த சனத்தில் சிலர் மேல போட்டினம் சில நேர்சிஹோம்,சிலர் டிசேபில் ஸ்பொர்ட் கார் பார்க் பண்ணினம் ,சிலர் வீல்சேர்....

நாங்களும் அந்த லீஸ்ட்டில் வந்தாலும் இந்த கோஸ்டிகள் கார் பார்க் கட்டாதுகள் ...நீர் இறங்கும் நான் பக்கத்து தெருவில் பார்க் பண்ணிபோட்டு வாரன்"

"ஒம் அப்பா பார்க் பண்ணி போட்டு வாங்கோ " என காரிலிருந்து இறங்கினாள்

" என்ன உம்மடை முருகன் ஸ்போர்ட் தரவில்லையே இன்றைக்கு"

" பக்கத்து தெருவில் பார்க் பண்ண உங்களை தூண்டியது எம் பெருமான் முருகன் தானே"


Wednesday, April 13, 2022

பரNaகோர்ட்..... பரNaகோர்ட்

 பரNaகோர்ட்..... பரNaகோர்ட்

"பழைய போத்தல்,பேப்பர்பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா"

"அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ"

ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா"

காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா

 

"தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று"

"அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற  பரனகோர்ட்அண்ண"

"நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்"

இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி

"அம்மா இந்த   பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா"

"அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ"

தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம்  பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார்

"நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா  தான் பெறும்"

"அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே"

என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்"

"அப்பா வளவுக்குள்  இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்"

"எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு"

அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான்.

வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது  கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை  சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல  பானை .ஆடுகள்  உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை.

இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர்  கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான்இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் .

"அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ"

அவர்கள் சிரித்து கொண்டே

"இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ"

அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே  அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர்.

அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று.

அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான்.

அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர்.

படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான்.

குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் .

"அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே"

"இவர் என்ட சொந்த தம்பி"

"அண்ணே இந்த  போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ"

"இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவருக்கு அனுப்பிவிடுவோம்  "

"அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது"

"அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை"

"அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்"

அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான்

விடியகாலையில் '

"டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி"

"இந்தா இருக்கு புதுசு"

எங்கயடா பழைய சட்டி"

"அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்"

கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு

"டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?"

இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள்

"இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு"..

"சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்"

நீ அடுத்தவள்அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா"

"அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்"

"இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்."

"சரி சரி"

"உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ"

"அம்மா,பரணகோர்ட் அண்ணே  பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு"

"படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல்

வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்"

என கோபத்தில கத்திவிட்டு  ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை.

தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி  நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர்

  குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள்.

குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் .

குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். 

வாடிவென்ட என்றார்கள்

இவனும் பயந்து பயந்து அமர்ந்தான்

"நம மொக்கத"

"குகன்"

"கொயத வடக்கருவே"

"வெர்ஸ்ட் ஜொப்"

"கம ஹொயத"

"யாப்பானய"

"அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)"

பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள்.

 இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி  வீடு வந்தான்.

"என்னடா இன்டெர்வியூ எப்படி"

"சரிவரவில்லையப்பா"

"சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்"

என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் .

 "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு"

" எந்த கொம்பனி?பெயரை சொல்லு?"

"GoMaBa"

"அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள்

அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்"

"அடகோதாரி "

"நான் சொன்னான் தானே  அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த  பொருட்களை  எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்"

அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு

 

திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு  உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன்.

கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் 

திடுக்கிட்டு எழுந்தான்