Sunday, April 11, 2010

வெற்றி..வெற்றி

வெற்றி,வெற்றி,கொர்..கொர்..என்ற��� புலம்பி கொண்டு படுத்திருந்த கனகரை என்னப்பா கனவு கண்டனியளோ என்று ஆளை தட்டி எழுப்பினாள் மனைவி கமலா திடுகிட்டு எழும்பிய கனகர் மனிசியை பார்த்து ஒரு நல்ல கனவை குழப்பி போட்டாயப்பா என்றபடியே எழும்பி நேரத்தை பார்த்தார் காலை 4 மணி.காலம்காத்தால பார்க்கிற கனவு பலிக்கும் என்று சொல்லுறவையள் நீர் என்ன நினைக்கிறீர் என்று கமலாவிடம் கேட்டார்.கனவை சொல்லுங்கோ பிறகு பார்போம் பலிக்குமோ பலிக்காதோ என்று அரைதூக்கத்தில் சொன்னாள்.எங்கண்ட பெரியவனின்ட மூத்தவன் தினேஷ் அமெரிக்க விமானபடை அதிகாரியின் உடுபோட கம்பீரமா வந்து என்னட்ட கேட்கிறான் தாத்தா நீங்கள் என்னுடன் ஒருக்கா வர வேண்டும் உடனே இப்ப வரவேண்டும்.நான் ஏன் என்று கேட்க இந்து சமுத்திரத்தில் சிறிலங்கா என்ற நாடு இருக்கிறது அந்த நாட்டில் சில முக்கிய இடங்களை காட்ட வேண்டும் என்றான்.நானும் ஒகே என்று அவனுடன் ஏறி பறந்தேன்.அது ஒரு போர் விமானம் அவனும் நானும் தான் இருந்தனாங்கள்.இருந்தா போல "பிறவோ,கமாண்டோ1,2,பிறவோ4,5" இப்படியான சத்தங்கள் கேட்டன.பிளேன் கடலுகுள்ள இறங்கிற மாதிரி இருந்தது எட்டி பார்த்தால் ஒரு மெல்லிய குலுக்களுடன் "பிளேன்"நின்றது.இறங்குங்கோ தாத்தா என்றான்.நானும் இறங்க ஓடி வந்து கை கொடுத்தான் ஒருத்தன்.நிமிர்ந்து பார்த்தேன் எங்கண்ட இரண்டாவதிண்ட குணேஷ் பிரித்தானியா கடற்படை அதிகாரி உடுப்பு போட்டு கொண்டு என்னை கைத்தாங்கலாக இறக்கி விட்டான்.அவனை சுற்றி ஜந்தாறு வெள்ளைகள் அவனுக்கு பாதுகாப்பிற்கு நிற்கீனம்.எங்கண்ட பெடியனிற்கு வெள்ளைகள் சலூட் அடிச்சினம்.அதை கண்ட எனக்கு ஜந்து நிமிசம் புல்லரித்து விட்டது.தாத்தா களைத்து போயிருப்பியள் வாங்கோ கொஞ்சம் "ரெஸ்ட்"எடுபோம் என்றான் குணேஷ்.இது என்ன நடுகடலிற்குள்ள ஒரு தட்டில நிற்கிறோம் இங்க எப்படி "ரேஸ்ட்"எடுக்கிறது என்று முழித்து கொண்டு நிற்கும் பொழுதே தாத்தா இது பிரித்தானியா"விமான தாங்கி கப்பல்"கீழே வாங்கோ காட்டுகிறேன் என்று கூட்டி கொண்டு போனான்.இருந்தா போல பார்த்தேன் தினேஷியும்,குணேஷியும் பிளேனுகுள் இருக்கிறாங்கள் என்னை கூப்பிட்டு நடுவில இருத்திபோட்டு கொழும்பிற்கு கூட்டி கொண்டு போறன் சில இடங்களை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றான் நானும் ஓம் எந்த இடம் என்று சொல்லுங்கோ என்றேன்.ஜனாதிபதி மாளிகை,பிரதமர் அலுவலகம்,விமானநிலையம்,துறைமுகம்,மத்தியவங்கி போன்றவற்றை நீங்கள் எங்களுக்கு காட்ட வேண்டும் என்றார்கள்.போர்விமானம் சும்மா பறக்கிது தினேஷ் ஏதோ "கொமாண்ட்"பண்ண குணேத் பிளேனை சுற்றி சுற்றி ஓட்டினான்.குண்டு விழும் சத்தங்கள் மேலையும்,கீழையும் கேட்கிறது நானும் உணர்ச்சிவசபட்டு அங்கே போடு,இங்கே போடு என்று கத்தி கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால "பிளேன்" அநுராதபுரதிற்கு மேலால பறக்கிது நான் உணர்ச்சிவசபட்டு இங்கையும் அடியுங்கடா என்று கத்துறன் அங்கு தாறுமாறாக குண்டுகளை போடுகிறார்கள்.தாத்தா கீழே இறங்கி பார்க்க போறீங்களா என்று கேட்டான் தினேஷ்.நானும் ஓம் என்று போட்டு இறங்கினன்.அங்கே கொமாண்டோ உடுப்புடன் எங்கட பெடியள் நிற்கிறாங்கள் அவர்களுடன் தினேஷ் கைகுலுக்கி போட்டு தாத்தா யாழ்பாணத்திற்கு போக போகிறாறாம் அது தான் கூட்டி கொண்டு போறன் ஏதாவது அவசரம் என்றால் சட்லைட் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கோ என்று எங்கண்ட கமோண்டோ பெடியளிட்ட கூறிபோட்டு யாழ்நோக்கி பறந்தான்.தம்பி எனக்கு சாதுவாக நெஞ்சுகுள்ள நோகுது என்று சொல்ல அவன் பிளேனை உடனே பூநகரி கடலில் இன்னுமொரு விமான தாங்கி கப்பலில் "பிளேனை"இறக்கினான் அங்கே எங்கண்ட நரேஷ் அவுஸ்ரெலிய விமானபடை "யூனிபோர்ம்"போட்டு கொண்டு வாங்கோ தாத்தா என்றான் அவனோட ஜந்தாறு வெள்ளைகள் ஓடி வந்து என்னை பரிசோதித்து விட்டு "கெலிகொப்டலில"ஏத்திச்சீனம் நரேஷ் தான் அந்த "கெலியை"ஓட்டினான்.பத்து நிமிசத்தில் "கெலியை"ஒரு மொட்டை மாடியில் இறக்கினான் நரேஷ்."காய்"தாத்தா என்று ஒருத்தி ஒடி வந்தாள் பார்த்தா உம்மை மாதிரியே இருந்திச்சு உற்று பார்த்தேன் பார்த்தால் எங்கண்ட கடசி துலக்சி ஓடி வந்தாள் தாத்தா இது எங்கண்ட யாழ்பாண பெரிய ஆஸ்பத்திரி கனடாவில இருக்கிற எங்கண்ட டமிழ்ஸ் தான் இதனை கட்டி கொடுத்தார்கள் என்னை தான் இங்கே பொறுப்பாக அனுப்பி இருக்கீனம் என்றாள்.தனது அலுவலகத்தினுள் கூட்டி சென்று அது ஒன்றுமில்லை சும்மா "ஸ்ரெஸ்" ரேஸ்ட் எடுத்து போட்டு எழும்பி ஒரு வோர்க்கிங் போங்கோ என்றாள்.அப்படி தூங்கி கொண்டிருக்கும் போது தான் எனக்கு வெற்றி,வெற்றி என்று கத்த வேண்டும் போல் இருந்தது கத்தி விட்டேன்.இந்த கனவு பலிக்குமோ என்று மனிசியை திரும்பி பார்த்தார்.பலிக்கும் ஆனால் எண்ட பேரபிள்ளைகளை நான் இராணுவத்தில சேர்க்கவிடமாட்டன் அவங்கள் எல்லாரும் டாக்குத்தராக தான் வரவேண்டும்.எண்ட மக்களை சிறிலங்காவிலையே டாக்குத்தராகவும்,இஞ்சினியரா���வும் ஆக்கினான் பேரபிள்ளைகளை டாக்குத்தராக்காமல் விடுவனா வெளிநாட்டில்.அப்ப என்ன என்று எண்ட கனவு பலிக்கும் என்று அப்பாவியாக கேட்டார் கனகர்.அது வேறயாராவதும் இராணுவத்தில சேர்ந்து பலிக்க பண்ணுவீனம் நீங்கள் நித்திரை குளிசையை எடுத்து போட்டு விட்டு கண்ணை இறுக மூடி கொண்டு நித்திரை கொள்ளுங்கோ.சும்மா சின்ன சிறுசுகளுடன் இருந்து கார்டூன் படங்களை பார்க்கிறது பிறகு கனவு கண்டு போட்டு மற்றவங்களை படுக்க விடுறதில்ல என்று புறுபுறுத்தபடியே தூங்கிவிட்டாள்.மு.கு - இது ஒரு கற்பனை கனவுகதை பிழைகள் இருப்பின் சரி செய்து வாசிக்கவும் கனகரின் பேரபிள்ளைகளிள் தினேசிற்கு பதினாலு,குணேசிற்கு பன்னிரண்டு,நரேசிற்கு பத்து,துலக்சிற்கு ஒன்பது வயது.கனகரின் பிள்ளைகள் உலகில் பல பாகங்களிளும் வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment