Monday, December 31, 2012

நாங்கள் யாழ்ப்பாண‌த்தார் (we are from Jaffna)

பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்க வேண்டும் பிறகு நேரம் கிடைக்காது இப்ப வாங்கோ என்று அதிகாரம்கலந்த பாசத்தோடு அழைத்தான்.போங்கோ பிள்ளை அப்பா கூப்பிடும் பொழுது போய் படியுங்கோ அப்பதான் சாய்பிரியாவை விட அதிக புள்ளி எடுக்கலாம் . போனமுறை சாய்பிரியா கேடயம் எடுத்தவ இந்த முறை நீங்கள் எடுக்க வேணும் என அம்மா வேறு அவளை நச்சரித்தாள் .சாய்பிரியாவின் அம்மாவும் இவளின் அம்மாவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள்
பெரியவளுக்கு அந்த வயசில் போட்டிகள் கேடயங்கள் எதைப்பற்றியும் தெரியாது.

அப்பாவும் அம்மாவும் தன்னை படிக்க வற்புறுத்துகிறார்கள் என்று எண்ணியபடியே கேள்விகொத்தொடு வந்தாள் .,வரும் பொழுதே “தங்கச்சி மட்டும் விளையாடுகிறா நான் மட்டும் படிக்க வேண்டும் கோல் கெர் டு(call her too) ” என்ற படியே வந்து அமர்ந்தாள்.சரி சின்னா நீங்களும் வாங்கோ அடுத்த வருடம் நீங்கள் இந்த போட்டிக்கு போக வேணும் தானே இப்பவே படிச்சால் நல்லம் என்று சொல்லி இருவருக்கும் சுரேஸ் படிப்பித்தான்


சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்


அப்பா தங்கச்சி சொன்னது எல்லாம் சரிதானே பிறகு ஏன் நீங்கள் வேறு பதில் கொன்னீங்கள்..
தங்கச்சி சொன்னது சரிதான் ஆனால் சமய போட்டியில இந்த கேள்வி கேட்டால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் பதிலை சொல்ல வேணும் சரிதானே.
பிள்ளைகள் இருவரும் ஒம் அப்பா என்று போட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.
போட்டி முடிவடைந்து முடிவுகள் அறிவித்தார்கள் .பெரியவளுக்கு கேடயம் கிடைத்தது .பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள் .சாய்பிரியாவுக்கு என்ன கிடைச்சதாம் என்று பெரியவளிடம் தாய் கேட்டார்.”எனக்கு தெரியாது அம்மா”.தாய்காரியின் முகத்தை பார்த்தியளே உம் என்று வைச்சிருந்தா ,அவளின்ட மகளுக்கு கேடயம் கிடைக்கவில்லை எண்ட ஆத்திரம்தான்.

"சீ சீ அப்படியிருக்காது"
"உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் எதிராக சொல்லாவிட்டால் நித்திரை வராதே"

"சரி சரி உதை விடும்"

பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்க தொடங்கியவுடனே சுரேஸும் மனைவியும் அவளது படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபடத்டொடங்கிவிட்டார்கள்.படிப்பு மட்டுமல்ல நீச்சல்,பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வலை பந்தாட்டம்,போன்ற துறைகளிலும் அவளை ஈடுபடுத்தினார்கள்.அவளும் நன்றாக பாடங்களில் சித்தியடைந்தாள் . அக்கா எல்லாப்பாடங்களில் "எ" எடுத்திருக்கிறார் நீங்களும் அடுத்த வருசம் எல்லா பாடத்திலயும் "எ" எடுக்க வேணும் என்றனர் பெற்றோர்.சிறுசும் ஒம் என்று தலை அசைத்தாள்.இருவரும் நன்றாக படித்துகொண்டிருந்தனர்.அதே நேரம் எனைய துறைகளிலும் இருவரும் தங்களால் இயன்றளவில் பிரகாசித்துக்கொண்டிருந்தனர். தங்கச்சியின் குரலை பார்த்தியா நல்லாய் இருக்கு நீயும் அவளை போல பாட வேணும் என தாயார் சொன்னார்.இன்னொரு நாள் அக்கா நல்லா பரதம் ஆடுகிறாள் அவளை பார்த்து நீ வடிவாய் ஆடவேணும் என்றாள்.
"வை யு பிப்பில் ஆர் கொம்பயர் இச் அதர்(why do you people compare us to each other ) "என்றனர் சிறுவர்கள் இருவரும்.

"அம்மாவுக்கு வாய் காட்டாமல் அவ சொன்னதை செய்யவும்"என்றான் அதிகாரத்துடன் சுரேஸ் .

சிறுவர்களின் அந்த கேள்விக்கு பின்பு சகோதரர்களிடையே ஒப்பிடுவதை தவிர்த்து கொண்டனர்.ஆனாலும் அயலவர்களுடன் ஒப்பிடுவதை விடவில்லை.

உயர் வகுப்பு பாடசாலை தேர்வில் சாய்பிரியா அதிக புள்ளி கிடைத்து வேறு பாடசாலைக்கு சென்று விட்டாள் .இதனால் சுரேஸும் அவனது மனைவி யும்பெரும் கவலையடைந்திருந்தனர்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.காரணம் இவர்கள் செல்லும் பாடசாலைக்கும் சாய்பிரியா செல்லும் பாடசாலைக்கும் பெரிதாக தராதர வித்தியாசம் இல்லை.தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.

பிள்ளைகள் இப்ப உயர் வகுப்பு படிப்பதால் எதிர்கருத்து வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் பெற்றோரும் அதை மெளனமாகவும் சில நேரங்களில் சிரித்தும் சமாளித்து விடுவார்கள்.தாயாரை விட சுரேஸ்தான் பலே கில்லாடி சிரித்து சமாளிப்பதில்.
" பெரிசு ,சாய்பிரியா எத்தனை மாக்ஸ் எடுத்தவ இந்த முறை டெஸ்டில்"
"எனக்கு தெரியாது ,மற்ற ஆட்களின்ட மாக்ஸ்சை (marks)கேட்கிறது நொட் நைஸ்(not nice),மற்றது அவ வேற ஸ்கூல்"

"நீ டெலிபோன் பண்ணி கேட்டிருக்கலாம் நான் படிக்கிற காலத்தில என்ட மாக்ஸ்சை பார்க்க முதல் மற்றவனின்ட மாக்ஸ்சைதான் பார்ப்பேன்"என சொல்லி சிரித்தான் சுரேஸ்.
"யூ பிப்பில் ஆர் சொ ரூட்(you people are so rude) "
"தங்கச்சி இன்றைக்கு பலே ஆட்டத்தில கிறிஸ்டினா நல்லா செய்திருந்தா அவவுக்குதான் முதல் பரிசு கிடைச்சது"
"ஒம் அக்கா நானும் பார்த்தேன் சுப்பேர்ப்(superb)"

" பிள்ளைகள், அவள் நல்லாய் செய்தாள் என்று சொல்லுறீயள் ஏன் உங்களால் செய்யமுடியாமலும்,முதல் பரிசு எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் படிக்கிற இடத்தில்தானே நீங்களும் படிக்கிறீயள்"
"கேர் பெரண்ட்ஸ் ஆர் ரஸ்யன்(her parents are Russians) "
"சொ வட் .மனம் இருந்தால் இடம் உண்டு"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"இருவரும் ஒன்றாக செய்தனர்.



"நீச்சலில் முன்வீட்டு சன்டினாவுக்கு பாடசாலையில் முதல் இடம் கிடைச்சிருக்கு ஏன் உனக்கு கிடைக்கவில்லை பிள்ளை"

"சி இஸ் ஒசி கெர்ல்"
"சொ வட், நீயும் இங்கதானே பிறந்தனீ...ஏன் உனக்கு எடுக்க ஏலாமல் போய்விட்டது..."


"!!!!!!!ம்ம்ம்ம் ஐ வில் ரை நெக்ஸ்ட் டைம்(I will try next time)"
"இந்த முறை முயுசிக் கொம்பிடிசன் வருகிறது இரண்டு பேரும் டான்ஸ்க்கும்,முயுசிக்கும் போடவேணும் ,இந்தியன் பெட்டைகள் அனுஸ்காவும் கம்சிகாவும் தான் இந்த முறையும் முதலாவதாக வரப் பார்ப்பாள்லவையள் ஆனால் நீங்கள் தான் இந்த முறை முதலாவதாக வரவேணும்"

" ஒ கொட்(oh god)....ஏன் அம்மா நீங்கள் எல்லாத்தையும் கொம்பிடிசனாக பார்க்கிறீங்கள் ,ட்ரை பண்ணுவோம் இவ் வி கெட் ......."

யார் அம்மாவுக்கு வாய்காட்டிகொண்டு எதிர்த்து கதைக்கிறது என்று கேட்டபடியே சுரேஸ் அங்கு வந்தான்.
"அப்பா ,அம்மா எல்லாத்தையும் கொம்பிடிசனாகத்தான்(competition) பார்க்கிறா ஏன் இப்படி செய்கிறா என்று தெரியவில்லை"

அம்மா மட்டுமல்ல நானும் அப்படித்தான் பிகோஸ் வி ஆர் வ்ரோம் யவ்னா (because we are from Jaffna).எதிலும் ஒரு போட்டியிருக்க வேணும் அப்பதான் முன்னுக்கு வரலாம்.

"நீங்கள் சின்ன வயசில எடுத்த மெடல்கள் ஒன்றையும் இங்க காணவில்லையே அப்பா"
சுரேஸுக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் போனாலும் சாமாளித்துவிட்டான் ,ஆர்மிக்காரனின் தலையில் பழியை போட்டு தப்பித்துகொண்டான்.மெடல்களை அவன் தொட்டே பார்க்கவில்லை என்பது அவனுக்கே தெரிந்த உண்மை.
"அது எல்லாத்தையும் ஆர்மிகாரன் உடைச்சுப்போட்டான்,அவன்கள் மெடல்களை மட்டுமா உடைச்சாங்கள் எங்களுடைய கல்வியையும் பாழாக்கி போட்டாங்கள் ,ஆனாலும் எங்கன்ட சனத்தின்ட விடாமுயற்சியும் போட்டி மனப்பாங்கும் தான் அழித்தாலும் மீண்டும் முளை விடுகிறார்கள்....அவங்களை"
அப்பா டென்சன்(tension) ஆகிவிட்டார் லெட்ஸ் கொ( lets go),என கூறியவாறு பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

6 comments:

  1. >தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.

    James Ruse and Baulkham Hills high? :-)

    ReplyDelete
  2. அதே....நன்றிகள் சக்திவேல்

    ReplyDelete
  3. அது சரி யாரப்பா நீங்கள்? தமிழ் பள்ளிக்கூடம் வருவீர்களோ? :-)

    ReplyDelete
  4. ஒம்....என்னை அதிகம் கண்டிருப்பீர்கள் .....

    ReplyDelete
  5. புத்தன் என்ற பெயரில் நடமாட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. இல்லை ....நிச்சமாக இல்லை ...சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்..

    ReplyDelete